Google search engine
தமிழகத்​தின் தஞ்​சாவூரை பூர்வி​க​மாகக் கொண்ட ஸ்ரீதர் வேம்பு (58), சென்னை ஐஐடி-யில் பயின்று உயர் கல்விக்​காக அமெரிக்​கா​வின் பிரின்​ஸ்​டன் பல்​கலைக்​கழகத்​தில் சேர்ந்​தார். அங்கு கடந்த 1994-ல் பிஎச்டி பட்​டம் பெற்​றார். 1996-ல் கலி​போர்​னி​யா​வில் அட்​வென்ட்​நெட் நிறு​வனத்தை தொடங்​கி​னார். கடந்த 2009-ல் நிறு​வனத்​தின் பெயர் சோஹோ என்று மாற்​றம் செய்​யப்​பட்​டது. கடந்த 1993-ம் ஆண்​டில் பிரமிளா சீனி​வாசனை, ஸ்ரீதர் வேம்பு திரு​மணம் செய்​தார். இத்​தம்​ப​திக்கு ஒரு மகன் உள்​ளார். கடந்த 2019-ல்...
 “ஈரான் போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. அதேநேரத்தில் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறது” என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற வெளிநாட்டுத் தூதர்களின் மாநாட்டில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையில் பேசிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, "ஈரான் இஸ்லாமியக் குடியரசு போரை நாடவில்லை; ஆனால், போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறோம். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் நியாயமானதாகவும்,...
ஈ​ரான் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​னால், அமெரிக்க படைகள், இஸ்​ரேல் மீது தாக்​குதல் நடத்​தப்​படும் என ஈரான் சபாநாயகர் முகமது பகர் காலிபஃப் எச்​சரித்​துள்​ளார். ஈரான் அணு ஆயுத தயாரிப்​பில் ஈடு​பட்​ட​தால், அந்​நாட்​டின் மீது சர்வ​தேச தடைகள் விதிக்​கப்​பட்​டன. இதன் காரண​மாக ஈரானின் பொருளா​தா​ரம் வீழ்ச்​சி​யடைந்​தது. இதனால் ஈரான் மக்​கள் ஆட்சியாளர்​களுக்கு எதி​ராக கடந்த மாதம் 28ம் தேதி போராட்டத்தில் குதித்​தனர். இவர்​கள் மீது ஈரான் பாது​காப்பு படையினர் தாக்குதல்...
பாகிஸ்​தான் ராணுவமும் அமெரிக்க ராணுவ​மும் இணைந்து தீவிர​வாத தடுப்பு பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளன. பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலம் கரியன் மாவட்​டத்​தில் பாபி என்ற இடத்​தில் தேசிய தீவிர​வாத தடுப்பு மையம்​(என்​சிடிசி) செயல்பட்டு வருகிறது. இங்கு அமெரிக்க ராணுவ​மும், பாகிஸ்​தான் ராணுவ​மும் இணைந்து தீவிர​வாத தடுப்பு பயிற்​சியை மேற்​கொள்​கின்​றன. இது குறித்து பாகிஸ்​தான் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பாகிஸ்​தான் ராணுவமும் அமெரிக்க ராணுவ​மும் இணைந்து 13-வது கூட்​டுப் பயிற்​சியை ‘இன்​ஸ்​பைர்ட் கேம்​பிட்​-26’ என்ற பெயரில்...
வெனிசுலா​வில் கச்சா எண்​ணெய் எடுப்​பது குறித்து அமெரிக்க எண்​ணெய் நிறுவன நிர்​வாகி​களு​டன் வெள்ளை மாளி​கை​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்​தினம் ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது அதிபர் ட்ரம்ப் கூறிய​தாவது: மக்​களுக்கு என்​னைப் பிடிக்​கிறதோ, இல்​லை​யோ, நான் மிகப் பெரிய அளவில் நடை​பெற​விருந்த 8 போரை நிறுத்​தினேன். இவற்​றில் சில 36 ஆண்​டு​கள், 32 ஆண்​டு​கள் நடை​பெற்​றவை. இந்​தியா - பாகிஸ்​தான் போரில் 8 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன....
