Google search engine
ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ரத்​தன் லக்​ரா. பழங்​குடி இனத்​தைச் சேர்ந்த இவர் அங்​குள்ள ஜார்க்​கண்ட் கிராமீன் வங்​கி​யில் சேமிப்​புக் கணக்கு வைத்திருந்தார். மேலும் அரசிட​மிருந்து வரும் பென்​ஷன் பணமும் அந்த வங்​கிக் கணக்​கிலேயே சேர்ந்து வந்​தது. இந்​நிலை​யில் ரத்​தன் லக்​ரா​வுக்கு உடல்​நலக்​குறைவு ஏற்​பட்​டது. இதனால் சிகிச்சை பெறு​வதற்கு பணம் தேவைப்​பட்ட நிலை​யில் ரத்​தன் லக்​ரா​வின் வங்​கிக் கணக்​கி​லிருந்து பணம் எடுக்க அவரது உறவினர்கள் ஆம்​புலன்​ஸில் அழைத்து வந்​துள்​ளனர்....
லிப்ட் கேட்டு லாரி​யில் ஏறி, டிரைவரிட​மிருந்து ரூ.20 ஆயிரத்தை திருடி​ய போலீஸ் எஸ்​.ஐ. சஸ்​பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உ.பி. மாநிலம் ஹமீர்​பூரை சேர்ந்த சப்​-இன்​ஸ்​பெக்​டர் ஒரு​வர், அண்​மை​யில் லாரி டிரைவர் ஒரு​வரிடம் லிப்ட் கேட்டு ஹமீர்பூருக்குச் சென்​றுள்​ளார். ஹமீர்​பூரில் போலீஸ் எஸ்.ஐ இறங்கிய பின்​னர் லாரியி​லிருந்த தனது பணம் ரூ.20 ஆயிரம் மாய​மானதை டிரைவர் அறிந்​தார். இதனிடையே அந்த எஸ்​.ஐ. தனது வாக​னத்​தில் ஏறிச் சென்​றார். இதையடுத்து போலீஸ் எஸ்​.ஐ. இந்​தப் பணத்​தைத்...
பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அவரது பல திட்டங்களை இந்தோனேசியாவில் செயல்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை அதிபர் மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிய விருந்தளித்தார். பிரதமர் மோடி முன்னிலையில் விருந்து நிகழ்ச்சியில் பேசிய...
கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நிலச்சரிவுக்கு அங்கு நடைபெற்ற சுரங்கப்பாதை பணிகளே காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோழிக்கோடு மற்றும் வயநாட்டை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் வயநாடு சுரங்கப்பாதை சாலை திட்டத்தின் (அனக்கம் பொயில் - கல்லாடி - மேப்பாடி) நுழைவாயில் அருகே,...
கடந்த 2008ம் ஆண்டு அகம​தா​பாத் குண்​டு​வெடிப்பு வழக்​கில் 38 பேரின் மரண தண்​டனையை குஜ​ராத் உயர் நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ளது. கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி குஜ​ராத் மாநிலம், அகமதா​பாத்​தில் ஹட்​கேஷ்வர் உள்​ளிட்ட 21 இடங்​களில் வெடிகுண்​டு​கள் வெடித்​தன. இதில் 56 பேர் கொல்​லப்​பட்​டனர். 246-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்த தாக்​குதலுக்கு ஹர்​கத் உல் ஹிகாத் அல் இஸ்​லாமி என்ற தீவிர​வாத அமைப்பு பொறுப்​பேற்​றது. இந்த வழக்கை அகம​தா​பாத்...
 ஓணம் பண்​டிகையை முன்​னிட்​டு, பயணி​களின் வசதிக்​காக 100-க்​கும் மேற்​பட்ட சிறப்பு ரயில்​கள் விரை​வில் அறிவிக்​கப்​படும் என்​று, ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார். நடப்​பாண்​டுக்​கான 10 நாள் ஓணம் பண்​டிகை கொண்​டாட்​டங்​கள் ஆக.16-ம் தேதி தொடங்​கி, ஆக.26-ம் தேதி வரை திரு​வோணம் திரு​நாளு​டன் நிறைவடைகிறது. இந்த விழா காலம் மற்​றும் அதனைத் தொடர்ந்து நடை​பெறும் சுற்​றுலா நிகழ்​வு​களால் பயணி​களின் எண்​ணிக்கை பெரு​மளவு அதி​கரிக்​கும். எனவே, பயணி​கள் வசதிக்​காக, 100-க்​கும் மேற்​பட்ட...
