மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரான் அரசு மீது பலத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு முயற்சியும் இறுதியில் தோல்வியடையும் என்று அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஷ்கியான் திட்டவட்டமாகக் கூறினார்.
இஸ்லாமாபாத்தில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் முடிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில், கடந்த இரு நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்டு வருகின்றன.
இந்தச் சூழலில்...
ஈரானுக்கு சீனா ராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது சீனா.
கடந்த மார்ச் 28-ம் தேதி, ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கின. ஒரு மாத காலத்துக்குப் பின்னர் 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது.
இந்தச் சூழலில், ஈரானுக்கு சீனா ராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது சீனா....
“நாங்கள் முயன்றோம்; இப்போது முடிவு ஈரான் வசம்” – அமைதி பேச்சுவார்த்தை குறித்து ஜே.டி.வான்ஸ்
admin - 0
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. சுமார் 21 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. இருப்பினும் இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஜே.டி.வான்ஸ், “அமைதிப்...
பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேற்று தொலைபேசியில் 40 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்தும், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது குறித்தும் இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள்...
அமெரிக்காவின் தடையை மீறி சீன எரிவாயு கப்பல் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றது. இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதப்படுகிறது.
ஈரானை ஒட்டி அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியின் இரு முனைகளிலும் சரக்கு, எண்ணெய் கப்பல் போக்குவரத்தை அமெரிக்க கடற்படை முடக்கி உள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவின் தடையை மீறி சீனாவின் ரிச்ஸ்டாரி என்ற எரிவாயு கப்பல் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது. இதில் 2.5 லட்சம் பேரல் மெத்தனால்...
பாகிஸ்தான் மருத்துவமனையில் ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று
admin - 0
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் தவுன்சா நகரில் அரசு வட்டார மருத்துவமனை உள்ளது. இதில் ‘பிபிசி நியூஸ்' நடத்திய ஒரு ரகசிய ஆய்வில் குழந்தைகளுக்கு ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், ஒரே மருத்துவ சாதனத்தை பல நோயாளிகளுக்கு பயன்படுத்துதல் என பல்வேறு பாதுகாப்பற்ற நடைமுறைகளை அம்பலப்படுத்தியுள்ளது. இதுவே எச்ஐவி பரவலுக்கும் வழிவகுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தவுன்சாவில் 8 வயது சிறுவன் எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தான். இறுதி நாட்களில்,...
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று சவுதி அரேபியா வலியுறுத்தி வருகிறது. கடந்த 11-ம் தேதி அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்த சூழலில் ஈரானை ஒட்டி அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியின் இருபுறத்திலும் சரக்கு, எண்ணெய் கப்பல் போக்குவரத்தை அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் முடக்கியது. ஈரான் துறைமுகங்களில் இருந்து வரும் எந்தவொரு கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல முடியாது...
இரண்டு வார கால போர்நிறுத்தம் என்ற அமெரிக்கா - ஈரானின் அறிவிப்பு உலகம் முழுவதும் மிகப் பெரிய நிம்மதியைக் கடத்தியது. அடுத்ததாக அமைதிப் பேச்சுவார்த்தை என்ற அறிவிப்பு, கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
“இனி, ஈரான் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும், வராவிட்டாலும் எனக்குக் கவலையில்லை; நான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப் போகிறேன்,” என்று டொனால்டு ட்ரம்ப் “ஐ டோண்ட் கேர்” மனநிலைக்குள் சென்றுவிட்டார்.
இந்நிலையில், ஈரான்...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பற்றி விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அடுத்த சில மணி நேரங்களில், தன்னை இயேசுவாக சித்தரிக்கும் ஏஐ புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேற்று முன்தினம் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 14-ம் லியோ பற்றி செய்தியாளர்களிடமும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். தான் போப்பின் ரசிகர் அல்ல என்றும் அவர் சிறந்த முறையில்...
ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டோம் என்று அமெரிக்க ராணுவம் அறிவித்து உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பிலும் 2 வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 11-ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 21...










