Google search engine
ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே அணுசக்தி நீர்மூழ்கிகளுக்காக புதிய கடற்படைத் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கடற்படைத் தளம் அடுத்த ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகம் செயல்படுகிறது. தற்போது விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில் ஒரே நேரத்தில் 50 போர்க்கப்பல்களை நிறுத்தி வைக்க முடியும். வரும் 2037-ம் ஆண்டுக்குள் புதிதாக 25 போர்க்கப்பல்கள் கிழக்கு பிராந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. இதை கருத்தில் கொண்டு...
பணமோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 7,200 வங்கி கணக்குகளைஜம்மு-காஷ்மீர் காவல் துறை கண்டுபிடித்து முடக்கியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ நகர் காவல் துறை கண்காணிப்பாளர் இம்தியாஸ் ஹுசைன் கூறியதாவது: வாடிக்கையாளர்களிடம் கமிஷன் தருவதாக கூறி அவர்களின் வங்கி கணக்குகளை பணமோசடிக்கு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்று மோசடியாளர்கள் பயன்படுத்தும் வங்கி கணக்குகள் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சோதனை நடத்தப்பட்டது. இதில், 7,200 வங்கி கணக்குகள் சைபர் குற்றங்கள் மற்றும் பண மோசடிக்கு...
இந்​தி​யா​வில் விண்​வெளி துறை​யில் ஈடுபட முதல் நிறு​வன​மாக ஹைத​ரா​பாத்தை தலை​மை​யிட​மாகக் கொண்டு ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறு​வனம் தொடங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், விண்​வெளி​யில் ஏவக் கூடிய ராக்​கெட் ஒன்றை ஸ்கைரூட் நிறு​வனம் உரு​வாக்கி வரு​கிறது. இந்த ராக்​கெட்​டுக்கு இந்​திய விண்​வெளித் துறை​யின் தந்தை என்று போற்​றப்​படும் விக்​ரம் சாரா​பாய் நினை​வாக, விக்​ரம் -1 என்று பெயரிடப்​பட்​டுள்​ளது. இந்த விண்​வெளி ராக்​கெட் இன்​ஜின் 3 நிலைகளை கொண்​டது. முதல் 2 நிலைகளின் சோதனை வெற்​றிகர​மாக...
ஆந்​திர மாநில தலைநகருக்​காக மத்​திய அரசு நேற்று ரூ.4,285 கோடி நிதி வழங்கி உள்​ளது. ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி இரண்​டாக பிரிக்​கப்​பட்டு தெலங்​கானா மாநிலம் உரு​வானது. அப்​போது ஹைத​ரா​பாத் தெலங்​கா​னா​வின் தலைநக​ராக இருக்​கும் என்​றும், புதிய தலைநகரை உரு​வாக்​கும் வரை அல்​லது 10 ஆண்​டுகளுக்கு ஆந்​தி​ரா​வின் தலைநக​ராக​வும் ஹைத​ரா​பாத் இருக்​கும் என்​றும் மாநில பிரிவினை மசோதா​வில் கூறப்​பட்​டிருந்​தது. இருந்​தா​லும், மாநிலம் பிரிந்த...
உத்தரபிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சம்பல் நகரில் புதிய புறக்காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. கலவரக்காரர்கள் வீசிய செங்கற்களை கொண்டு இது கட்டப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் பழமையான ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இந்த மசூதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த நவம்பர் 24-ம் தேதி அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது அவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியதில் 5 பேர் உயிரிழந்தனர். வன்முறையாளர்கள் கல்வீசி...
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக ஜேஇஇ தேர்வை தவறவிட்டுவிட்டதாக 30 மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பெண்டுர்தி ஏஐ டிஜிட்டல் ஜேஇ அட்வான்ஸ் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 30 மாணவர்கள் நேற்று (ஏப்.07) காலை என்ஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக விசாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கான்வாய்...
மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமனத்துக்கு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு பணி நியமனங்கள் நடைபெற்றன. இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாகவும், தலா ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள், அலுவலர்கள் உட்பட 25,753 பேரின் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் வேலை...
தேவாலய நில விவகாரத்தை எழுப்பிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருக்கு கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க தேவாலயங்கள், அரசு சாரா நிலங்களை அதிகளவில் வைத்துள்ளன என ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆர்கனைஸர் இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டி மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘ வக்பு...
வக்பு திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதையடுத்து, வக்பு திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. வக்பு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையின குழு நீண்ட ஆய்வுக்குப் பிறகு தனது பரிந்துரையை வழங்கியது. இதன் அடிப்படையில் வக்பு திருத்த மசோதா...
ஓமனுக்கு அருகே மீன்பிடி படகில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட பாகிஸ்தான் மீனவர் ஒருவருக்கு இந்திய கடற்படை ஓடோடிச் சென்று அவரச மருத்துவ உதவியை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஓமன் கடற்கரைக்கு கிழக்கே சுமார் 350 கடல் மைல் தொலைவில் ஈரானிய படகு ஒன்று பாதிப்பில் உள்ளதாக தகவல் கிடைத்தது. படகின் குழுவினர் இயந்திரத்தில் வேலை செய்தபோது ஒருவருக்கு விரல்களில் பலத்த காயம்...