பாகிஸ்​தானின் சிந்து மாகாணத்​தில் உள்ள பதின் பகு​தி​யில் உள்ள ரகோ கோல்ஹி கிராமத்​தில் கைலாஷ் கோலி என்ற இந்து இளைஞர் வசித்து வந்​தார். ஏழை விவ​சா​யி​யான இவர், சர்ஃபரஸ் நிசாமணி என்​பவரது நிலத்தில் குடிசை வீடு கட்​டி​னார். இதற்​காக சர்ஃபரஸ் நிசாமணி, கைலாஷ் கோலியை சுட்​டுக் கொன்​றார். இவர் இப்​பகு​தி​யில் செல்​வாக்​குமிக்க நில உரிமை​யாளர். இந்த சம்​பவத்தை கண்​டித்து கைலாஷ் கோலி குடும்​பத்​தினர் மற்​றும் அங்​குள்ள இந்​துக்​கள் அவரது உடலை சாலையில்...
அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக அதிபர் ட்ரம்ப்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசாததே ஒப்பந்தம் நிறைவேறாததற்குக் காரணம் என்று அமெரிக்க வர்த்த அமைச்சர் ஹோவார்டு லூட்னிக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய ஹோவார்டு லூட்னிக், ‘‘இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் அந்த நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை நிறைவேற்றினோம். இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே, அமெரிக்க - இந்திய ஒப்பந்தம்...
ஐரோப்​பிய நாடான டென்​மார்க்​கிடம் இருந்து கிரீன்​லாந்தை கைப்​பற்ற அமெரிக்கா புதிய வியூ​கத்தை வகுத்​துள்​ளது. ஆர்​டிக் பகு​தி​யில் உலகின் மிகப்​பெரிய கிரீன்​லாந்து தீவு அமைந்​திருக்​கிறது. பிரான்​ஸ், ஜெர்​மனி, பிரிட்​டன், ஸ்பெ​யின், இத்​தாலி ஆகிய ஐரோப்​பிய நாடு​களின் பரப்​பளவுக்கு இணை​யாக கிரீன்​லாந்து பரந்து விரிந்​துள்​ளது. கடந்த 1814-ம் ஆண்டு முதல் இந்த தீவு ஐரோப்​பிய நாடான டென்​மார்க்​கின் கட்​டுப்​பாட்​டின் கீழ் உள்​ளது. ஆர்​டிக் பகு​தி​யில் மிக நீண்​ட​கால​மாக ரஷ்யா ஆதிக்​கம் செலுத்தி வரு​கிறது. அண்​மை​கால​மாக...
ரஷ்​யா​விடம் இருந்து இந்தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வரு​கிறது. வரி விதிப்பு தொடர்​பாக இருநாடு​களின் மூத்த அதி​காரி​கள் பல்​வேறு சுற்று பேச்​சு​வார்த்​தைகளை நடத்​தினர். இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்​சர் ஹோவர்ட் லுட்​னிக் கூறியதாவது: இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தம் இறுதி செய்​யப்​பட்டு விட்​டது. வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக அதிபர் ட்ரம்​பை, பிரதமர் மோடி தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு...
ரஷ்​யா​வும் உக்​ரைனும் 2022 பிப்​ர​வரி முதல் போரிட்டு வரு​கின்​றன. இதில் ஏராளமானோார் உயிரிழந்தனர். இந்​நிலை​யில் உக்​ரைன் மீது ரஷ்யா நேற்று முன்​தினம் இரவு கடும் தாக்​குதல் நடத்​தி​யது. இதுகுறித்து உக்​ரைன் அதி​காரி​கள் நேற்று கூறுகை​யில், “36 ஏவு​கணை​கள், 242 டிரோன்​களை பயன்​படுத்தி இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் கீவ் நகரில் 4 பேர் இறந்​தனர். 22 பேர் காயம் அடைந்​தனர்” என்​றனர். இந்த தாக்​குதலுக்கு உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி கண்​டனம்...