அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை பக்ரீத் திருநாள் அளிக்கட்டும்: தலைவர்கள் வாழ்த்து
admin - 0
பக்ரீத் பண்டிகை, அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை அளிக்கட்டும் என்று ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தி வருமாறு:
ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்: இந்த தியாக திருநாள் பகிர்வு, பரிவு, ஒற்றுமை மற்றும் சமரசம் ஆகிய மனப்பான்மைகளை ஏற்கத் தூண்டி, நமது பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தை ஒன்றிணைத்து வைத்திருக்கும்...
தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத்தாண்டி பொது இடங்களில் மாடுகள் உள்ளிட்ட விலங்குகளை வெட்ட அனுமதிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளரான கோவை மாவட்டம் செல்வபுரத்தைச் சேர்ந்த கே. சூர்ய பிரசாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், `பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்தாண்டு கோவை செல்வபுரத்தில் மாடுகள் வெட்ட தனியாக தகர கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக புகார் அளித்ததால்...
திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை போலீஸார் வன்கொடுமை செய்த வழக்கை வரும் ஜூலைக்குள் விசாரி்த்து முடிக்க வேண்டுமென மகளிர் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருந்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தனது வளர்ப்புத் தாயார் மற்றும் மாமாவுடன் சரக்கு வாகனத்தில் திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த 26 வயது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவண்ணாமலை கிழக்கு...
பயிர்க் கடனை ஏன் முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது? – நபார்டு நிபந்தனை தெரியாமல் தலையைக் கொடுத்த தவெக அரசு
admin - 0
தமிழகத்தில் 14.23 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் விதமாக பயிர்க் கடனில் ரூ. 2,044 கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது தவெக அரசு. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி விஜய் செய்யவில்லையே என விவசாயிகளும் விவசாய சங்கங்களும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றன.
பயிர்க் கடன் தள்ளுபடி என்பது திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் ஓட்டுக்காக விவசாயிகளை வளைக்கும் ஒரு உத்தி. அதேசமயம், இந்த ‘தள்ளுபடி’ விவகாரத்துக்கு நீண்ட நெடிய வரலாறே இருக்கிறது. விவசாயிகளுக்கு கடன் வழங்கும்...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு குழந்தை பிறந்திருக்கும் நிலையில், அவரது இல்லத்துக்கு, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்து வழங்கினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி தம்பதியினருக்கு, முதலாவதாக ஆண் குழந்தை இருக்கும் நிலையில், அவர்களுக்கு இரண்டாவதாக, பெண் குழந்தை கடந்த 22-ம் தேதி பிறந்தது. இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு நாதஸ்வரம், மேள தாளங்கள்...
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ கோரிக்கை மனு
admin - 0
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து நேற்று மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளபடி அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கனவான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தங்களது தலைமையிலான அரசுக்கு...
குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு: பொதுமக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்
admin - 0
‘குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, தாக்குதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் போன்றவை பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன.
அதனால்,...
உரிமையியல் வழக்குகளில் தமிழக அரசுக்காக ஆஜராகி வாதிட ஏதுவாக 17 அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு தரப்பில் உரிமையியல் வழக்குகளில் ஆஜராகி வாதிடும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தற்காலிக அடிப்படையில் 17 பேரை அரசு வழக்கறிஞர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் பரிந்துரையின்பேரில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அரசு...
ஆளும் தவெக தனிப் பெரும்பான்மையை நோக்கி அதிரடியாகக் காய்களை நகர்த்தி வருவதால், அதிமுக எம்எல்ஏ.க்கள் பலர் தவெகவில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை அக்கட்சியால் எட்ட முடியவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்,...
கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தின் மேல்புறம் காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு பட்டாசு தயாரிக்கும் பணி நடந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்தக் கட்டிடம் முற்றிலுமாக இடிந்து...










