Google search engine

குமரி: மனைவி, கள்ளக்காதலனை தாக்கிய கணவர் கைது

குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரின் மனைவி லதா, கடந்த 3 வருடங்களாக அஜி என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, ஜஸ்டின் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து லதா மற்றும் அஜியை அடித்து காயப்படுத்தி, கொலை...

விளவங்கோடு: காங். வேட்பாளர் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தம்

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன், தனது வேட்பு மனு தாக்கலின் போது பல்வேறு வழக்கு விவரங்களை மறைத்ததாகக் கூறி, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜோஸ் லால் மற்றும் பாஜக ஓபிசி அணி மாவட்ட பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் புகார்...

குமரி: மாவட்ட எஸ் பி தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

கேரள மாநிலத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் இருந்து படந்தாலுமூடு வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று...

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சோதனை

தேர்தல் நடைபெற இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் 10 பேர் நாகர்கோவிலில் முகாமிட்டு, பயணிகளின் உடமைகளை சோதனை செய்து வருகின்றனர்.

குளச்சல்: கடலோர நிர்வாகிகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் ஆலோசனை

குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட், கன்னியாகுமரி மாவட்ட கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். மீனவ மக்களின் முன்னேற்றம் குறித்து மன்ற நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள்,...

வெள்ளிச்சந்தை: கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறித்த ரவுடி

வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த அஜித் என்ற கூலித்தொழிலாளியை, சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த அனித் என்பவர் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி 470 ரூபாய் பறித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பணம் பறித்த அனித் மீது...

சாலையில் தடுப்பில் மோதி இளைஞர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கொல்லகுடிமுக்கில் வசிக்கும் சீனு (27) என்பவர், நேற்று இருசக்கர வாகனத்தில் குமாரபுரம் பட்டன்விளை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோர தடுப்பில் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் அவரது நெற்றிப் பகுதியில் பலத்த காயமடைந்த அவரை, தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக...

கிள்ளியூர்: தவெக வேட்பாளர் உட்பட 122 பேர் மீது வழக்கு

கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் சபின், நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி பொது மக்களுக்கு இடையூறாக ஊர்வலம் நடத்தியதாக கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் வேட்பாளர் சபின் மற்றும் 10 பெண்கள் உட்பட மொத்தம்...

பொதுமக்களுடன் கஞ்சி குடித்த திமுக வேட்பாளர்

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், புனித வெள்ளியை முன்னிட்டு நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கஞ்சியை அவர்களுடன் வரிசையில் நின்று வாங்கி அருந்தினார். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விளவங்கோட்டில் பாஜக சார்பில் களமிறங்கும் விஜயதரணி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி நாகர்கோவில் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குளச்சலில் டி.சிவக்குமார், பத்மநாபபுரத்தில் பி.ரமேஷ், விளவங்கோட்டில் முன்னாள் எம்எல்ஏ விஜயதரணியும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸில் இருந்தபோது தொடர்ச்சியாக மூன்று...