காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் பிடியை மேலும் விரிவுபடுத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். காசாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 70 சதவீத பகுதியை ராணுவத்தின் நேரடிப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே தற்போதைய இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குக்கரையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய பிரதமர் நெதன்யாகு, "பாலஸ்தீன பகுதியில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான எங்களது ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக காசாவின் 50...
அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதால் சண்டை நிறுத்தம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார். இதற்காக ஈரானுடன் அமெரிக்க குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஒப்படைக்கப்பட வேண்டும் என அதிபர் ட்ரம்ப் எதிர்பார்க்கிறார். ஈரான் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்பட்டு, முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என ஈரான் விரும்புகிறது. இதுகுறித்து...
அமைதி ஒப்பந்தம் செய்யாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
admin - 0
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையில் நேற்று முன்தினம் அந்த நாட்டின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: ஈரானில் அடுத்தடுத்து இரண்டு அரசுகள் மறைந்துவிட்டன. தற்போது 3-வது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
அவர்கள் தற்போதைய சூழலை நன்றாக புரிந்து கொண்டு உள்ளனர். ஈரானில் பணவீக்கம் 250% அதிகரித்து இருக்கிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சீர்குலைந்திருக்கிறது. அவர்களின் கரன்சி மதிப்பிழந்துவிட்டது. அமெரிக்காவின் சிறப்பு தூதர்கள் ஸ்டீவ்...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தரப்பில் இருந்து நம்பகத் தகவல் வெளியாகி உள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தை நீட்டித்து, ஈரான் உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள...
ஈரான் தனது வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை ஒப்படைப்பதற்குக் கைமாறாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் எதுவும் நீக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலிலும், அமெரிக்கா தனது கடுமையான வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டைச் சற்றும் தளர்த்தத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த...
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் சர்வதேச கடல் பகுதியில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரான் கப்பல்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டுப் படைகளைப் பாதுகாக்கும் பொருட்டே இந்த தற்காப்புத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் நாட்டின் புதிய உச்ச...
ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. அப்போது ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலை தொடங்கின. இரு தரப்புக்கும் இடையே சுமார் 40 நாட்கள் அதிதீவிர போர் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது.
முதலில் பாகிஸ்தான் தரப்பில் அமைதிப்...
போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இதில் தெற்கு ஈரானில் அமைந்துள்ள ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் படகுகள் தாக்கப்பட்டன.
இந்த தாக்குதல் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே உள்ள கடல் பகுதியை ஒட்டி நடந்துள்ளது. இதை அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு உறுதி செய்துள்ளது. எங்கள் படை வீரர்களின் தற்காப்புக்காக ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டி முகாமிட்டிருந்த...
உலகளவில் 120 கோடி பேர் மனநல பிரச்சினைகளால் பாதிப்பு: 1990-க்குப் பிறகு இரு மடங்கு அதிகரிப்பு
admin - 0
இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியாகி உள்ள ஆய்வுக் கட்டுரையில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: உலகளவில் மனநலம் தொடர்பான பிரச்சினைகளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 120 கோடியாக உள்ளது.
இது கடந்த 1990-ம் ஆண்டுக்குப் பிறகு 2 மடங்காகும். இதுபோன்ற பாதிப்பு பெண்களிடம்தான் அதிகமாகக் காணப்படுகிறது. அதேநேரத்தில் ஆட்டிசம், கவனக் குறைபாடு, ஆளுமை குறைபாடு போன்றவை ஆண்களிடம் காணப்படுகின்றன.
இதேபோல் கடந்த 1990-ம் ஆண்டுக்குப் பிறகு பதற்றம் 158 சதவீதமும்,...
நிலக்கரி சுரங்க எரிவாயு வெடி விபத்து: சீனாவில் 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 200 பேர் மீட்பு
admin - 0
சீனாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடி விபத்தில் 90 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சீனாவின் வட பகுதியில் உள்ள ஷான்சி மாகாணம் கின்யுவான் கவுண்டியில் உள்ள லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை எரிவாயு வெடி விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணியின் போது நேற்று மாலை வரை...










