இங்கிலாந்து தொடரில் ஷமி, பும்ரா, சிராஜ் முக்கிய பங்கு வகிப்பர்: ரவி சாஸ்திரி கருத்து

0
61

இங்​கிலாந்து அணிக்​கெ​தி​ரான தொடரில் இந்​திய வீரர்​கள் முகமது ஷமி, ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் ஆகியோர் முக்​கிய பங்கு வகிப்பர் என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் தலை​மைப் பயிற்​சி​யாளர் ரவி சாஸ்​திரி தெரி​வித்​தார்.

ஐபிஎல் கிரிக்​கெட் தொடர் முடிவடைந்​ததும், இந்​திய கிரிக்​கெட் அணி​யினர், இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ளனர்.

இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்​ளது. மேலும், 2025 – 2027 உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் தொடரின் ஓர் அங்​க​மாக நடை​பெறும் இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெற இரு அணி​களும் கடுமை​யாக போராடும் என்​ப​தில் சந்​தேகமில்​லை. இந்​திய அணிக்கு இந்த தொடர் முக்கியத்​து​வம் வாய்ந்​த​தாக கருதப்​படு​கிறது. கடந்த சில டெஸ்ட் தொடர்​களில் இந்​திய அணி தொடர் தோல்வி​களைச் சந்​தித்​துள்​ளது. அதிலிருந்து இந்திய அணி மீண்டு வெற்​றிப்​பாதைக்கு திரும்ப வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளது. இந்​நிலை​யில் செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்த ரவி சாஸ்​திரி, இங்​கிலாந்து தொடரில் இந்​திய வீரர்​கள் ஷமி, பும்​ரா, சிராஜ் ஆகியோர் ஒன்​றாக சேர்ந்து சிறப்​பாக செய​லாற்​றும் பட்​சத்​தில் இந்​தி​யா​வுக்கு வெற்றி கிடைக்​கும் என்று தெரி​வித்​துள்​ளார்.

இது குறித்து அவர் கூறிய​தாவது: இங்​கிலாந்​துக்கு எதி​ரான டெஸ்ட் தொடர் இந்​தி​யா​வுக்கு மிக​வும் முக்​கிய​மான​தாக இருக்​கும். இந்​தத் தொடரில் முகமது ஷமி, ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் ஆகியோர் முக்​கிய பங்கு வகிப்​பர்.

பும்ரா விஷ​யத்​தில் இந்​திய கிரிக்​கெட் அணி நிர்​வாகம் மிக கவனத்​துடன் செயல்​பட​வேண்​டும். இந்​தத் தொடரில் அவரை அதிக போட்​டிகளில் பயன்​படுத்​தி​னால் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. அவரை 2 போட்​டிகளிலோ அல்​லது 5 போட்​டிகளிலோ விளை​யாட வைக்க நிர்​வாகம் விரும்​பு​கிறது.

அவர் அப்​படி விளை​யாட வைத்​தால்​தான் அவருடைய உடல் பாதிப்பை சந்​திக்​கும். எனவே, அவருக்கு லேசான காயம் இருந்​தா​லும் ஓய்வு எடுக்கிறேன் என்று வெளிப்​படை​யாக சொல்​வதற்​கான உரிமை ஜஸ்​பிரீத் பும்​ரா​வுக்கு தரப்பட வேண்​டும். சிராஜ், ஷமி, பும்ரா ஆகிய மூவரும் முழுமையாக விளை​யாடி சிறப்​பாக செய​லாற்​றும் பட்​சத்​தில் இந்​திய அணி நிச்​ச​யம் வெற்​றி பெறும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here