Google search engine
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். “ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை. ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்படும். மதவாத சக்திகள் அழிக்கப்படும். அந்த நாட்டில் புதிய புரட்சி மலரும். ஈரானின் 47 ஆண்டு கால அராஜகத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்”...
அமெரிக்காவும் ஈரானும் தற்காலிக போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் மறுத்துவிட்டது. மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர்நிறுத்த திட்டம் குறித்து அமெரிக்காவும், ஈரானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கப் போவதில்லை என்பதை ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள், உடனடி போர்நிறுத்தம் மற்றும் அதனை தொடர்ந்து...
மேற்கு ஆசியாவில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் வசித்து வந்த 1,700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள சூழலில், அண்டை நாடுகளுடனான நில எல்லைகள் வழியாக இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கில் நிலவும் போர் அபாயம் காரணமாக, ஈரானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணியில் இந்தியத் தூதரகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள...
அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போரை நிறுத்த வரைவு திட்​டம் தயாரிக்​கப்​பட்டு உள்​ளது. முதல்​கட்​ட​மாக 45 நாட்​கள் போர் நிறுத்​தத்தை அமல் செய்ய வேண்​டும். ஹார்முஸ் ஜலசந்தியை உடனடி​யாக திறக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​கள் வரைவு திட்​டத்​தில் இடம்​பெற்​றுள்​ளன. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படை மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஈரானில் இது​வரை 2,100-க்​கும் மேற்​பட்​டோர்...
ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால், வளை​குடா நாடு​களில் கதிரியக்க பாதிப்பு ஏற்​படும் என சர்​வ​தேச அணுசக்தி முகமை நிபுணர்​கள் கவலை தெரி​வித்​துள்​னர். ஈரான் மீது அமெரிக்க மற்​றும் இஸ்​ரேல் கூட்​டுப்​படை தொடர் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. ஈரானின் புஷர் அணுமின் நிலை​யம் அருகே கடந்த சனிக்​கிழமை குண்டு வீசப்​பட்​டது. இது அணு மின்​நிலை​யத்​திலிருந்து 350 மீட்​டர் தொலை​வில் விழுந்து வெடித்​தது. இங்கு நடத்​தப்​படும் தொடர் தாக்​குதலால், ஈரான் தலைநகர்...
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி, ஈரானின் கோம் நகரில் சுயநினைவற்ற நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என ஒரு உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி டைம்ஸ் யுகே செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. டைம்ஸ் யுகேவின் செய்தியின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், வளைகுடா நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொண்ட உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மொஜ்தபா காமேனி சுயநினைவற்ற நிலையில் இருப்பதாகவும், அவருக்கு கோம் நகரில் தீவிர...
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின் எப் -35 மற்​றும் எப்- 15 இ ரக போர் விமானங்​களை நேற்று முன் தினம் சுட்டு வீழ்த்​தப்பட்டன. இதில் ஒரு விமானி பத்திரமாக திரும்பிய நிலையில், மற்றொரு விமானி காணாமல் போனார். இந்த சூழலில்...
வருங்காலங்களில் இந்தியா உடனான மோதல் எல்லையோரத்தில் இருக்காது. எங்கள் தாக்குதலை கொல்கத்தாவில் மேற்கொள்வோம் என பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா முன்னெடுத்தது. இதில் அந்த நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. அதற்கு...
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்துள்ளன. உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, அமெரிக்கத் தடைகள்...
அமெரிக்க எஃப்-15 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பிறகு காணாமல் போன விமானியை தாங்கள் மீட்டுவிட்டதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, “தெற்கு இஸ்பஹானில் அமெரிக்கா ஒரு கசப்பான தோல்வியை சந்தித்துள்ளது. அதனை நியாயப்படுத்த ட்ரம்ப் முயல்கிறார்” என ஈரான் பதிலளித்துள்ளது. ஈரானின் பிரஸ் டிவியில், கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி கூறியதாவது: தெற்கு இஸ்ஃபஹானில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஈரானியப்...