Google search engine

கிள்ளியூர்: தே ஜ கூட்டணி வேட்பாளர் டாக்டர் நிவின் சைமன்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் டாக்டர் நிவின் சைமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜாண் ஜேக்கப்பின் மகன். பாரதிய ஜனதா கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில், மருத்துவரான நிவின் சைமன் போட்டியிடுகிறார்.

வடசேரியில் தளவாய் சுதந்திரத்திற்கு எதிராக போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட உள்ளது. கன்னியாகுமாரி சட்டமன்ற தொகுதி மட்டுமே அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள எம்....

குளச்சல்: ஐஸ் இயந்திரத்தில் கால் சிக்கி தொழிலாளி படுகாயம்

குளச்சல் துறைமுக தெருவில் உள்ள ஐஸ் கம்பெனியில் நேற்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜாமுன் (23) என்ற தொழிலாளி பணியில் இருந்தபோது, அவரது வலது கால் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கியது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் தலைமையிலான வீரர்கள்...

குமரி: வாக்குச்சாவடி பயிற்சி வகுப்பு – கலெக்டர் பங்கேற்பு

விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பயிற்சி முகாம் மார்த்தாண்டம் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றது. இதில் மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான அழகுமீனா, பயிற்சி பெற்ற அலுவலர்களிடம்...

குமரி: பெண்ணுக்கு வெட்டு; நீதிமன்ற உத்தரவுபடி வழக்கு

களியக்காவிளை பகுதியை சேர்ந்த ரோஸ்மேபல் (52) என்பவருக்கும், அவரது கணவரின் தம்பி சுபனேஷ் (57) மற்றும் அவரது மனைவி லலிதா குமாரிக்கும் வீட்டிற்கு மின் இணைப்பு எடுப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ரோஸ்மேபல் வீட்டிற்கு மின் இணைப்பு எடுக்கும்போது, சுபனேஷ் மற்றும் லலிதா குமாரி...

புதுக்கடை: பள்ளி மாணவி மாயம் போலீசார் விசாரணை

அம்சி பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி பெனிஸ்மா, உறவினர் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை யாராவது கடத்திச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும்...

குளச்சல்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகளை நேற்று 2வது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்தார். குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட மணலிக்கரை புனித ஜோசப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். வாக்காளர்களுக்கு...

பத்மநாபபுரம் தொகுதியை பா.ஜ.கவுக்கு தள்ளிவிட்ட இபிஎஸ்

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு திமுகவின் முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதி ஐ.ஜே.கே.வுக்கும், சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம், முத்துசாமியின் ஈரோடு மேற்கு, காந்தியின் ராணிப்பேட்டை தொகுதிகள் த.மா.கா.வுக்கும், அமைச்சர்கள் சுப்பிரமணியனின் சைதாப்பேட்டை, டி.ஆர்.பி.ராஜாவின் மன்னார்குடி தொகுதிகள் அ.ம.மு.க.வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பெரியகருப்பனின்...

குமரி: பறக்கும் படையினர் ரூ. 6 லட்சம் பறிமுதல்

குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலை கிராத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மினி டெம்போவில் இருந்து ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மீன் வாங்குவதற்காக இந்தப் பணம் கொண்டு வரப்பட்டதாக...

கிள்ளியூர்: மாற்றுத்திறனானிகள் தேர்தல் விழிப்புணர்வு

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு பகுதியில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் 3 சக்கர விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வாக்காளர்கள் 'என் வாக்கு விற்பனைக்கு அல்ல', 'ஜனநாயக கடமையாற்றுவோம்', 'அனைவரும் வாக்களிப்போம்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை...