கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே கண்ணாம்பிவிளையில் லிங்கசாமி, சிங்கம் ஆகியோர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவருடன் இருவரும் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் செங்கல்லால் இருவரது தலையிலும் தமிழ்செல்வன் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் தமிழ்செல்வனை நேற்று கைது செய்தனர். இரட்டை கொலையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.















