Home 2024
Yearly Archives: 2024
‘நான் தூங்கிவிட்டேன்’ – ட்ரம்ப் உடனான விவாதம் குறித்து பைடன் விளக்கம்
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-க்கான முதல் நேரடி விவாதத்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விவாதம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பைடன் செயல்பட்ட விதம் விமர்சனத்துக்குள் ஆனது. இந்தச் சூழலில் அதற்கான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார்.
கடந்த வாரம் நடந்த விவாதத்தில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் நேரடி விவாதம் மேற்கொண்டனர். உள்நாட்டு விவகாரம் முதல் உலக நாடுகள் வரையிலான பல்வேறு விஷயங்கள்...
விலங்குகளிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் கருவி
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் உள்ள சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 7- ம் வகுப்பு படித்து வருபவர் கிறிஸ்பின் ஜேடன் (12), வன விலங்குகளிடம் இருந்து பழங்குடியின மக்களை பாதுகாக்க இயந்திரத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவர் பல்வேறு இயந்திரங்களை உருவாக்கி உள்ளனர். அவை அனைத்தும் பயன் அளிக்காமல் போக இறுதியாக வனவிலங்குகள் பட்டாசு சத்தம் மற்றும் தீ உள்ளிட்டவைகளுக்கு பயப்படும் , என்பதை உணர்ந்த சிறுவன் தனது தாய் தந்தையர்...
குமரி – தாரகை கத்பர்ட் எம். எல். ஏ-க்கு வரவேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் கன்னி பேச்சை பேசிவிட்டு குமரி மாவட்டம் வருகை தந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் -க்கு தமிழக -கேரளா எல்லையான களியக்காவிளையில் காங்கிரசார் செண்டை , சிங்காரி மேளங்கள் முழங்க ரோஜா பூ மாலை அணிவித்து உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தாரகை கத்பர்ட் கூறியதாவது:கள்ளக்குறிச்சி சம்பவம் நடக்க கூடாத துயரமான சம்பவம் காங்கிரஸ் , கூட்டணி கட்சிகள் மற்றும் முதல்வர் உட்பட அனைவரும் துயரமான சம்பவமாக...
குமரி கடலோர பகுதியில் 256 மின்மாற்றிகள் சிறப்பு பராமரிப்பு
கன்னியாகுமரி மின்பகிர்மான வட்டத்திற்கு கீழ் மொத்தம் 46 மின்விநியோக பிரிவு அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் மின்மாற்றிகள் வருகிறது. மின்மாற்றிகளை பராமரிக்க தமிழக அரசு மற்றும் தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக தேசியநெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள மின்மாற்றிகள் சிறப்பு பராமரிப்பு கடந்த 19ம் தேதி நடந்தது. இதில் மொத்தம் 848 மின்மாற்றிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2வது கட்டமாக கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை சாலைகளில் அமைந்துள்ள 256 மின் மாற்றிகளில் சிறப்பு பராமரிப்பு பணி...
குமரி -பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்த எஸ். பி
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். இதில் தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சுப்பையா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன், குளச்சல் உட்கோட்டஉதவி காவல் கண்காணிப்பாளர் திரு. கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம் நாகர்கோவில் உட்கோட்டஉதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி. யாங்சென்...
திருவட்டாறு அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திருவட்டார் ஆற்றூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் மகன் ஜெனிஸ் (26) கொத்தனார். ஜெனிஷ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெனிஷுக்கு ஏற்கனவே மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. வருமானம் இல்லாததால் ஜெனிஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஜினி கடந்த 30 ஆம் தேதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் மதியம் ஜினி மீண்டும் கணவர் ஜெனிஷ் ...
வெற்றிக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு
வெற்றிக் கோப்பையுடன் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தங்கும் ஐடிசி மவுரியா ஹோட்டல் வரை வழிநெடுகிலும் திரண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் இந்திய அணியினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கின்றனர். பின்னர் மதியம் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, மும்பை நரிமண் பாயின்ட்டில் இருந்து வான்கடே மைதானம் வரை சுமார்...
ஆஸ்திரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது துருக்கி | Euro Cup 2024
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் 2-1 என்றகோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது துருக்கி அணி.
ஜெர்மனியின் லைப்சிக் மைதானத்தில் நேற்று நடைபெற்றநாக்-அவுட் சுற்றின் கடைசி ஆட்டத்தில் துருக்கி - ஆஸ்திரியாஅணிகள் மோதின. முதல் நிமிடத்திலேயே துருக்கி கோல் அடித்து அசத்தியது. கார்னரில் இருந்து அர்டா குலர் அடித்த பந்தை அப்துல்கரிம் பர்தாக்கி துள்ளியவாறு தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரை கடந்து கோல் கம்பத்துக்கு நெருக்கமாக நின்ற ஆஸ்திரியாவின் கிறிஸ்டோப்...
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இன்று தாயகம் திரும்புகிறது: பிரதமருடன் காலை 11 மணிக்கு சந்திப்பு
மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த சனிக்கிழமை போட்டி முடிவடைந்த நிலையில் பார்படாஸ் நகரில் வீசிய புயல் காரணமாக இந்திய அணி தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. புயலால் பார்படாஸ் விமானநிலையம் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் புயல் கரையை கடந்த நிலையில் செவ்வாய் கிழமை இரவு பார்படாஸ் விமானநிலையம் இயங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத்...
மார்னஸ் லபுஷேன் சதம்: 593 ரன்களை சமன் செய்து கவுண்டி அணி வரலாறு!
செல்டன்ஹாமில் நேற்று முடிவடைந்த கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் குளஸ்டர்ஷயர் அணியும் கிளாமர்கன் அணியும் போட்டியை வரலாற்று ‘டை’ செய்தது. 593 ரன்கள் வெற்றி இலக்கை சேஸ் செய்து கிளாமர்கன் அணி 592 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி போட்டி வரலாற்று டை ஆனது.
குளோஸ்டர்ஷயர் அணி 179 மற்றும் 610/8 டிக்ளேர் செய்ய கிளாமர்கன் 197 மற்றும் 592 ரன்கள். கிளாமர்கன் கேப்டன் சாம் நார்த்ஈஸ்ட் சேசிங்கின் போது 187 ரன்களை விளாச, ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் 119 ரன்களை எடுத்தார். இறுதி...














