Google search engine
ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூரிலுள்ள பாலேஸ்​வரி மாதா தேவி சிலைக்கு பக்​தர்​கள் ரூ.51 லட்​சம் மதிப்​புள்ள கரன்சி நோட்​டு​களால் அலங்​காரம் செய்​து உள்​ளனர். புவானா பகு​தி​யில் பிரசித்தி பெற்ற பாலேஸ்​வரி மாதா கோயில் அமைந்​துள்​ளது. இந்த கோயி​லில் தற்​போது நவராத்​திரி திரு​விழா நடை​பெற்று வரு​கிறது. இதையொட்டி பாலேஸ்​வரி மாதாவுக்கு ரூ.51,51,551 மதிப்​புடைய கரன்சி நோட்​டு​களால் நேற்று முன்​தினம் பக்​தர்​களால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்​டு​களால் இந்த அலங்​காரம்...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் காசா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்​கும் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 21 அம்ச அமைதி திட்​டத்தை அறி​வித்​தார். ‘‘தீ​விர​வாதம் இல்​லாத அமைதி மண்​டல​மாக காசா மாற்​றப்​படும். ஹமாஸ் பிடி​யில்...
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் நடிகை ஊர்வசி ரவுதேலாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். நம் நாட்டில் சூதாட்ட செயலிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சூதாட்ட செயலிகள் ஏராளமான முதலீட்டாளர்களின் கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்ததுடன் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இத்தகைய செயலிகளை மறைமுகமாக ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. இது...
உத்​தரபிரதேசத்​தில் முஸ்​லிம் மதத் தலை​வர் தவு​கீர் ராஸாவுக்​குத் தொடர்​புடைய 8 ஆக்​கிரமிப்பு கட்​டிடங்​களை இடிப்பதற்கு அரசு முடிவு செய்​துள்​ளது. உ.பி.​யில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலை​மை​யில் பாஜக ஆட்சி நடை​பெற்று வருகிறது. கான்​பூர் மாவட்​டத்​தில் உள்ள ராவத்​பூர் என்ற இடத்​தில், கடந்த 4-ம் தேதி மிலாடி நபி பண்​டிகை​யையொட்​டி, ‘ஐ லவ் முகமது' என்ற வாசகம் அச்​சிடப்​பட்ட போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டன. மேலும் இந்த வாசகம் தாங்​கிய பேனர்​களை​யும் அங்கு நடை​பெற்ற...
பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 68.5 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. பிஹாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது. இதையடுத்து, அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சரிபார்த்தனர். இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என 65 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கு...
 அமெரிக்க நாட்டுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதை தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் அவர் தெரிவித்துள்ளார். “ஒரு குழந்தையிடம் இருந்து மிட்டாய்களை திருடுவது போல அமெரிக்க தேசத்தின் திரைப்பட தயாரிப்புத் தொழிலினை மற்ற நாடுகள் களவாடியுள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கலிபோர்னியா தான். ஏனெனில், அங்கு பலவீனமான மற்றும் திறமையற்ற ஆளுநர் ஆட்சி பொறுப்பில்...
உல​கின் மிக உயர​மான பாலம் சீன நாட்​டில் திறக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இது​வரை 2 மணி நேர​மாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்​களாக குறைந்​துள்​ளது. சீனா​வின் குய்சோ மாகாணத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள பாலம் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக திறக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தப் பாலத்​துக்கு ஹுவாஜி​யாங் கிராண்ட் கன்​யான் பாலம் என்று பெயர் வைக்​கப்​பட்​டுள்​ளது. தரை மட்​டத்​திலிருந்து 625 மீட்​டர் உயரத்​தில் இந்​தப் பாலம் அமைந்​துள்​ளது. இரு மலைகளை இணைக்​கும் வித​மாக இந்​தப் பாலம் மிக​வும்...
 உத்தர பிரதேச மாநிலம் கான்​பூரில் நடைபெற்ற மிலாது நபி ஊர்வலத்தில் ‘ஐ லவ் முகமது’ என்ற பதாகை எடுத்து செல்லப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து பரேலியில் வன்முறை ஏற்பட்டது. இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன் ராஸ்வி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பரேலியில் தற்போது அமைதி நிலவுகிறது. அங்கு எந்த தொந்தரவும் இல்லை. பக்தி வெளிப்பாடு தனிப்பட்டதாக இருக்க வேண்டும். தெருக்களில் ஊர்வலமாக...
இந்தியா மற்றும் பூடானுக்கு இடையில் 89 கிலோமீட்டர் தூரத்துக்கு கோக்ரஜார்-கெலெபு (அசாம்) மற்றும் பனார்ஹட்-சம்ட்சே (மேற்கு வங்கம்) ஆகிய இரண்டு புதிய ரயில் இணைப்புகள் ரூ.4,033 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன. மத்திய அமைச்சர் அஸ்வினிவைஷ்ணவ் உடன் செய்தியாளர்களை நேற்று சந்தித்த வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி இதுகுறித்து கூறியதாவது: பனார்ஹட்-சாம்ட்சே மற்றும் கோக்ரஜார்- கெலெபு இடையே எல்லை தாண்டிய இரண்டு ரயில் வழித்தட இணைப்புகளை நிறுவ இந்தியா...
காஷ்மீரின் பஹல்​காமின் பைசரன் பள்​ளத்​தாக்​கில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி பாகிஸ்​தான் ஆதரவு தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்து பாது​காப்பு காரணங்​களுக்​காக 50 சுற்​றுலா தலங்​களை ஜம்மு காஷ்மீர் நிர்​வாகம் மூடியது. இந்​நிலை​யில் விரி​வான பாது​காப்பு மறுஆய்​வுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் 12 சுற்​றுலாத் தலங்​கள் நேற்று மீண்​டும் திறக்​கப்​பட்​டன. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலை​மை​யில் ஸ்ரீநகரில் கடந்த வெள்​ளிக்​கிழமை...