நாகர்கோவில்: பாஜக கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம்!
நாகர்கோவில் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், நகரில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவடையாதது மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாஜக மாமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரை முற்றுகையிட்டு அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தில் சிறிது நேரம் பெரும்...
ஞானதாசபுரம் குடியிருப்பு வாசிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்தின் ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஞானதாசபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரவுடிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அப்பகுதி குடியிருப்புவாசிகள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர்...
நாகர்கோவில் நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜர்
நாகர்கோவிலில் 2018 ஆம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் நடுகாட்டு ராஜாவை அரசு அலுவலகத்தில் சாதி பெயரை சொல்லி திட்டியும் தாக்க முயற்சித்த வழக்கில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் இன்று (ஜூன். 30) நாகர்கோவில் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில்...
குமரியில் இரட்டை கொலை: பரபரப்பு தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே கண்ணாம்பிவிளையில் லிங்கசாமி, சிங்கம் ஆகியோர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவருடன் இருவரும் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் செங்கல்லால் இருவரது தலையிலும் தமிழ்செல்வன் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து...
வேர்க்கிளம்பி: கல்வி உதவி வழங்கிய எம் எல் ஏ
வேர்க்கிளம்பியில் பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்டின் 7-ம் கட்ட கல்வி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. டிரஸ்ட் தலைவர் எஸ். காட்சே தலைமையில் நடந்த இந்த விழாவில், பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. ஆர். செல்லசுவாமி நலத்திட்ட உதவிகளைத் துவக்கி வைத்தார். குறிப்பாக, டிரஸ்டின் இலவச டியூஷன் மையத்தில் பயின்று 10-ம்...
பேச்சிப்பாறை: தந்தை கொலை ; மகன், மருமகளுக்கு சிறை
சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த வழக்கில், பேச்சிப்பாறை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் (81) என்பவரின் மகன் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி பரப்பி उर्फ சுசீலா ஆகிய இருவருக்கும் பத்மநாதபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி நேற்று தலா 7 ஆண்டுகள் கடுங்காவல்...
தேமானூர்: புனித தோமையார் ஆலய விழா துவக்கம்
ஆற்றூர் அருகே தேமானூர் புனித தோமையார் மலங்கரை கத்தோலிக்க ஆலயத்தில் குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் ஜெபமாலை, மாலை ஜெபம், நவநாள் ஜெபம், நேர்ச்சை தட்டு அர்ச்சிப்பு, திருக்கொடி பவனியைத் தொடர்ந்து திருக்கொடி ஏற்றப்பட்டது. அடைக்காகுழி, பனச்சமூடு, அணக்கரை பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி...
மூலச்சல்: அரசு பள்ளியில் டேப்லெட் திருட்டு
தக்கலை அடுத்த மூலச்சலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், விடுமுறை முடிந்து திறக்கப்பட்டபோது தலைமை ஆசிரியர் அறை பூட்டு உடைக்கப்பட்டு 3 டேப்லெட்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் லாரன்ஸ் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....
பத்மநாபபுரம்: அரசு மருத்துமனையில் கலெக்டர் ஆய்வு
தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு தலைமைய மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். உள்நோயாளிகளிடம் மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்களா என கேட்டறிந்தார். மாவட்ட சுகாதார அலுவலர், மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் இதில் பங்கேற்றனர்.
களியக்காவிளை: சாலையோரம் மயங்கி கிடந்த தொழிலாளி சாவு
வன்னியூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான தொழிலாளி ஜெபராஜ், 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தாலும், மது அருந்தும் பழக்கத்தாலும் மனைவியை இழந்த நிலையில், களியக்காவிளை சந்தை அருகே சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை...













