நாகர்கோவில் அரசு பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ். எல். பி அரசு மேல்நிலைப் பள்ளியில் என்சிசி சார்பில் மாணவர்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அப்போது புற்றுநோயின் அறிகுறிகள், அதைத் தடுப்பது போன்றவை குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். புற்றுநோய் பாதித்தவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அருமனை: 2 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை
அருமனையை அடுத்த செம்மங்காலை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று (7-ம் தேதி) சென்றிருந்தார்.
அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த நான்கு கிராம் தங்க நகைகளை திருடி சென்றனர். இதைத்தொடர்ந்து அருகில் லதா...
மார்த்தாண்டம்: சாலையில் தேங்கிய மழை நீர் – போராட்டம்
மார்த்தாண்டம் அருகே பயணம் என்ற பகுதியிலிருந்து திக்குறிச்சிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை ஆற்றுப்பாலம் பகுதி வரை மிக குறுகலாக உள்ளது. இருபுறமும் ஏராளமான வீடுகளும் உள்ளன. இந்த சாலை வழியாக கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகளால் சேதமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது.
தற்போது பெய்து...
குழித்துறை: தேசிய நெடுஞ்சாலையில் எம்பி ஆய்வு
திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை தற்போது மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே இந்த சாலையை முழுமையாக சீரமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் குதித்துறை தனியார் ஆஸ்பத்திரி மட்டும் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி,...
குழித்துறை: ரயில்வே கேட் கீப்பரை தாக்கி சிக்னல் உடைப்பு
நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில்வே பாதையில் குழித்துறை ரயில் நிலையம் உள்ளது. இதில் குரும்பத்தூர் என்ற இடத்தில் ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு நேற்று திருத்துவபுரத்தை சேர்ந்த பிளசன் (36) என்பவர் கேட் கீப்பராக பணியாற்றினார். அப்போது அந்த வழியாக காரில் வந்த மூன்று பேர் கும்பல்...
கீழ்குளம்: வாய்க்கால் உடைப்பு சீரமைப்பு
கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசகுளம் வாய்க்கால் உடைப்பால் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் தண்ணீர் நிரம்பி விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இந்த பகுதியை பேரூராட்சி சார்பில் நேற்று (7-ம் தேதி) மணல் மூட்டை அடுக்கி அந்த உடைப்பை சரிசெய்தும் பணியினை கீழ்குளம் பேரூராட்சி...
குழித்துறை: பெண்ணை வெட்டியவருக்கு 5 வருடம் சிறை
நித்திரவிளை அருகே ஆலங்கோடு, பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் சந்திர விக்னேஷ் (37) இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் விஜயகுமாரி (54). இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சந்திர விக்னேஷ் விஜயகுமாரியின் வீடு புகுந்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளார்....
நாகர்கோவில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எல்ஐசி அலுவலகம் முன்பு எல்ஐசி முகவர்கள் நேற்று(நவம்பர் 6) ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், "எல்ஐசி பாலிசிதாரர்களுக்கான போனஸ் தொகையை உயர்த்த வேண்டும்; உயர்த்தப்பட்ட எல்ஐசி பாலிசிக்கான பிரீமியத்தை குறைக்க வேண்டும்; குறைந்த காப்பீடு தொகையை இரண்டு லட்சமாக உயர்த்தியதை குறைத்திட வேண்டும்; எல்ஐசி...
குமரியில் சட்டமன்ற பேரவை குழு ஆய்வுக் கூட்டம்
குமரி மாவட்டத்திற்கு தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு அதன் தலைவர் காந்தி ராஜன் எம். எல். ஏ தலைமையில் நேற்று(நவம்பர் 6) வந்தது. குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த குழு பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தது. இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது 8 லட்சம்...
கன்னியாகுமரி: சட்டமன்ற மதிப்பீட்டு குழுவிடம் மனுக்கள் கொடுத்த பொதுமக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் காந்தி ராஜன் எம். எல். ஏ. தலைமையில் அதிகாரிகளுடன் நேற்று (நவம்பர் 6) ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக ஏராளமான பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகள் அடங்கிய மனுக்களை சட்டமன்ற குழு தலைவர்...













