வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில் வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
தலைநகர் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சிறுபான்மையின மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன். வக்பு...
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் நவ்கார் மகாமந்திரத்தை உச்சரித்த பிரதமர் மோடி
admin - 0
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நவ்கார் மகாமந்திரத்தை பிரதமர் மோடி உள்ளிட்டோர் உச்சரித்தனர். இந்தியா உட்பட 108 நாடுகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சமண மதத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரரின் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ‘நவ்கார் மகாமந்த்ரா திவஸ்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலையில் தொடங்கி வைத்தார். ஜெயின் இண்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (JITO) சார்பில்...
அயோத்தி ராமர் கோயிலில் மே 23-ல் ராம் தர்பார் திறக்கப்படுகிறது. இதனை ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்கான பணிகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. கடந்த வருடம் ஜனவரி 22-ல் ராமர் கோயில் பிரதமர் நரேந்திர மோடியால் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது.
எனினும் கோயிலின் முதல் தளத்தில் ராம் தர்பார்...
ஆந்திர தலைநகர் அமராவதி - ஹைதராபாத் இடையே பசுமை வழி விரைவுச் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு, நிலுவையில் இருக்கும் அடிப்படை கட்டுமான திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. இதன் அடிப்படையில் ஆந்திர தலைநகர் அமராவதியில் இருந்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்துக்கு பசுமை வழி விரைவுச் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக்...
கர்நாடக மாநிலம் கொப்பலில் மாகாணங்களுக்கு இடையேயான ஏற்றதாழ்வை தீர்ப்பது தொடர்பான கருத்தரங்கம் நேற்று முன் தினம் நடைபெற்றது.
இதில் முதல்வர் சித்தராமையாவின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி பேசியதாவது: கர்நாடகாவில் யார் முதல்வராக இருந்தாலும், எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஊழல் அதிகமாக நடைபெறுகிறது. ஊழலில் எப்போதும் கர்நாடகா முதலிடத்தில் இருக்கிறது.
அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்திருப்பதால் தரமான வளர்ச்சி பணிகள் நடைபெறுவதில்லை. சுதந்திரத்துக்கு முன்பு கட்டிய அரசு கட்டிடங்கள்...
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஹைதராபாத்திலும், திருப்பதியை அடுத்துள்ள சந்திரகிரி மண்டலம் நாராவாரிபல்லி கிராமத்திலும் சொந்த வீடு உள்ளது.
இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, தலைநகர் அமராவதியில் சொந்த வீடு கட்ட முடிவு செய்தார். இதனை தொடர்ந்து, நேற்று வெலகபுடி செயலகம், இ-9 தேசிய நெடுஞ்சாலையில் 1,455 சதுர அடியில் வீடு கட்ட நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அடிக்கல் நாட்டு விழாவில்மனைவி புவனேஸ்வரியுடன் தம்பதி சமேதராக பூமி...
குஜராத்தின் அகமதாபாத் நகரில் நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கார்கே பேசியதாவது: கடந்த 1924-ம் ஆண்டு கர்நாடகாவின் பெலகாவில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை மகாத்மா காந்தி ஏற்றார். இதை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ம் தேதி மிகப்பெரிய விழாவாக கொண்டாடி...
இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியானவுடன், நாடு தற்போது உள்ள நிலையைவிட வலுவாக முன்னேறும்’’ என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா பரஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது வர்த்தக போரை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இறக்குமதிக்கு 26 சதவீதம் வரிவிதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக...
கேரள மாநிலம் கண்ணூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மதரசா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டம், உதயகிரி கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது ரஃபி. மதரஸா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2020 மார்ச் மாதம், கரோனா பெருந்தொற்று ஊரடங்கின்போது 14 வயது 7-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார். பிறகு அந்த மாணவியை அச்சுறுத்தி 2021 டிசம்பர்...
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ள குறைகளை தீர்க்க கடந்த மார்ச் மாதத்தில் மையங்கள் தொடங்கப்பட்டன. அப்போது சில பஞ்சாயத்துகளில் ஊதியத்தில் மோசடி அரங்கேறியதாக சிலர் புகைப்பட ஆதாரங்களை அதிகாரிகளிடம் அளித்தனர். அந்த புகைப்படங்களை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது, ஏரியில் வேலை செய்யும்போது பெண்களை போல சில ஆண்கள்...










