Google search engine
அயோத்தி ராமர் கோயில் நன்கொடைகளில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது என்று காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.  இந்த விவகாரத்தில் உத்தபிரதேச அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை என்பதால், உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்...
இந்திய - ஜப்பான் உறவு உண்மையில் மிகவும் சிறப்பானது என்றும், அது இரு நாடுகளுக்கு இடையே வெற்றிகரமான பொருளாதார இணைப்பைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டில் மட்டும் ரூ.95,245 கோடி ஜப்பானிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு...
ஜார்க்​கண்​டில் மேலும் 9 பேருக்கு மூளையை தாக்​கும் மலேரியா பாதிப்பு கண்​டறியப்​பட்​டுள்​ள​தாக அதி​காரி ஒரு​வர் கூறி​னார். ஜார்க்​கண்​டின் கிழக்கு சிங்​பும் மாவட்​டத்​தில் உள்ள போட்கா பகு​தி​யில் கொசுக்​களால் ஏற்​படும் ‘செரிப்​ரல் மலேரி​யா' (மூளையை தாக்​கும் மலேரி​யா) பரவி வரு​கிறது. கடந்த வாரம் இந்த நோய் பாதிப்பு முதன்​முதலில் கண்​டறியப்​பட்​ட​தில் இருந்​து, இது​வரை 4 குழந்​தைகள் உயி​ரிழந்​துள்​ளனர். இது தொடர்​பாக அதி​காரி ஒரு​வர் நேற்று கூறுகை​யில் “போட்கா பகு​தி​யில் மேலும் 9 பேருக்கு...
ஹரி​யானா மாநிலம் கார்​கோ​டா​வில் ரூ.35,000 கோடி முதலீட்​டில் புதிய கார் தொழிற்​சாலையை பிரதமர் மோடி​யும், ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சி​யும் நேற்று தொடங்கி வைத்​தனர். பாது​காப்பு, வர்த்​தகம் தொடர்​பாக இரு நாடுகள் இடையே பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​களும் கையெழுத்​தாகின. இந்​தியா - ஜப்​பான் வரு​டாந்​திர மாநாடு டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்க ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்சி 3 நாள் அரசு​முறைப் பயண​மாக நேற்று டெல்​லிக்கு வந்​தார். குடியரசுத்...
 நாட்டின் தலைநகரான டெல்லியில் ரசாயனம், உயிரியல், கதிர்வீச்சு, அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டு அவசர நிலை ஏற்பட்டாலும், தயார் நிலையில் அரசு உடனடியாக செயல்பட பாதாளத்தில் (நிலத்துக்கு அடியில்) கட்டுப்பாட்டு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சிபிஆர்என் (கெமிக்கல், பயாலஜிக்கல், ரோடியோலாஜிக்கல் மற்றும் நியூக்ளியர்) கட்டுப்பாட்டு மையம் என பெயர். இதை டெல்லியில் உள்ள தீயணைப்புத்துறை தலைமை அலுவலகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர்...
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதவித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், கிரண் ரிஜிஜு ஆகியோர் இரண்டாவது நாளாக இன்றும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், முதல்வர் பெமா காண்டுவுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாகவும் ஆய்வு செய்தனர். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட...
எல் நினோ பாதிப்​பால் இந்​தி​யா​வில் ஜூலை மாதத்தில் வழக்​கத்​தை​விட மழை அளவு குறை​யும் என இந்​திய வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இந்த ஆண்டு உலகம் முழு​வதும் தீவிர ‘எல் நினோ’ ஏற்​படும் என வானிலை ஆய்​வாளர்​கள் எச்​சரித்​துள்​ளனர். இதன்​படி, பசிபிக் பெருங்​கடலில் ‘எல் நினோ' காலநிலை மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாக, இந்​தி​யா​வில் கடந்த ஜூன் மாதத்​தில் 12 ஆண்​டு​களில் இல்​லாத அளவு வறட்சி நில​வியது. இந்த மாதத்​தில்...
ஹரியானாவின் அம்பாலா மாவட்டம், தனியோரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மஞ்சித் சிங். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வயலில் இருக்கும் தனது தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அவருடன் 4 வயது மகன் நிர்வேர் சிங் சென்றுள்ளார். இந்நிலையில் காலை 6.30 மணியளவில் வயலுக்கு அருகில் விளையாடச் சென்ற சிறு வன், அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து அங்கு தேசிய மற்றும் மாநில...
ஆன்லைன் வர்த்தக தளங்களில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது போல், டார்க் வெப் எனப்படும் சட்டவிரோத இணையதளங்களில் உடல் உறப்புகள் விற்பனைக்கு என விளம்பரம் செய்யப்படுகிறது. இந்த சட்டவிரோத இணை யதளங் களுக்குள் கூகுள் குரோம் போன்ற சாதாரண பிர வுசர்கள் மூலம் செல்ல முடியாது. இவற்றிற்கு 'டோர்' (Tor) பிரவுசர் போன்ற சிறப்பு மென் பொருள்கள் தேவைப்படுகின் றன. இதன் மூலமாக ரகசிய இணையதளங்களுக்குள் சென்றால் அங்கு மனித உறப்புகள்...
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத் தைத்தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தனர் என்று மஹுவா மொய்த்ரா குற்றச் சாட்டு தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத் தது. இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 60-க்கும் மேற்பட்டோர் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சட்டப்பேரவையில் தனி...