பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த 32 வயதான கொத்தனார் நிஷாந்த், மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததை அவரது தாயார் கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.














