சென்னை ரன்னர்ஸ், ஃபிரெஷ் ஒர்க்ஸ் இன்க் ஆகியவை சார்பில் சென்னை மாரத்தான் போட்டியின் 13-வது சீசன் போட்டி நேற்று சென்னையில் நடத்தப்பட்டது. முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்ஃபெக்ட் 20 மைலர் - (32.186 கி.மீ), அரை மாரத்தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முழு மாரத்தான் போட்டியானது, நேப்பியர் பாலத்திலிருந்து தொடங்கி,...
‘ஒரே வேலை, ஒரே ஊதியம்’ கோட்பாட்டின்படி எய்ம்ஸ்-க்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் கோரி கடிதம்
admin - 0
ஒரே வேலை, ஒரே ஊதியம் கோட்பாட்டின்படி எய்ம்ஸ்-க்கு இணையாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அரசு மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது: நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு உரிய உதவித்தொகை தரப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம்...
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – யார் அந்த சார்? என்பதை திமுக ஏன் மூடி மறைக்கிறது: எல்.முருகன் கேள்வி
admin - 0
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பந்தப்பட்ட அந்த சார் யார்? என்பதை திமுக ஏன் மூடி மறைக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். கார் வியாபாரிகள் சங்கத்தின் 9-ம் ஆண்டு விழா தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத் தில் நடைபெற்ற...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகைதீன் ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகைதீன் ஆகியோர் நேற்று தங்களது பிறந்த நாளை கொண்டாடினர்.
இதையொட்டி சமூக வலைத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: மேற்கு...
காவலர் நலன் – பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்துவது எப்படி? 1,200 பக்க அறிக்கை சமர்ப்பித்த காவல் ஆணையம்
admin - 0
காவலர் நலன், பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக 5-வது காவல் ஆணையம் 1,200 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
காவல்துறையினர், பணியிலும் பணியிடத்திலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சிலர் பணி மற்றும் குடும்பத்தில் சமநிலையை மேற்கொள்ள முடியாமல், சோர்வடைந்து மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொள்ளவும் செய்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க காவல்துறையினருக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, ‘காவலர் - பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை...
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, திமுக அரசை விமர்சித்து முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர் மாற்றப்பட்டு பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு ஜன.3 முதல் 5-ம் தேதி வரை நடைபெற்றது. இதையொட்டி நடந்த பேரணி, பொதுக்கூட்டத்தில்...
உண்மையை பேசிய கூட்டணி கட்சி தலைவரை மிரட்டுவது அரசியல் அறமா? திமுகவுக்கு தமிழக பாஜக கண்டனம்
admin - 0
உண்மையை பேசும் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதுதான் அரசியல் அறமா என திமுகவுக்கு, தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: சிந்து சமவெளி நாகரிகம் குறித்தும், தமிழர் தம் பெருமையை போற்றும் கீழடி நாகரிகம் குறித்தும் பெருமையோடு பேச வேண்டிய கருத்தரங்கில், சம்பந்தமே இல்லாமல் திமுக அரசு குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமையோடு பேசுவது வருத்தம் தருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக் கட்டிலில்...
தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ.,க்கள் தங்களது சட்டைகளில் 'யார் அந்த சார்?' என்ற பேட்ஜை அணிந்து வந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்பட 66 எம் எல் ஏ.,க்களும் யார் அந்த சார்? என்ற பேட்ஜ் பொருந்திய சட்டையை அணிந்து வந்துள்ளனர். பேரவைக்குள் சென்றதும் அவர்கள் அந்த பேட்ஜை அணிந்து கொண்டனர். மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து விவாதிக்க...
7 மணி நேரம் காத்திருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள்: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்தது என்ன?
admin - 0
கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரி உட்பட 4 இடங்களிலும் நடத்தப்பட்டது.
வேலூர்: காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீடு உட்பட 4 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சிஆர்பிஎப் காவலர்கள் பாதுகாப்புடன் அமைச்சர்...
தேசத்தின் நம்பிக்கை மாத இதழ் மற்றும் அப்பா பதிப்பகம் சார்பில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ நூல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு தலைமை வகித்து, நூலை வெளியிட்டார். தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத் தலைவர் பழ.கருப்பையா நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாளை, கேக் வெட்டிக்...










