நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.1.84 லட்சம் கோடியை உரியவர்களிடம் ஒப்படைக்க முடிவு
admin - 0
குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்கள் பணம், உங்கள் உரிமை' என்ற தலைப் பில் விழிப்புணர்வு பிரச்சா ரத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசி யதாவது நாடு முழுவதும் வங் கிகள், ரிசர்வ வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட்கள், ப்ராவிடென்ட் பண்ட் கணக்குகள் மற்றும் இதர நிறு வனங்களில் ரூ.1.84 லட்சம் கோடி நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல்...
14 கேள்விக்கு சரியாக பதில் அளித்து கோன் பனேகா குரோர்பதியில் ரூ.50 லட்சம் பரிசு பெற்ற விவசாயி
admin - 0
மகாராஷ்டிர மாநிலம் சத் ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத் தில் உள்ள பைத்தான் நகரை சேர்ந்தவர் கைலாஷ் குன் டேவர். தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 50 லட்சம் வென்றுள்ளார்.
இதுகுறித்து கைலாஷ் கூறிய தாவது: கடந்த 2018-ம் ஆண்டு ஹிங் கோலி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கோன் பனேகா குரோர் பதி நிகழ்ச்சியில் பங்கேற்றார்....
இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடியேற்றப் பிரிவு சம்பிரதாய முறைகளை எளி தாகவும், வேகமாகவும் முடிப் பதற்கு வசதியாக இ-அரைவல் கார்டு அறிமுகம் செய்யப்பட் டுள்ளது.
கடந்த 1-ம் தேதி முதல் இது அறிமுகம் செய்யப்பட் டுள்ளதாக மத்திய அரசு தெரி வித்துள்ளது. இந்தியாவுக்குள் எளிதாக நுழைவதற்கு வசதி யாக இந்த அட்டையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சம் சார்பில் அறிமுகம் செய்யப்பட் டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த இ-அரைவல் அட்டை தேவைப்படுபவர்கள் இந்திய...
அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவின் இயக் குநர் சோனாலி கோஷ் கூறியதாவது: காசிரங்கா பூங்காவுக்கு சனிக்கிழமை பெண் யானைக்குட்டி ஒன்று புதிய வரவாக வந்துள்ளது. மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் சந்திர மோகன் படோவரி யோசனைப் படி புதிதாக பிறந்த யானைக்குட்டிக்கு மாயாபின்' என்ற பெயரை சூட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சார பெருமைகளை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் நிகழ்ச்சியில் கலந்து...
பூடானில் கனமழை காரணமாக அமோசு ஆற்றில் நேற்று அதிகாலை திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றங் கரையில் தங்கியிருந்த சிலரை உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டனர். ஆற்றங்கரைக்கு வெகு தூரத்தில் சிக்கியிருந்த 4 ஊழியர்களை மீட்க முடியவில்லை. இதில் 2 பேர் காணாமல் போய்விட்டதாக முதலில் தகவல் பரவியது. மோசமான வானிலை காரணமாக பூடான் அரசால், ஊழியர்களை மீட்க ஹெலிகாப்டரை அனுப்ப முடியவில்லை.
இதையைடுத்து பூடான் ராணுவத்தினர்,...
டெல்லியில் பிரபல சாமியாராக இருந்தவர் சைதன்யானந்தா பாபா என்று அழைக்கப்படும் பார்த்தசாரதி (62). இவர், பல கோடிகளில் நன்கொடைகள் பெற்று டெல்லியில் ஏழை சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான ஆசிரமங்களை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக 17 பெண்கள் டெல்லி போலீஸாரிடம் சமீபத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தலைமறைவான சைதன்யானந்தாவை தீவிர தேடலுக்கு பிறகு உ.பி.யின் ஆக்ராவில் போலீஸார் கைது செய்தனர்.
சைதன்யானந்தாவிடம் இருந்து 3 செல்போன்கள், ஒரு...
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்2023-ம் ஆண்டு திடீரென மாயமானார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், கணவர் வீட்டார் தங்களது பெண்ணை வரதட்சணைக்காக கொலை செய்து மறைத்துவிட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இதனை விசாரித்த நீதிமன்றம் கணவர், மாமியர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி அசோக் குமார் கூறியதாவது: மணமானதற்கு பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து இளம்பெண் காணாமல்...
இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது: வெளிநாட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி விமர்சனம்
admin - 0
ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு உள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், ராகுல் காந்தி பேசும்போது, “இந்தியா உலகத்துக்கு ஏராளமான விஷயங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால்,...
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் சுமார் 6.13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். வரும் 2026-ம் ஆண்டில் 2 சதவீத ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என்று டிசிஎஸ் அண்மையில் தெரிவித்தது. இதன்படி சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்படும். அவர்களின் பணி அனுபவத்தை பொறுத்து 6 மாதங்கள் முதல்...
மத்திய பிரதேசத்தில் 2 வெவ்வேறு இடங்களில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே இங்கோரியா நகரில் இருந்து துர்கா சிலைகளை கரைப்பதற்காக நேற்று டிராக்டரில் எடுத்துச் சென்றுள்ளனர்.
அந்த டிராக்டரில் சிறுவர்களும் பயணித்துள்ளனர். சம்பல் நதியின் மீது உள்ள பாலத்தின் மீது...










