Google search engine
திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் மேற்கு வங்க தலை​வ​ராக இருந்த சந்​திரிமா பட்​டாச்​சார்​யா, நேற்று தனது பதவியை ராஜி​னாமா செய்து எதிரணி​யுடன் சேர்ந்​தார். இது மம்தா பானர்​ஜிக்கு மேலும் ஒரு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மேற்கு வங்க முதல்​வ​ராக மம்தா இருந்த போது அவரது அமைச்​சர​வை​யில் இடம் பெற்​றவர் சந்​திரிமா பட்​டாச்​சார்​யா. மம்தாவுக்கு மிக​வும் நெருக்​க​மானவ​ராக இருந்​தார். சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தோல்விக்​குப் பின் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி நிலை குலை​யத் தொடங்​கியது. திரிண​மூல்...
மும்பையில் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கும், புனே, சதாரா மலைப்பகுதிகளுக்கும் அதிதீவிர மழைக்கான ‘ரெட்...
ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு முகநூலில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் 11-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். இந்தோனேஷியா பயணத்தை முடித்துக் கொண்டு 8-ம் தேதி அவர் ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பனேசியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பிறகு, 9-ம் தேதி மெல்போர்ன் நகரில் உள்ள மார்வெல் ஸ்டேடியத்தில் இந்தியர்கள்...
உத்தர பிரதேசத்​தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கை சிறப்பு விசா​ரணைக் குழு (எஸ்​ஐடி) விசா​ரித்து வரு​கிறது. இந்த விவ​காரம் வெளிச்​சத்​துக்கு வரு​வதற்கு முன்பு வரை, ​ராம ஜென்​ம பூமி தீர்த்த க் ஷேத்ரா அறக்​கட்​டளை​யின் வங்​கிக் கணக்கு​களில் தின​மும் சராசரி​யாக ரூ.16 லட்​சம் முதல் ரூ.18 லட்சம் வரை டெபாசிட் செய்​யப்​பட்​டுள்​ளது. ஆனால், திருட்டு விவ​காரம் வெளிச்​சத்​துக்கு வந்த பிறகு, இந்​தத் தொகை தின​மும் ரூ.24 லட்​சம் முதல்...
பாலியல் வன்கொடுமை, சிறார் பாலியல் வீடியோ தொடர்​பான விளம்​பரங்​கள் இன்​ஸ்​டாகி​ராமில் வரு​வது குறித்து ஒரு வாரத்​துக்​குள் விளக்​கம் அளிக்​கும்​படி மெட்டா நிறு​வனத்​துக்கு மத்​திய அரசு நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. பிரபல​மான சமூக ஊடகங்​களான ஃபேஸ்​புக், இன்​ஸ்​டாகி​ராம் மற்​றும் வாட்​ஸ்​அப் ஆகிய​வற்றை அமெரிக்​கா​வின் கலி​போர்​னி​யா​வில் இருந்து செயல்​படும் மெட்டா நிறு​வனம் நிர்​வகிக்​கிறது. வாட்​ஸ்​அப்​பில் அறி​முகம் செய்​யப்​பட​வுள்ள ‘யூசர்​நேம்’ அம்​சம் குறித்து விளக்​கம் அளிக்க மெட்டா நிறு​வனத்​துக்கு மத்​திய அரசு சமீபத்​தில் ஒரு நோட்​டீஸ்...
அயோத்தி ராமர் கோயில் நன்கொடைகளில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது என்று காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.  இந்த விவகாரத்தில் உத்தபிரதேச அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை என்பதால், உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்...
இந்திய - ஜப்பான் உறவு உண்மையில் மிகவும் சிறப்பானது என்றும், அது இரு நாடுகளுக்கு இடையே வெற்றிகரமான பொருளாதார இணைப்பைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டில் மட்டும் ரூ.95,245 கோடி ஜப்பானிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு...
ஜார்க்​கண்​டில் மேலும் 9 பேருக்கு மூளையை தாக்​கும் மலேரியா பாதிப்பு கண்​டறியப்​பட்​டுள்​ள​தாக அதி​காரி ஒரு​வர் கூறி​னார். ஜார்க்​கண்​டின் கிழக்கு சிங்​பும் மாவட்​டத்​தில் உள்ள போட்கா பகு​தி​யில் கொசுக்​களால் ஏற்​படும் ‘செரிப்​ரல் மலேரி​யா' (மூளையை தாக்​கும் மலேரி​யா) பரவி வரு​கிறது. கடந்த வாரம் இந்த நோய் பாதிப்பு முதன்​முதலில் கண்​டறியப்​பட்​ட​தில் இருந்​து, இது​வரை 4 குழந்​தைகள் உயி​ரிழந்​துள்​ளனர். இது தொடர்​பாக அதி​காரி ஒரு​வர் நேற்று கூறுகை​யில் “போட்கா பகு​தி​யில் மேலும் 9 பேருக்கு...
ஹரி​யானா மாநிலம் கார்​கோ​டா​வில் ரூ.35,000 கோடி முதலீட்​டில் புதிய கார் தொழிற்​சாலையை பிரதமர் மோடி​யும், ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சி​யும் நேற்று தொடங்கி வைத்​தனர். பாது​காப்பு, வர்த்​தகம் தொடர்​பாக இரு நாடுகள் இடையே பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​களும் கையெழுத்​தாகின. இந்​தியா - ஜப்​பான் வரு​டாந்​திர மாநாடு டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்க ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்சி 3 நாள் அரசு​முறைப் பயண​மாக நேற்று டெல்​லிக்கு வந்​தார். குடியரசுத்...
 நாட்டின் தலைநகரான டெல்லியில் ரசாயனம், உயிரியல், கதிர்வீச்சு, அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டு அவசர நிலை ஏற்பட்டாலும், தயார் நிலையில் அரசு உடனடியாக செயல்பட பாதாளத்தில் (நிலத்துக்கு அடியில்) கட்டுப்பாட்டு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சிபிஆர்என் (கெமிக்கல், பயாலஜிக்கல், ரோடியோலாஜிக்கல் மற்றும் நியூக்ளியர்) கட்டுப்பாட்டு மையம் என பெயர். இதை டெல்லியில் உள்ள தீயணைப்புத்துறை தலைமை அலுவலகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர்...