Google search engine
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிய நிலையில், “எங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களும் தகர்க்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “கடந்த சனிக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தியில் பிரான்ஸ், பிரிட்டனை சேர்ந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. இது போர் நிறுத்த ஒப்பந்த மீறல்...
ஹார்முஸ் ஜலசந்தி​யில் இந்​திய கப்பல்களுக்கு அனு​மதி மறுத்த விவ​காரத்​தில் சுமுக தீர்வு காணப்​படும் என ஈரான் உச்ச தலை​வரின் பிர​தி​நிதி தெரிவித்​துள்​ளார். அமெரிக்​கா போர் நிறுத்த விதிகளை மீறியதாக, ஹார்முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடு​வ​தாக ஈரான் நேற்று முன்​தினம் அறி​வித்​தது. ஜலசந்தி திறக்கப்படும் என்ற அறிவிப்பு அதற்கு முன் வெளியானதால், 2 இந்​தி​ய எண்​ணெய்க் கப்​பல்​கள் பயணத்தைத் தொடர்ந்தன. ஆனால், ஈரானிய புரட்​சிகர காவல்​ படை ஒரு கப்​பல் மீது துப்​பாக்​கிச்...
அமெரிக்கா​வுடன் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளா​விட்​டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலை​யங்​கள், அனைத்து பாலங்​களும் தகர்க்​கப்​படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. இந்த போர் நிறுத்​தம் வரும் 22-ம் தேதி​யுடன் நிறைவடைய உள்ளது. இதனிடையே...
உக்ரைன் ட்ரோன்​கள் மூலம் நடத்​தும் தாக்குதலால் ரஷ்​யா​வுக்கு தின​மும் ரூ.926 கோடி இழப்பு ஏற்படுகிறது. ரஷ்​யா​வுக்கு அதிக வரு​வாய் ஈட்​டித் தரும் தொழில் கச்சா எண்​ணெய் விற்​பனை​யும் முக்​கிய​மானது. அதனால், ரஷ்யா​வின் கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு மையங்​கள், சேமிப்பு கிடங்​கு​கள், துறை​முகங்​கள் மீது உக்​ரைன் ட்ரோன் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. ரஷ்​யா​வில் உள்ள 10 பெரிய கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களில் டுவாப்சி சுத்​தி​கரிப்பு நிலை​யம், ரோஸ்​நெஃப்ட் சுத்​தி​கரிப்பு மையம் ஆகிய​வை​யும்...
ஈ​ரானுக்​கும் அமெரிக்கா​வுக்​கும் இடையே போர் பதற்​றம் நிலவி வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்​பல்​களின் பாது​காப்​பை​யும், தடையற்ற போக்​கு​வரத்​தை​யும் உறுதி செய்ய வேண்​டும் என்று ஈரான் அரசுக்கு முதன்​முறை​யாக சீனா கோரிக்கை விடுத்துள்​ளது. ஈரான் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக் சியுடன் புதன்​கிழமை தொலைபேசி​யில் உரை​யாடிய சீன வெளி​யுறவுத் துறை அமைச்​சர் வாங் யீ கூறி​யுள்​ள​தாவது: தற்​போதைய சூழல் மோதலுக்​கும் அமை​திக்​கும் இடையி​லான ஒரு முக்​கிய​மான கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. அமை​திக்​கான ஒரு...
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பிபி நெதன்யாகு ஆகியோருடன் மிகச்சிறந்த உரையாடல்களை மேற்கொண்டேன். தங்கள் நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்டும் வகையில், இன்று முதல்  10 நாட்கள் போர் நிறுத்தத்தைத் தொடங்க இந்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்....
பாகிஸ்​தானில் தீவிர​வாதி ஹபீஸ்சயீதுடன் இணைந்து லஷ்கர்​-இ-தொய்பா அமைப்பை நிறு​விய​வர் அமீர் ஹம்​சா (66). இந்​தி​யா​வில் மட்​டுமின்றி உலகம் முழு​வதும் பல தீவிர​வாத செயல்களுடன் தொடர்​புடைய​வர். இந்​நிலை​யில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஒரு செய்​திச் சேனல் அலுவல​கத்​துக்கு வெளி​யில் அவர் மீது மர்ம நபர்​கள் துப்பாக்கிச்​ சூடு நடத்​தினர். இதில் படு​கா​யம் அடைந்த அவர் மருத்​து​வ​மனை​யில் அனும​திக்​கப்​பட்​டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. ஓராண்டுக்கும் குறை​வான காலத்​தில் ஹம்சா தாக்குதலுக்கு...
தாய்​லாந்​தில் நடை​பெற்று வரும் தண்ணீர் திருவிழா​வின்​போது சாலை விபத்​துகளில் சிக்கி 3 நாளில் 191 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். தாய்​லாந்து நாட்டு மக்​களின் புத்​தாண்டு சோங்க்ரான் என்று அழைக்​கப்​படு​கிறது. தாய் தேசிய புத்​தாண்டு ஆண்​டு​தோறும் ஏப்​ரல் 9-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. ‘சோங்க்​ரான்' என்ற சொல் இந்​தி​யா​வின் சங்​க​ராந்தி என்ற வார்த்​தை​யுடன் ஒத்​துப்​போகிறது. தெற்​காசி​யா​வின் பல இன மக்​களிடையே புத்​தாண்டு இந்த சமயத்​தில்​தான் கொண்​டாடப்​படு​கிறது. சோங்க்​ரான் மத சடங்​கு​கள், பாரம்​பரிய நடனங்​கள், இசை மற்​றும்...
உக்ரைன் தலைநகர் கீவ் பகு​தி​யில் குடி​யிருப்​பு​கள் மீது ரஷ்யா நேற்று முன்​தினம் 700 ட்ரோன்​கள் மற்​றும் ஏவுகணை​கள் மூலம் பல மணி நேரம் தாக்​குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயி​ரிழந்​தனர், 80 பேர் காயம் அடைந்​தனர். கடந்த சில வாரங்களாக உக்​ரைன் மீது மிகப் பெரியளவி​லான தாக்​குதலை ரஷ்யா நடத்​த​வில்​லை. தற்​போது உக்​ரைன் மீது மீண்​டும் மிகப் பெரியளவி​லான தாக்​குதலை ரஷ்யா நேற்று முன்​தினம் நடத்​தி​யது. உக்​ரைன் தலை​வர்...
 ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் நான் பாகிஸ்தான் செல்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தின. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில் கடந்த 8-ம் தேதி...