நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் நேற்று அரசு பேருந்து ஒன்று மின்கம்பத்தில் மோதியதில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதியில் முறையான பேரிகார்டுகள் இல்லாததும், சென்டர்மீடியன் கற்களும் விபத்துக்களுக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தினந்தோறும் நிகழும் விபத்துகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.















