டி20 கிரிக்கெட் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெலை, ராஜஸ்தான் வீரர் தீக்சனா வீழ்த்தியுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 30 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கிளென் மேக்ஸ்வெலை தீக்சனா ஆட்டமிழக்கச் செய்தார். இதுவரை 10 ஆட்டங்களில் தீக்சனாவின் 40 பந்துகளைச் சந்தித்துள்ள கிளென் மேக்ஸ்வெல் 71 ரன்களைக் குவித்துள்ளார். அதே நேரத்தில் அவரது பந்துவீச்சில் 4-வது முறையாக ஆட்டமிழந்துள்ளார் மேக்ஸ்வெல்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்டன் அக்சர், தோனியுடன் இருக்கும் புகைப்படங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அக்சர் படேல் கூறும்போது, “துபாயில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ஆலோசகராக இருந்தார் தோனி.
அப்போது எனது மனநிலை பற்றி அவரிடம் பேசினேன். அந்த உரையாடல்களின் தாக்கத்தைத்தான் இப்போது என்னுடைய செயல்திறனில் பார்க்கிறீர்கள். அதற்குப் பிறகு என்ன சாதிச்சிருக்கேனோ, அதற்கான பெருமை தோனியையே...
ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா காயம் காரணமாக களமிறங்கவில்லை.
பயிற்சியின் போது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் லக்னோவுக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்படவில்லை என மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
ரோஹித் சர்மா, நடப்பு ஐபிஎல் தொடரில் ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறார். அவர்,...
ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மும்பை அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவுக்கு 100-வது போட்டியாக அமைந்தது. இதையொட்டி போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அவருக்கு அணி நிர்வாகம் சார்பில் சிறப்பு ஜெர்சி வழங்கப்பட்டது.
34 வயதான சூர்யகுமார் யாதவ், இதுவரை மொத்தம் 154 ஐபிஎல் போட்டிகளால் விளையாடி உள்ளார். 139 இன்னிங்ஸில் 3765...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமயிலான பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியையும், 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது. சிறந்த பார்மில் உள்ள அந்த அணி ஹாட்ரிக் வெற்றி பெறும்...
நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறினார் மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மா. அது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே விளக்கம் தந்துள்ளார்.
“ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் திலக் வர்மா சிறப்பாக பேட் செய்தார். மூன்றாவது விக்கெட்டை நாங்கள் இழந்ததும் சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். அவர் அடித்த ஆட விரும்பினார். இருப்பினும் முடியவில்லை....
தன்னுடைய முந்தைய அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போது நல்ல வேகத்துடன் தீப்பொறி பறக்க வீசினார். குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
7 ஆண்டுகள் ஆர்சிபி அணிக்காக ஆடி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியமே கதி என்று இருந்த சிராஜ், அந்தப் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக உணர்ச்சிவயப்பட்டுக் காணப்பட்டார். ஆர்சிபி அணி எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமானது என்று சிராஜ்...
நடப்பு ஐபிஎல் சீசனில் புது பாய்ச்சலோடு புறப்பட்டுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அந்த அணி அசத்தியுள்ளது. இதற்கான காரணங்களில் ஒருவராக அறியப்படுகிறார் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.
கடந்த 2020-ம் ஆண்டு சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். கடந்த சீசனில் கொல்கத்தாவை வெற்றி பெற செய்தார். இப்படி இரு வேறு அணிகளை ஐபிஎல் கிரிக்கெட்...
தேசிய சப்-ஜூனியர் வில்வித்தை போட்டியில் தமிழக வீராங்கனை எஸ்.எஸ். மதுநிஷா 2 பதக்கம் வென்றார்.
14-வது தேசிய சப்-ஜூனியர் வில்வித்தைப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 10 வயதான மதுநிஷா, 15 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், 13 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் 2-வது இடம் பிடித்து 2 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினார்.
இந்த ஆண்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.
நடப்பாண்டில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகள் தொடர்பான விவரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று அறிவித்தது.
அதன்படி அக்டோபரில் இந்தியாவுக்கு வரும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் அக். 2-ம் தேதியும், 2-வது போட்டி கொல்கத்தாவில் அக்டோபர்...









