Google search engine
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள தர்காவில் ராமநவமி அன்று காவி கொடி ஏற்றியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டியதாக அப்பகுதி காவல் நிலைய துணை ஆய்வாளர், இரண்டு காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் எல்லையிலுள்ள சிக்கந்தராவில் பஹரியா பகுதியில் சையத் சாலார் மசூத் காஜியின் தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் இந்த தர்காவுக்கு இந்துக்களும் வந்து வணங்கிச் செல்வது...
ராஜஸ்தானில் ஆல்வார் புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக தலித் சமூகத்தை சேர்ந்த டிக்கா ராம் ஜுல்லி உள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆல்வார் நகரில் கோயில் குடமுழுக்கு விழா ஒன்றில் பங்கேற்றார். இதனால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி, பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அகுஜா, அக்கோயில் வளாகத்தில் கங்கை நீரை தெளித்து பூஜைகள் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கியான்தேவ்...
ஏராளமான மக்களின் கனவுகளை நிஜமாக்கியது முத்ரா திட்டம் என்று திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கிலும், தொழில் செய்ய விரும்புவோர், கடின உடல் உழைப்பை பணியாக கொண்ட நபர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பு மக்களை தொழில் முனைவோராக மாற்றி அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த பிரதான் மந்த்ரி...
நான் மீண்டும் வங்கதேசம் வருவேன் என தனது கட்சி நிர்வாகிகளிடம் முன்னாள் பிரதமர் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் பிரதமராக பதவி வகித்த அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு (77) எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின்...
ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயில் வரும்போது செல்போனில் ரீல்ஸ் எடுத்தவர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் ஹசன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சவுராசியா. இவர் செல்போனில் ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் குஸும்பி ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் சென்ற இவர் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு ரயில் வரும்போது ரீல்ஸ் எடுத்துள்ளார். ஆபத்தான முறையில் அவர் தண்டவாளத்தில் படுத்திருந்தார். சிறிது பிசகினாலும் அவர்...
பிரிட்​​டனை சேர்ந்​த சுற்​றுச்​​சூழல் அமைப்​​பான எம்​​பர், சுற்​றுச்​​சூழலுக்​கு மாசு இல்​லாத எரி சக்​தி உற்​பத்​தி குறித்​து ஆண்​​டு​தோறும்​ ஆய்​வு நடத்​தி விரி​வான அறிக்​​கையை வெளி​யிட்​டு வரு​கிறது. இதன்​படி எம்​​பர் அமைப்​​பின் ஆய்​​வறிக்​கை அண்​​மை​யில் வெளி​யிடப்​​பட்​​டது. அதில் கூறி​யிருப்​​ப​தாவது: உலகம்​ முழு​வதும்​ 215 நாடு​களின் மின் உற்​பத்​தி குறித்​து விரி​வான ஆய்​வு நடத்​​தப்​​பட்​​டது. இதன்​படி கடந்​த ஆண்​டு சர்​வ​தேச அளவி​லான மின் உற்​பத்​​தி​யில் 41 சதவீத மின்​சா​ரம்​ அணு சக்​தி மற்​றும்​...
குஜராத்தில் விதை ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அடிக்கல் நாட்டினார். குஜராத்தின் காந்திநகர் கலோல் பகுதியில் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவன (இஃப்கோ) தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த நிறுவன வளாகத்தில் விதை ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இங்கு விதை ஆராய்ச்சி மையத்துக்கான அடிக்கல்லை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா...
மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலத்தில் பங்கேற்ற இந்துக்களுக்கு தாகத்தை தணிக்க முஸ்லிம்கள் குளிர்பானம் வழங்கியது மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக அமைந்தது. நாடு முழுவதும் நேற்று முன்தினம் ராம நவமி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் இந்துக்கள் கடும் வெயிலிலும் ஊர்வலமாக சென்றனர். அந்த வகையில் கிதர்பூரிலிருந்து பில்கானா வரை ஊர்வலமாக சென்றவர்களுக்கு அப்பகுதியில் இருந்த முஸ்லிம்கள் மாம்பழ ஜூஸ், சர்பத், குடிநீர் உள்ளிட்டவற்றை...
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் நேற்று கூறியதாவது: ஜெர்​மனி சர்​வா​தி​காரி ஹிட்​லருக்​கு, ஸ்ட்​ரோமங்​டேலுங் என்ற படை இருந்​தது. இது ஹிட்​லரின் ரகசிய படை​யாக செயல்​பட்​டது. ஹிட்​லர் காலத்​தில் நடந்த சம்​பவங்​கள் தற்​போது உ.பி.யில் நடை​பெற்று வரு​கின்​றன. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் கோரக்​பூர் சென்​று​விட்டு லக்னோ திரும்​பும்​போதெல்லாம் கொலை நடை​பெறுகிறது. இதன் பின்​னணி​யில் கோரக்​பூரை சேர்ந்த ரகசிய படை இருக்​கிறது. இது பாஜக​வின் ரகசிய படை ஆகும். கர்​னிசேனா போன்ற...
ஆந்திராவில் சாலை விபத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி உயிரிழந்தார். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கல்யாணதுர்கம் பகுதியை சேர்ந்தவர் ரமா (50). ஐஏஎஸ் அதிகாரியான இவர் திருப்பதி அடுத்துள்ள அன்னமைய்யா மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஹந்திரி-நீவா குடிநீர் திட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக பீலேருவில் தங்கி உள்ளார். ராயசோட்டி மாவட்ட இணை ஆட்சியராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் ரமா, நேற்று மனுநீதி நாள் என்பதால் பொதுமக்களிடம் இருந்து...