ராணுவம், கடற்​படை, விமானப்​படை​யில் 50 சதவீதம் முதல் 75 சதவீத அக்னி வீரர்​களை நிரந்தர பணி​யில் இணைத்​துக் கொள்ள திட்​ட​மிடப்​பட்டுள்​ளது. கடந்த 1999-ம் ஆண்டு காஷ்மீரின் கார்​கில் பகு​தி​யில் நடந்த இந்தியா - பாகிஸ்​தான் போரில் 3 ஆண்​டு​களுக்கு குறை​வான அனுபவம் கொண்ட இந்​திய ராணுவ அதி​காரி​கள், வீரர்​கள் மிகச் சிறப்​பாக செயல்​பட்டு வெற்​றியை தேடி தந்​தனர். கார்​கில் போருக்​குப் பிறகு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதி​காரி சுப்​பிரமணி​யம், லெப்​டினென்ட் ஜெனரல்...
ஆக்​ரா​வில் தாஜ்ம​கால் வளாகத்​தில் அகழாய்வு நடத்தக் கோரி தொடர்ந்த வழக்​கில் மத்​திய அரசு மற்​றும் ஏஎஸ்​ஐ-க்கு அலகா​பாத் உயர் நீதி​மன்​றம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. உ.பி.​யின் ஆக்​ரா​வில் உலகின் 7-வது அதிசய​மாக கருதப்​படும் தாஜ்மகால் உள்​ளது. இது முகலாய மன்​னர் ஷாஜஹா​னால் 1563-ல் கட்டி முடிக்​கப்​பட்​டது. இது அங்​கிருந்த ஒரு கோயிலை இடித்​து​விட்டு கட்​டப்​பட்​ட​தாக அவ்​வப்​போது சர்ச்​சைகள் எழுகின்​றன. தற்​போது உ.பி.​யின் பகவான் ஸ்ரீ அக்​ரேஷ்வர் மஹாதேவ் நாக​நாதேஷ்வர் விராஜ்​மான் தேஜோ மகாலயா...
 குஜ​ராத் மாநிலத்​தின் பாவ்​நகர் மாவட்​டம் கராஜியா கிராமத்​துக்​குள் சிங்​கம் ஒன்று நேற்று புகுந்​தது. அது ஒரு பசு மாட்டு கூடாரத்​தின் அருகே பதுங்​கி​யிருந்​தது. அப்​போது பசுக்​களுக்கு தீவனம் போடச் சென்​ற உரிமையாளர் பார்மர் மீது சிங்​கம் பாய்ந்து அவர் தப்ப முடி​யாமல் கால்​களால் அழுத்தி பிடிக்​குள் வைத்​திருந்​தது. அவரது அலறல் சத்​தம் கேட்டு அக்​கம் பக்​கத்​தினர் ஓடி வந்து சிங்​கத்தை விரட்ட முயன்​றனர். ஆனால், அவரின் கை சிங்​கத்​தின் வாயிலும்,...
 உள்​நாட்​டில் 100 நாளில் வடிவ​மைத்து தயாரிக்​கப்​பட்ட ‘உக்கிரம்’ துப்பாக்கி அனைத்து சோதனை​களை​யும் முடித்து மத்​திய ஆயுதப்​படைகளுக்​காக கொள்​முதல் செய்​யப்​பட​வுள்​ளது. தெலங்​கா​னாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறு​வனம் ‘த்​விப்​பா’. ராணுவம் மற்​றும் போலீ​ஸாருக்கு துப்​பாக்​கி​கள் தயாரிப்பதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஹைத​ரா​பாத்​தில் தொடங்​கப்​பட்​டது. இந்​நிறு​வனம் கடந்த 2021-ம் ஆண்டு உரிமம் பெற்று இது​வரை 100-க்​கும் மேற்​பட்ட துப்​பாக்கி ரகங்​களை உருவாக்​கி​யுள்​ளது. இந்​நிறு​வனத்​தில் யு-19 இயந்​திரத் துப்​பாக்​கி, இலகு ரக இயந்​திரத் துப்பாக்கி, யு-45,...