மீஞ்சூர் அருகே வீட்டில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை வெட்டிய கஞ்சா போதை இளைஞர்கள்
admin - 0
மீஞ்சூர் அருகே இரவில் வீட்டில் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டிய 3 பேர் கும்பலில் ஒருவர் பிடிபட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே வல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படிக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, இளைஞர்கள் 3...
வாக்குப்பதிவு, எண்ணிக்கையின்போது தடையற்ற மின் விநியோகம்: அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு
admin - 0
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது தடையற்ற மின் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலை நியாயமாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இரவு நேரங்களில் அரசியல் கட்சியினர் செயற்கையாக மின்தடையை ஏற்படுத்தி, வாக்குக்கு பணம் கொடுக்க முயற்சிப்பார்கள்...
வண்ணாரப்பேட்டையில் வாக்காளர்களுக்கு ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம் செய்ததாக திமுகவைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
வண்ணாரப்பேட்டை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் கிடைத்த நிலையில், போலீஸாரும், பறக்கும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் 2 பேர், அங்குள்ள வீடுகளுக்குள் சென்று வருவது தெரிந்தது. இதையடுத்து போலீஸார், அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள்...
கோடை விடுமுறைக் காலத்தை மாணவர்கள் பயனுள்ளதாக மாற்ற வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாளை (ஏப். 17) முதல் வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட உள்ளன. எனவே இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதன் விவரம்...
காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய காஞ்சிபுரம் மண்டல அளவிலான விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஹரிதாஸ் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த ஐந்தாண்டு காலமாக விவசாயிகளுக்கு...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.52.33 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள், பணம் சிக்கியது.
சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர் வல்லேஸ்வர பாபுஜி உத்தரவின் பேரில், சென்ட்ரல் ஆர்பிஎஃப் காவல் ஆய்வாளர் மதுசூதனரெட்டி மேற்பார்வையில் ஆர்பிஎஃப் போலீஸார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் ஆகியோர் நேற்று மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு விரைவு...
சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக - அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.அரவிந்த் ரமேஷ், சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, திமுக நிர்வாகி ஒருவர் 25 ஆயிரம் சாக்லேட்களால் உருவான சுமார் 15 அடி உயர மாலையை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.
பெரும்பாக்கம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன்.
அதேபோல், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம் என கிராமிய...
தவெக தலைவர் விஜய் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தனி விமானத்தில் கோவை வந்தார். அவரை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விஜய் வருகையையொட்டி, கோவை அவிநாசி சாலையில் இருந்து விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டன. கட்சியினர் மற்றும் ரசிகர்களை விமான நிலையம் பகுதியில் போலீஸார் அனுமதிக்கவில்லை. ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால்...
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் அதிமுக வேட்பாளர் கே.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்பி மக்கள் வாக்களிக்கவில்லை.
அந்த தேர்தலில் மொத்தம் 4.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றது. தற்போது தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு எதிரான அலை வீசுகிறது....
“அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்” – ப.சிதம்பரம்
admin - 0
“அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்,” என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதற்கான தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் அரசியலமைப்பு திருத்தச் சட்ட மசோதா, வரவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்...










