த கேரளா ஸ்டோரி 2 படத்துக்கு 2 வார தடை விதித்து மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023-ல் வெளியான ‘த கேரளா ஸ்டோரி' திரைப்படம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக ‘த கேரளா ஸ்டோரி 2' தயாரிக்கப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தை தடை செய்ய கோரி ஸ்ரீதேவ் நம்பூதிரி உள்ளிட்டோர் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுக்கள்...
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், லக்னோ பல்கலைக் கழகம் செயல்படுகிறது. இதனுள் நசிருதீன் ஹைதர் என்பவரால் 1,800-ம் ஆண்டு கட்டப்பட்டலால் பாராதாரி எனும் கட்டிடம் உள்ளது. இதனை மசூதியாக கருதி பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் இதனுள் தொழுகை நடத்தி வருகின்றனர்.
இக்கட்டிடம் இடியும் நிலையில் இருப்பதாக கூறி கடந்த பிப்ரவரி 23-ல் லக்னோ மாநகராட்சியால் மூடப்பட்டது. அதே பல்கலையில் உள்ள மற்றொரு மசூதியில் தொழுகை நடத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. இதை...
காமன் காஸ் அமைப்பு தாக்கல் செய்த பொது நல மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
காமன் காஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, “தேர்தலின்போது கட்சிகள் பண பலத்தை பயன்படுத்துவது ஜனநாயகத்தை பாதிக்கிறது. தேர்தல் செலவின கட்டுப்பாடுகள் இருந்தாலும் அது வேட்பாளருக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது" என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பொதுநல மனு...
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இஸ்ரேல் சென்றார். முதல் நாளில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது இஸ்ரேல் அரசின் உயரிய விருதான நெசெட் பதக்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இஸ்ரேல் அரசுக்கும் யூத மக்களுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய தனி நபர்களுக்கு நெசெட் பதக்கம் வழங்கப்படுகிறது. இதன்படி இஸ்ரேல், இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நெசெட் வழங்கப்பட்டது.
இது குறித்து அவர்...
பெங்களூரு தெற்கு துணை காவல் ஆணையர் லோகேஷ் ஜகலசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு பீனியாவில் குட்கா வியாபாரிகளிடம் ஜிஎஸ்டி அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதாக புகார் வந்தது.
இதுகுறித்து விசாரித்து ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் அலுவலக தூய்மை பணியாளர்களான நாகராஜ் (35), தாடா பீர் (37) ஆகியோரை கைது செய்தோம். ஜிஎஸ்டி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள வியாபாரிகளை குறிவைத்து அதிகாரி போல பேசி ரூ.5 லட்சம் வாங்கியுள்ளனர்....
சிங்கப்பூர் ரூ.1 லட்சம் கோடி, ஜப்பான் ரூ.11,000 கோடி முதலீடு – உ.பி. முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு பலன்
admin - 0
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தொழில் முதலீடுகளுக்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். உ.பி.யில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடி, ஜப்பான் நிறுவனங்கள் ரூ.11.000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஜப்பானுக்கு தொழில் முதலீடு பெற பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் முதல் நாளில் நேற்று அவர் டோக்கியோவுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு...
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே விபத்துக்குள்ளான ஏர் ஆம்புலன்ஸ் 6,600 மணி நேரம் பறந்த 39 ஆண்டு கால பழைய விமானம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் இருந்து பிப்ரவரி 23ம் தேதி இரவு 7.11 மணி அளவில் நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேருடன் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை...
பிஹாரின் பக்சார் மாவட்டம் முஃபாசில் காவல் எல்லைக்குட்பட்ட சவுசா நகரைச் சேர்ந்த ஆர்த்தி குமாரிக்கும் (18) உ.பி.யின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும் நேற்று முன்தினம் மாலை திருமணம் நடைபெற இருந்தது.
அப்போது மணமேடையில் ஏறிய முகக்கவசம் அணிந்த ஒருநபர் திடீரென ஆர்த்தியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார். காயம் அடைந்த ஆர்த்தி, வாராணசியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆர்த்தியை ஒருதலையாக காதலித்த தீன பந்து என்பவர்...
என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு பாடத்தில் சர்ச்சை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கண்டனம்
admin - 0
என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் திட்டத்தில், ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற பகுதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்துள்ளார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் பாடத்தில், நீதித்துறையில் ஊழல் என்ற பகுதி இடம்பெற்றுள்ளது. ‘நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பில் அந்தப்...
கேரளாவில் அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நவகேரளா குடிமக்கள் திட்டம் தொடங்கப்பட்டது.
இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் 2 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் பிரச்சாரத்தைப் போன்ற ஒரு பெரிய அளவிலான (வீடு வீடாக) ஆய்வுக்கு பொது நிதியையும், அரசு இயந்திரங்களையும் பயன்படுத்த முடியாது என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்தத் தீர்ப்பை...










