‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்குப் பிறகு சுந்தர்.சி, இயக்குநர் வி.இஸட் துரை மீண்டும் இணையும் படத்தை மொமண்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.ஏ.ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கின்றனர்.
‘மோ’, ‘மாயோன்’, ‘மெட்ராஸ் மேட்னி’, படங்களுக்குப் பிறகு இப்படத்தை இந்நிறுவனம் தயாரிக்கிறது. ‘பகவந்த் கேசரி’, ‘அகண்டா’, ‘அகண்டா 2’ உள்ளிட்ட தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி.ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
“திகில் நிறைந்த பேய் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு...
நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா இப்போது ‘மூன்வாக்’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் இந்தியில், சல்மான் கான், அக் ஷய்குமார் நடித்த சில படங்களை இயக்கினார். தொடர்ந்து அங்கு படங்கள் இயக்கி வந்தார்.
இதனால் தெற்கு மும்பையில் மகாலஷ்மி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு பிளாட்களை கடந்த 2012-ம் ஆண்டு வாங்கியிருந்தார். 33 மற்றும் 34-வது மாடிகளில் இருந்த அந்த வீடுகளை இப்போது அவர் ரூ.14.80 கோடிக்கு...
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடரை மணிகண்டனும் அஜித்குமாரும் இயக்கியுள்ளனர். இதில் இந்தி நடிகர் மிலிந்த் சோமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழுக்கு வந்துள்ளார். இத்தொடர் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது.
இத்தொடரில் நடித்தது பற்றி மிலிந்த் சோமன் கூறியதாவது: நான் முதல் தமிழ்ப்படத்தில் நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது....
இன்று ‘ஜனநாயகன்’ மறுதணிக்கை செய்யப்படவுள்ளது. விரைவில் தணிக்கை சான்றிதழுடன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என விநியோகஸ்தர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இதன் முடிவினை எதிர்நோக்கி தயாரிப்பாளர் மட்டுமன்றி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்த தணிக்கை முடிந்தவுடன், தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த படம் ‘ஜனநாயகன்’. தணிக்கையில் ஏற்பட்ட...
தனது சாதியைக் குறிப்பிட்டு பேசியது குறித்து எழுந்த சர்ச்சைக்கு நடிகர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.
பவன் கல்யாண் நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்த்திபன். இப்படத்தின் விழாவில் பேசும்போது, “நான் ஒரு நாயுடு பையன். நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இது தொடர்பாக பலரும் பார்த்திபனை கடுமையாக சாடினர்....
சசி – விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வந்த படம் ‘நூறு சாமி’. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். மேலும், இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது.
‘பிச்சைக்காரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சசி – விஜய் ஆண்டனி...
’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன் உடன் கவுரவ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை முடித்துவிட்டு ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கவுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரியவுள்ளார்.
தற்போது இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்தப் படத்தில் முருகன்...
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம், ‘அரசன்’. வெற்றிமாறனின் ‘வடசென்னை’ சினிமாடிக் யுனிவர்ஸாக உருவாகும் இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கலைப் புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்றது.
அதில் சிலம்பரசன், ‘மதுரை டைகர்’ என்ற கதாபாத்திரத்தில் கபடி வீரர்களுக்கான உடை அணிந்து நடித்திருந்தார். இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது....
செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
செல்வராகவன் நாயகனாக நடித்துள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. சமீபத்தில் இப்படத்தின் டீஸரை தனுஷ் வெளியிட்டார். இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கவுசல்யா, மைம் கோபி, லிர்த்திகா, குஷி ரவி, சதீஷ் ஒய்.ஜி.மகேந்திரா உள்ளிட்ட...
சென்னையில் ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘அரசன்’.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தாலும், 2-ம் கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்து வந்தது. தற்போது சென்னையில் ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான காட்சிகளை சுமார் 35 நாட்கள் காட்சிப்ப்டுத்த திட்டமிட்டுள்ளது...










