இளம் பெண் பலாத்காரம் கிறிஸ்தவ பாதிரியார் கைது

0
58

திருவனந்தபுரம்: பி ரார்த்தனைக்கு வந்த இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்துவ பாதிரியாரை, போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்தவர் டென்னிஸ் பிரவீன், 42.சில ஆண்டுகளுக்கு முன்னர், கொல்லம் அருகே பரிமணம் என்ற இடத்தில் உள்ள கார்மல் பவன் கிறிஸ்துவ ஆசிரமத்தில் பாதிரியாராக இருந்தார். அப்போது, பிரார்த்தனைக்கு வந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தார்.இதன் பின், திருவனந்தபுரத்தில் உள்ள கிறிஸ்துவ சபைக்கு பாதிரியார் இடமாறுதலாகி சென்றார். அங்கும் அந்த இளம்பெண்ணை வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளார்.இதனிடையே, அந்த பெண் கொல்லம் சவரா போலீசில் புகார் அளித்தார்.அதன்படி, பாதிரியார் டென்னிஸ் பிரவீனை, போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின், கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here