நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்ப்பதில் ஏற்படும் தாமதம் குறித்த ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் பர்திவாலா மற்றும் விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தெரியவந்த விவரம் வருமாறு: நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 5.34 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் உயர் நீதிமன்றங்களில் 63.8 லட்சம் வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் 88,251 வழக்குகளும்...
இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, I Am Giorgia: My Roots, My Principles என்ற தலைப்பில், தனது வாழ்க்கை வரலாறை நூலாக எழுதி உள்ளார். இந்நூலை ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியாவில் வெளியிட உள்ளது. இந்த நூலில் பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:பிரதமர் மெலோனியின் வாழ்க்கை ஒருபோதும் அரசியல் பற்றியதாகவோ அதிகாரத்தைப் பற்றியதாகவோ இருந்ததில்லை. இது அவருடைய தைரியம், உறுதிப்பாடு, பொது சேவை, இத்தாலியர்களின்...
பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு எதிராக போராட்டம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2 பேர் உயிரிழப்பு
admin - 0
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) அவாமி செயற்குழு அமைப்பின்(ஏஏசி) சார்பாக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் போராட்டத்தை தொடர்ந்து காலவரையற்ற போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய பாகிஸ்தான் அரசு முயன்று வருகிறது. பாகிஸ்தான்...
தர்மஸ்தலா வழக்கில் திருப்பம்: பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக புகார்தாரர் சின்னையா வாக்குமூலம்
admin - 0
தர்மஸ்தலா வழக்கில் கைது செய்யப்பட்ட புகார்தாரர் சின்னையா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டம், தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதா கோயில் உள்ளது. அங்கு கடந்த 1995 முதல் 2014 வரை தூய்மைப் பணியாளராக வேலை செய்த சின்னையா கடந்த ஜூனில் தர்மஸ்தாலா காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார்.
அதில், “மஞ்சுநாதா கோயிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்....
வக்பு சட்டப் போராட்டம் குறித்து விஎச்பி கவலை: கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அரசிடம் வேண்டுகோள்
admin - 0
மத்திய அரசின் புதிய வக்பு சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) கவலை தெரிவித்துள்ளது.
வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மீது பல அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் வக்பு சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் அக்டோபர்...
கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ‘எக்ஸ்’ தளம் முறையீடு செய்ய முடிவு – பின்னணி என்ன?
admin - 0
இந்திய சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டுமென எக்ஸ் சமூக வலைதளத்துக்கு கடந்த 24-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இந்நிலையில், இந்த உத்தரவு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது எக்ஸ் தரப்பு. அதன் பின்னணி குறித்து பார்ப்போம்.
இந்திய தகவல் தொழில்நுட்ப விதியின் சட்டப் பிரிவு 79-ன் கீழ் எக்ஸ் நிறுவனத்துக்கு சில ட்வீட்களை நீக்குவது மற்றும் சிலரின் கணக்குகளை முடக்குவது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து...
பிஹாரில் 160+ இடங்களில் வெற்றி பெறுவோம் என அமித் ஷா கூறுவது வாக்கு திருட்டின் மீதான நம்பிக்கை: காங்.
admin - 0
வாக்கு திருட்டு மீதான நம்பிக்கை காரணமாகவே, பிஹாரில் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அமித் ஷா தெரிவித்துள்ளார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பிஹாரின் அராரியா நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “பிஹாரில் கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக...
சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை
admin - 0
வரும் பண்டிகை காலத்தில் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். 126-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தீபாவளிக்கு பிறகு சத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மத்திய அரசின் முயற்சியால் கொல்கத்தாவின் துர்கா பூஜை யுனெஸ்கோவின் கலாச்சார பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதேபோல சத் பூஜையையும் யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அக்டோபர்...
கைதி மரண சம்பவத்தில் தலைமறைவான மத்திய பிரதேச போலீஸார் இருவர் பற்றி தகவல் அளிப்போருக்கு, ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் தேவா பர்தி.
இவரையும், இவரது மாமா கங்காராம் என்பவரையும் திருட்டு வழக்கு ஒன்றில் மத்திய பிரதேச போலீஸார் கைது செய்து குணா பகுதியில் உள்ள மியானா காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் தேவா பர்தி இறந்தார். இவர் மாரடைப்பால்...
மைசூரு தசரா விழாவையொட்டி அரண்மனை, சாமுண்டி மலை, கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ளிட்டவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் மைசூரு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கி.பி. 1610ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்வடி கிருஷ்ணராஜ உடையார் மன்னர், போரில் வென்றதை முன்னிட்டு விஜயதசமி காலத்தில் தசரா விழாவை 10 நாட்கள் கொண்டாட தொடங்கினார். 1947-ல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கர்நாடக அரசின் சார்பில் தசரா விழா ஆண்டுதோறும்...







