Google search engine
வெனிசுலா, கனடா மற்​றும் கிரீன்​லாந்தை அமெரிக்​கப் பகு​தி​களாகக் காட்டும் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) வரைபடத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளி​யிட்​டுள்​ளார். உலகின் அதிக எண்​ணெய் வளமிக்க நாடான வெனிசுலா மீது தாக்​குதல் நடத்​திய அமெரிக்​கப் படைகள், அந்​நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப் பிடித்து சென்​றது. மேலும், அந்​நாட்டை அமெரிக்கா நிர்​வாகம் செய்​யும் என்​றும் அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். இதைத் தொடர்ந்​து, டென்​மார்க் நாட்​டின் தன்​னாட்​சிப் பகு​தி​யாக விளங்​கும்...
“கிரீன்​லாந்தை விலைக்கு வாங்​கும் எனது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் டென்​மார்க், பிரிட்​டன், பிரான்ஸ் ஆகிய நாடு​களுக்கு கூடு​தலாக 10 சதவீத வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்​துள்​ளார். டென்​மார்க் நாட்​டின் தன்​னாட்சி பெற்ற பிராந்​தி​ய​மாக கிரீன்லாந்து உள்​ளது. இந்​நிலை​யில், ஆர்க்​டிக் பகு​தி​யில் அச்சுறுத்தலாக உள்ள சீனா, ரஷ்​யா​விடம் இருந்து அமெரிக்​காவைப் பாது​காக்க, எங்களுக்கு கிரீன்​லாந்து வேண்​டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​னார். மேலும், கிரீன்​லாந்​தில்...
தெற்கு ஸ்பெயினில் உள்ள அடாமுஸ் நகரத்துக்கு அருகே நேற்று (ஞாயிறு) மாலை இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர், சுமார் 100 பேர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கு ஸ்பெயினில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 21 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இது நாட்டுக்கு ஆழ்ந்த வேதனை நிறைந்த இரவு...
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மீட்புக் குழுக்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 8 உடல்களை மீட்டெடுத்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் 60-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று கராச்சி மேயர் முர்தசா வஹாப் தெரிவித்துள்ளார். கராச்சியில் கடந்த சனிக்கிழமை ( ஜன.17) இரவு குல் பிளாசா என்ற மொத்த மற்றும் சில்லறை விற்பனை வணிக...
ஐ.​நா. சபைக்கு மாற்​றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்​வ​தேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்​ளார். இந்த புதிய அமைப்​பில் ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்தி உறுப்​பின​ராக சேரலாம் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்​துள்​ளார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் அமைப்​புக்​கும் இடையே போர் நடை​பெற்​றது. அமெரிக்க அதிபர்...
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த சம்பவங்கள் பலவும் மதம் சாராதவை என்றும், அதேநேரத்தில் மதம் சார்ந்த வன்முறைச் சம்பவங்களும் பதிவாகி உள்ளன என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா அரசாங்கம் கவிழ்ந்ததில் இருந்து அந்நாட்டில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய அரசும் இது தொடர்பாக தனது கவலையை வங்கதேச...
வங்​கதேசத்​தில் உள்ள எரி பொருள் நிரப்​பும் மையத்​தில் இந்து இளைஞர் ஒரு​வர் கார் ஏற்றி படு​கொலை செய்​யப்​பட்​டார். இது இனரீ​தி​யான தாக்​குதலா என போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். வங்​கதேசத்​தின் கோலண்டா மோர் என்ற பகு​தி​யில் கரிம் என்ற பெயரில் எரிபொருள் நிரப்​பும் மையம் உள்​ளது. இங்கு நேற்று முன்​தினம் காலை நான்கரை மணிக்கு கருப்பு நிற எஸ்​யுவி வாக​னம் ஒன்று எரிபொருள் நிரப்ப வந்​தது. எரிபொருள் நிரப்​பிய பின்...
கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கிரின்லாந்து விவகாரத்தில் அமரிக்காவின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்க 10% கூடுதல் வரி விதிக்கப்படும்...
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் மூத்த தலைவர் கொல்லப்பட்டார். இதுகுறித்து அமெரிக்காவின் ராணுவ அமைப்பான சென்ட்காம் (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில், ’அமெரிக்கப் படைகள் ஜனவரி 16 அன்று இந்தத் தாக்குதலை நடத்தியது. இதில், பிலால் ஹசன் அல்-ஜாசிம் என்ற அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார். இவர், டிசம்பரில் அமெரிக்க வீரர்கள்...
சு​விட்​சர்​லாந்​தின் எழில்​மிகு டாவோஸ் நகரில் உலக பொருளா​தார மன்​றத்​தின் (டபிள்​யூஇஎப்) 56-வது ஆண்டு கூட்​டம் இன்று தொடங்கி 23-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதில், இந்​தி​யா​விலிருந்து மத்​திய அமைச்​சர்​கள் அஸ்​வினி வைஷ்ணவ், சிவ​ராஜ் சிங் சவு​கான், பிரகலாத் ஜோஷி, கே.ராம்​மோகன் நாயுடு ஆகிய 4 அமைச்​சர்​கள் கலந்து கொள்​கின்​றனர். மேலும், மகா​ராஷ்டிர முதல்​வர் பட்​னாவிஸ், ஆந்​திர முதல்​வர் சந்திர​பாபு, அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வ சர்​மா, ம.பி.முதல்​வர் மோகன் யாதவ்,...