கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கார்த்தி நடிப்பில் அடுத்த வெளியீடாக ‘சர்தார் 2’ இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்சல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு படமான ‘மேட்’ படத்தின் இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக தகவல்கள்...
சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘லவ் பைட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் நாயகனாக சந்தானம் நடிக்கவுள்ளார். இதனை ‘காஞ்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தின் இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கவுள்ளார்.
இதில் சந்தானத்துடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. முழுக்க காமெடியை மையமாக வைத்து ஜாம்பி படமாக இது உருவாகிறது என்பது...
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’, ‘தாய்க்கிழவி’ உள்பட சில படங்களைத் தயாரித்துள்ளார். அடுத்து, அம்மாமுத்து சூர்யா இயக்கும் படத்தைத் தயாரிக்க இருக்கிறார்.
இதற்கிடையே அவரது தயாரிப்பு நிறுவனப் பெயரைப் பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அது தொடர்பான வாட்ஸப் மெசேஜ்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன்...
தவெக தலைவர் விஜய்க்கு இன்னும் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் கிடைக்காத நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.
தமிழகத்தில் 108 இடங்களில் வென்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (2) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) கட்சியின் ஆதரவு தவெக-வுக்கு கிடைத்துள்ளது. எனினும் இன்னும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்...
தமிழ், தெலுங்கில் முன்னணி இசை அமைப்பாளராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ள இவர், கதாநாயகனாக நடிக்கும் படம் ‘எல்லம்மா’. இதை தெலுங்கில் வரவேற்பை பெற்ற ‘பலகாம்’ என்ற படத்தை இயக்கிய வேணு எல்டண்டாடி இயக்குகிறார்.
ஸ்ரீவெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் தயாரிக்கின்றனர். இதில் பார்சி என்ற கதாபாத்திரத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கிறார். .
இப்படம் தெலுங்கு, தமிழ் உள்பட 5...
நடிகை ராஷ்மிகா மந்தனா, நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ‘மைசா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்கும் இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸ்யமான உலகத்தை மையமாகக் கொண்ட ஆக் ஷன் த்ரில்லர் படமான இதில் ராஷ்மிகாவின் தோற்றம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது....
விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி அடுத்து இயக்கும் படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். ‘ஜவான்’ படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் 2-வது இந்தி படம் இது.
இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. சல்மான் கான், நயன்தாரா தொடர்பான காட்சிகள் படமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக...
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே திமுக – அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல்கள் பரவின. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதனிடையே விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல்...
’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.
ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒரேகட்டமாக இதன் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது....
தயாரிப்பாளர்களின் சிகரம் என்று திரையுலகில் போற்றப்பட்ட ஆர்.பி.சவுத்ரி என தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உயிரிழந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.பி.சவுத்ரி மறைவுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்துள்ள இரங்கல்...










