கென்யாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
கென்யாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள தாராகா நிதி, எல்கேயோ-மராக்வெட் மற்றும் கியாம்பு ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியான நிலச்சரிவுகள் பல குடும்பங்களை பாதித்துள்ளதுடன், ஏராளமானோர் தங்களது வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், பொதுக் கட்டமைப்பு வசதிகளும் சொத்துக்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள்...
ரஷ்யாவின் 2 எண்ணெய் கப்பல்களை உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்தது என்று அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. கடந்த 4 ஆண்டுகளாக இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், டெலிகிராம் சமூக...
போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போரில் தற்போது தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. யுரேனியம் செறிவூட்டல் பிரச்சினை தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதில் இழுபறி நீடிப்பதால் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலவுகிறது. இதனிடையே...
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் பிற இடங்களை குறிவைத்து ஈரான் 500 ஏவுகணைகள், 2,000 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இவற்றில் பெரும்பாலானவை நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன. சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அமீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தின.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இஸ்ரேல் ஏற்கெனவே அயர்ன் டோம் என்ற வான் பாதுகாப்பு ஆயுதங்களையும், அவற்றை செயல்படுத்த ராணுவத்தினரையும்...
“இனியும் நல்லவராக இருக்க முடியாது” – துப்பாக்கி ஏந்தியபடியான புகைப்படத்துடன் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
admin - 0
ஈரான் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிய ஏந்தியபடியான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள போதிலும், மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணம் ஏதும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும், அணு ஆயுத முயற்சியை கைவிட...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரானுடனான நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஈரானால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
அணுசக்தி அல்லாத ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்திடுவது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. ஈரானின் கடற்படை கடலுக்கடியில் உள்ளது; அவர்களின் விமானப்படை மற்றும் ரேடார்...
இனப்பெருக்க அதிகரிப்பால் 80 நீர்யானைகளை கொல்ல கொலம்பியா முடிவு – ‘வன்தாரா’வுக்கு அனுப்ப ஆனந்த் அம்பானி வேண்டுகோள்
admin - 0
கொலம்பியா அரசு 80 நீர்யானைகளைக் கொல்ல முடிவு செய்துள்ளது. இவற்றை தடுத்து தன்னிடம் ஒப்படைக்க தொழிலதிபர் ஆனந்த் அம்பானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொலம்பியாவின் கோகைன் போதைப் பொருள் கடத்தல் மன்னனாக திகழ்ந்தவர் பாப்லோ எஸ்கோபார். இவருக்கு லத்தீன் அமெரிக்காவில் மிகப் பெரிய தனியார் உயிரியல் பூங்கா அமைக்க வேண்டும் என்பது ஆசை. இதற்காக கடந்த 1980-ம் ஆண்டுகளில் 3 பெண் நீர்யானைகள் மற்றும் ஒரு ஆண் நீர்யானை கொலம்பியாவுக்கு இறக்குமதி...
“கோஹினூர் வைரத்தை திரும்பத் தருமாறு மன்னர் சார்லஸை வலியுறுத்துவேன்” – நியூயார்க் மேயர் மம்தானி
admin - 0
வரலாற்று சிறப்பு மிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் வழங்குமாறு பிரிட்டன் மன்னர் சார்லஸிடம் வலியுறுத்த உள்ளதாக நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கூறியுள்ளார்.
பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு அந்நாட்டு அதிபர் டொனல்டு ட்ரம்ப்பை அவர்கள் சந்தித்தனர். வெள்ளை மாளிகையில் அவர்களுக்கு அமெரிக்கா அரசு முறை வரவேற்பை அளித்தது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நியூயார்க் நகர மேயர் ஜோரான்...
இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் பகுதி என நேபாள ஏர்லைன்ஸின் நெட்வொர்க் மேப்பில் இடம்பெற்றிருந்தது. இதற்கு வரைபடத்தில் துல்லியம் இல்லாததுதான் காரணம் சொல்லி மன்னிப்பு கோரியுள்ளது அந்த விமான நிறுவனம். இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
நேபாள அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம்தான் நேபாள ஏர்லைன்ஸ். புதன்கிழமை அன்று தங்களது விமான நிறுவன சேவை கிடைக்கும் நெட்வொர்க் குறித்த வரைபடம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. அதில் டெல்லி,...
அமெரிக்கா தனது வாக்குறுதியை மீறியதால், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில் இஸ்ரேல் - லெபனான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதால், ஹார் முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஈரான் அறிவித்தது. இதையடுத்து ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை விலக்கி கொள்ளப்படும் என அமெரிக்கா வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்கா...










