Google search engine
ஈ​ரானுக்​கும் அமெரிக்கா​வுக்​கும் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ஈரான் கடல் கண்​ணிவெடிகளைப் பதித்திருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்​நாட்டு செய்தி நிறு​வனங்​கள் வெளி​யிட்​டுள்​ளன. இது அப்​பி​ராந்​தி​யத்​தில் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ஈரானின் புரட்​சிகர காவல்​படை​யுடன் நெருங்​கிய தொடர்புடைய ‘இஸ்​னா’ மற்​றும் ‘தஸ்​னிம்’ ஆகிய செய்தி நிறு​வனங்​கள் கடல் கண்​ணிவெடிகள் தொடர்​பான வரைபடத்தை நேற்று வெளி​யிட்​டன. பாரசீக வளைகுடாவின் குறுகிய நுழைவுப்...
ஈ​ரானும், அமெரிக்கா​வும் போர் நிறுத்​தத்தை அறி​வித்​த​பின், லெபனான் மீது இஸ்​ரேல் நேற்று முன்தினம் 100 ஏவு​கணை​களை ஏவி 254 பேரை கொன்​றது. இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மீது ஈரான் ஏவு​கணை தாக்குதல் நடத்தி ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடியுள்​ளது. இதனால் சண்டை நிறுத்​தத்​தில் குழப்​ப​மான சூழல் நில​வு​கிறது. போர் காரண​மாக மூடப்​பட்ட ஹார்​முஸ் ஜலசந்​தியை சர்வ​தேச கப்​பல் போக்​கு​வரத்​துக்கு திறக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த கெடு கடந்த திங்​கள்...
மாபெரும் தியாகத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், மக்களின் ஒற்றுமை காரணமாகவுமே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த போர், இன்று முதல் இரண்டு வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மேற்கொண்ட சமரச முயற்சியை அடுத்து, இந்த போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும்...
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலில் 89 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் முன்னிலையில் இரண்டு வார காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தம் ஈரானுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா...
ஈரான் மீது 2 வார காலத்​துக்கு தாக்​குதல் நடத்த மாட்​டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். ஈரானும் இந்த தற்​காலிக போர் நிறுத்​தத்​துக்கு ஒப்​புக்​கொண்​டுள்​ளது. இதனால், இரு தரப்​புக்​கும் இடையே இடைக்​கால போர் நிறுத்​தம் ஏற்​பட்​டுள்​ளது. இந்த போர் நிறுத்​தத்​துக்கு இந்​தி​யா, உள்​ளிட்ட பல்​வேறு நாடு​கள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளன. அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்​குதல் நடத்​திவரும் நிலை​யில், தனது கட்​டுப்​பாட்​டில் இருக்​கும் உலகின்...
ஈ​ரான்​-அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகளிடையே நீடித்த போர் இரு வாரங்​களுக்கு நிறுத்தப்​படு​வ​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்​தார். இந்​நிலை​யில் இந்​தி​யத் தூதரகம் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஈரானில் உள்ள இந்தியர்கள் இந்​தி​யத் தூதரகத்தை தொடர்​பு​கொண்​டு, அவர்​கள் பரிந்​துரைக்​கும் வழித்​தடங்​களை பயன்​படுத்தி ஈரானிலிருந்து வெளி​யேற வேண்​டும். இதன்​மூலம் அவர்கள் பாது​காப்​பாக வெளி​யேற முடி​யும். அதே​நேரத்​தில் தூதரக அதி​காரி​களை கலந்து ஆலோசிக்காமல் சர்​வ​தேச தரை வழி எல்​லையை கடந்து செல்​லும் முயற்​சி​யில்...
“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. என்றாலும் அதுவே நடக்கும்” என்று ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், “இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது மீண்டும் ஒருபோதும் உயிர்பெறாது. இது நிகழ வேண்டும் என நான்...
ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சில நிபந்தனைகள் பின்பற்றப்படவுள்ளன. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்குதல் மேற்கொண்டன. அதற்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு...
வரும் காலத்​தில் பாகிஸ்​தானுக்கு எதி​ரான நடவடிக்கை​களில் இந்​தியா ஈடு​பட்​டால் அதற்​குப் பதிலடியாக கொல்​கத்தா மீது தாக்​குதல் நடத்​து​வோம் என்று அந்​நாட்டு பாதுகாப்பு அமைச்​சர் கவாஜா ஆசிப் சில தினங்​களுக்கு முன்பு எச்சரித்​திருந்​தார். இதற்கு பதிலடி தரும் வகை​யில், மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் அளித்த பேட்​டி​யில் கூறும்​போது, “பாகிஸ்​தான் பாது​காப்பு அமைச்​சர் ஆத்​திரமூட்​டும் வகையி​லான இந்த அறிக்​கையை வெளி​யிட்​டிருக்​கக் கூடாது. 55 ஆண்​டு​களுக்கு முன்பு பாகிஸ்​தான் இரண்டு துண்டுகளாகப் பிரிந்​த​போது...
பாகிஸ்தானில் ஸ்மார்ட் லாக்-டவுன் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மார்க்கெட்களை இரவு 8 மணிக்குள்ளும் ஓட்டல்களை இரவு 10 மணிக்குள்ளும் மூடவேண்டும் என்று பாகிஸ்தானில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சர்வதேச நாடுகளில் உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றம் இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தானில் கடந்த...