தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, நாளை முதல் 2 நாட்களுக்கு சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மாவட்ட வாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார். சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகள் உள்ளன. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 13 இடங்களில் அதிமுகவும், தலா ஓர் இடத்தில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.
இதன் வேட்பாளர்களை ஆதரித்து பழனிசாமி...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இன்று மாலை சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று இரவு புதுச்சேரி பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட தமிழக முதல்வர் திருவெண்காட்டில் உள்ள உறவினர் இல்லத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து இன்று காலை சீர்காழி தென்பாதி...
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? – ஸ்டாலின் கண்டனம்
admin - 0
“பாஜக எம்எல்ஏவைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா?” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பாஜக எம்எல்ஏவை தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா?
அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதல்வர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட...
சென்னை மாவட்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தொகுதி தி.நகர் எனப்படும் தியாகராய நகர் தொகுதி. சென்னை மாநகரின் இதயப் பகுதியாகவும் முக்கிய வணிக மையமாகவும் திகழ்கிறது தி.நகர்.
கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், அசோக் நகர், கே.கே.நகர், எம்ஜிஆர் நகர், வட பழனி ஆகிய முக்கிய பகுதிகளை இத்தொகுதி உள்ளடக்கி உள்ளது. முதன்மை வணிக மையமாகவும் அதோடு மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்பு பகுதியாகவும் திகழ்கிறது தி.நகர்.
பிரதானமான கடைகள், ரங்கநாதன் தெரு,...
தமிழக தேர்தல் களத்தில் புதிதாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம், பிரச்சாரத்தில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததாலும், வலுவற்ற கீழ்மட்ட கட்டமைப்பாலும் தனித்து விடப்பட்டுள்ளதை தேர்தல் களத்தில் காண முடிகிறது.
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பலர் புதுமுகங்கள். கட்சியே புதிதுதானே என்றாலும், இவர்கள் விஜய் நற்பணி மன்றத்தில் இல்லாத புதியவர்கள்.
பிரச்சாரம் முடிய இன்னும் முழுமையாக 2 வாரங்களே உள்ள நிலையில், பிரதான கட்சிகள் தீவிர...
பெரம்பூரில் விஜய் வெற்றி பெற்றால் தொகுதி மக்கள் பனையூருக்கு தான் செல்ல வேண்டும்: அன்புமணி விமர்சனம்
admin - 0
பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றால், மக்கள் பனையூருக்கு செல்ல வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இடம்பெற்றுள்ள பாமக சார்பில் பெரம்பூர் தொகுதியில் வேட்பாளர் திலகபாமா, அதிமுக சார்பில் ராயபுரம் தொகுதியில் வேட்பாளர் டி.ஜெயக்குமார், துறைமுகம் தொகுதியில் வேட்பாளர் மனோ, ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், எழும்பூர் தொகுதியில் வேட்பாளர் ஆர்.அபிஷேக் மற்றும் திருவிக நகர் தொகுதியில் தமிழ்...
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியை தொழிலாளர்கள் உறுதி செய்ய தொழிற்சங்கங்கள் அறிவுறுத்தல்
admin - 0
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியை தொழிலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன.
இதுகுறித்து எல்பிஎஃப், எச்எம்எஸ், ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசை பாஜக 3-வது முறையாக கைப்பற்றியதற்கு பின்பு, இந்தியாவை தனது ஒற்றைப் பரிமாண இந்துத்துவ சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் இலக்கை நோக்கி வேகமாக நடைபோடுகிறது.
அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்தளித்த மாநிலங்களின் ஒன்றியம் என்ற கூட்டாட்சி முறைமையை...
அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி.பாலமுருகன், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் கையாண்டு வரும் எளிமையான மற்றும் நூதன பிரச்சார முறைகள் அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
வேட்புமனுத் தாக்கலை முடித்த கையோடு களத்தில் இறங்கியுள்ள பாலமுருகன், தினமும் காலை நேரங்களில் தொகுதியிலுள்ள முக்கியப் பூங்காக்களுக்குச் சென்று நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களிடம் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
நேற்று தாங்கல் பூங்கா, புதூர் மீன்...
நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் தனது பதவியை தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் ராஜினாமா செய்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி 45 வது வார்டில் இருந்து மாமன்ற உறுப்பினராக கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சண். ராமநாதன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மாமன்ற உறுப்பினர்களால் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு மேயராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த ஆண்டு 2027 மார்ச் மாதம் வரை இவரது பதவிக்காலம் இருந்த நிலையில்...
பாஜக வேட்பாளர் பட்டியலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று வெளியிடுகிறார்.
அதிமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, 27 தொகுதிகளில் களம் காண்கிறது. அதிமுக ஒதுக்கிய 27 தொகுதிகளில் சிலவற்றை பாஜக மாற்றிக் கோருவது, ஒரே தொகுதிக்கு பல முனைப் போட்டி நிலவுவது மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையைத் தேர்தலில் போட்டியிட வைக்க மேலிடம் அழுத்தம் கொடுப்பது போன்ற காரணங்களால் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு...










