திருவட்டாறு: நகை கடையில் மோசடி; 2 பேர் கைது
அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஜெயசுதா மற்றும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் மனைவி, குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த சுதர்லின் ஆகியோர் மன்சூர் அலி நடத்தும் நகை அடகு கடையில் நகைகளை அடகு வைத்து ஏமாற்றப்பட்டனர். நகைகளைத் திரும்பக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது....
குமரியில்: சொத்தின் பேரில் பண மோசடி; 6 பேர் மீது வழக்கு
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த மணியன் (72) என்பவர், குமரி மாவட்டம் ஆற்றூரில் உள்ள தனது நிலத்தை குளச்சல் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருக்கு விற்க ஒப்புக்கொண்டார். இதற்காக மணி, மணியனுக்கு ரூ. 1 கோடியே 10 லட்சம் முன் பணமாக வழங்கினார். 19 சென்ட்...
குமரியில்: தோழியுடன் சுற்றிய சிறுவன்; கண்டித்தவர் மீது தாக்குதல்
மணவாளக்குறிச்சி அருகே, தென்னந்தோப்பில் நின்றிருந்த விவசாயி குமரேசனை, 15 வயது சிறுவன் ஒருவன் தனது தோழியுடன் அங்கு வந்தபோது கண்டித்ததால், ஆத்திரமடைந்த சிறுவன் மேலும் இருவரை அழைத்து வந்து விவசாயியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த விவசாயி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மணவளக்குறிச்சி போலீசார் சிறுவன்...
நாகர்கோவிலில் பெட்ரோல் கலப்படம்: வாலிபர்கள் பெட்ரோல் பங்க் முற்றுகை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வேப்பமூடு பயோனியர் பெட்ரோல் பங்கில் பெட்ரோலில் கலப்படம் நடந்ததாகக் கூறி வாலிபர்கள் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டி ஒருவர் பெட்ரோல் அடித்த பிறகு அவரது வாகனம் பழுதானதால், நண்பர்களுடன் பெட்ரோல் பங்கிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பெட்ரோல்...
பெட்ரோல் பங்கில் திடீரென தீப்பிடித்த பைக் – பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று இரவு கலெக்டர் அலுவலகம் சந்திப்புப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்பியுள்ளார். பெட்ரோல் நிரப்பிய பிறகு மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தபோது திடீரென தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினர்...
குலசேகரம்: கோவிலில் குத்துவிளக்கு திருடியவர் கைது
பொன்மனை பகுதியில் உள்ள மரவூர் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து 30 கிலோ எடை கொண்ட 3 வெண்கல குத்துவிளக்குகள் திருடப்பட்டன. இது குறித்து கோவில் செயலாளர் மகேஷ் குலசேகரம் அளித்த புகாரின் பேரில், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த செல்வன் (51) என்பவரை போலீசார் கைது செய்தனர்....
அருமனை: பெண்ணின் இழப்பீடு தொகை மோசடி; 3 பெண்கள் கைது
குமரி மாவட்டம் இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவரின் கணவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி விபத்தில் உயிரிழந்தார். அவரது இழப்பீடு தொகையான ரூ. 1.30 கோடியை, அந்த பெண்ணுடன் பழகி வந்த தோழிகள் சிலர் முதலீடு செய்வதாக கூறி மோசடி செய்துள்ளனர்....
குமரி விசைப்படகில் கர்நாடக கடலில் மோதிய கப்பல்
குமரி மாவட்ட விசைப்படகில் 6 மீனவர்கள் கடந்த 12ஆம் தேதி தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். நேற்று காலை கர்நாடகா மாநில மங்கலாபுரம் கடல் பகுதியில் ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஓசன் ரேடியன்ஸ் என்ற சரக்கு...
கொல்லங்கோடு: மாமியாரை தாக்கிய இளம்பெண் – வழக்குப்பதிவு
நடைக்காவு பகுதியை சேர்ந்த பிரின்ஸ் என்பவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி நிஷா ஜெர்லினை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மே 23 மதியம் நிஷா ஜெர்லின் மற்றும் அவரது உறவினர்கள் பிரின்ஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை கொள்ளையடித்ததாகவும், தட்டி கேட்ட தாயை தாக்கியதாகவும் கொல்லங்கோடு...
நாகர்கோவில்: வருவாய் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
மூன்று மாதங்களாக காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பணியிடங்களை தற்காலிக பதவி உயர்வு மூலம் நிரப்பாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து, வருவாய் ஊழியர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகுதியான நபர்கள் இருந்தும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது வருவாய் துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக...













