குமரி: 3 தொகுதியில் களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இன்று (ஏப்ரல் 3) வெளியாகியுள்ளது. அதன்படி குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார் போட்டியிடுகிறார். அதே போல் விளவங்கோடு தொகுதியில் பிரவீனும் குளச்சல் தொகுதியில் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்டும் போட்டியிடுகின்றனர்.
நெல்லை, குமரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) நெல்லைக்குச் செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து காரில் நெல்லைக்கு வருகிறார். நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். பின்னர் கன்னியாகுமரிக்குச் சென்று அங்கு சனிக்கிழமை காலை பொதுக்கூட்டத்தில்...
குளச்சல்: வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு
குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கடியப்பட்டிணம் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வாக்குச்சாவடிக்குள் சென்று வரவும், மின் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து...
திருவட்டாறு: ஆறாட்டுக்கு எழுந்தருளிய ஆதிகேசவப் பெருமாள்
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித்திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான நேற்று மாலை, ஆதிகேசவப்பெருமாளும் கிருஷ்ணசாமியும் மூவாற்று முகத்தில் ஆறாட்டம் கண்டருளினர். துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதை செய்ய, திருவிதாங்கூர் ராஜ பிரதிநிதி முன் செல்ல, பக்தர்கள் புடைசூழ ஆற்றூர், தோட்டவாரம் வழியாக மூவாற்று முகத்தை அடைந்தனர். இரவு...
குமரி: எல்லை பகுதியில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை
கேரளாவில் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், தமிழக-கேரள எல்லையில் உள்ள பத்மநாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றங்களுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் ஏப்ரல்...
களியக்காவிளை: ரூ 1 லட்சம் பறக்கும் படை பறிமுதல்
குமரி கேரளா எல்லையான களியக்காவிளை செக்-போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் பைக்கில் கொண்டு சென்ற ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பத்மனாபபுரம் கோட்ட ஆய அலுவலர் இசபெல் வசந்தி ராணி மற்றும் அதிகாரிகள்,...
குமரி ஆட்சியர் அலுவலகம் வந்த தேர்தல் பொருட்கள்
தமிழ்நாட்டில் இம்மாதம் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான மெழுகு, எழுது பொருட்கள், மை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வந்துள்ளன. இவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு பண்டல் போடும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர், இவை அந்தந்த தொகுதிகளுக்கு...
மண்டைக்காடு: கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்
மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர் சுரேஷின் மகள், 19 வயது கல்லூரி மாணவி அசினா, கடந்த 28ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து அசினாவின் தாயார் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 1) அசினா தனது காதலன் ஷாஜனுடன்...
திருவட்டாறு: ஆதிகேசவப்பெருமாள் கோவில் பள்ளி வேட்டை
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 9-ம் நாள் திருவிழாவில், நேற்று இரவு கருடவாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசுவாமியும் எந்தவித வாத்தியக்கருவிகளும் இன்றி நிசப்தமாக தளியல் ஜடாதீஷ்வரர் கோவில் பகுதிக்கு வேட்டைக்கு எழுந்தருளும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது. வேட்டை முடிந்து திரும்பும்போது பக்தர்கள் மலர்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள்...
களியக்காவிளை: மது கடத்திய ஆட்டோ ஓட்டுனர் கைது
களியக்காவிளை போலீசார் நேற்று பேருந்து நிலையத்தில் சோதனை நடத்தியபோது, ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26 பாட்டில் மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுபானங்களை பறிமுதல் செய்த போலீசார், கேரளா மாநிலம் பாறசாலை, இஞ்சி விளை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஷமீர் (39) என்பவரைக் கைது செய்தனர். இந்த சம்பவம்...













