Google search engine
வெறிநோய் மற்​றும் குணப்​படுத்த முடி​யாத நோயால் பாதிக்​கப்​பட்ட ஆபத்​தான நாய்​களை கருணை கொலை செய்​ய​லாம் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. டெல்​லி​யில் தெரு நாய்​கள் கடித்து சிறு​வர்​களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்​பட்​டது குறித்து வெளி​யான செய்​தி​யின் அடிப்படையில் உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​குப் பதிவு செய்​துள்​ளது. இந்த வழக்கை நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்தீப் மேத்​தா, அன்​ஜாரியா ஆகியோர் அடங்​கிய அமர்வு விசாரித்து நேற்று முக்​கிய உத்​தர​வு​களைப் பிறப்​பித்​தது. அதில்...
பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்​டம்​பர் மாதம் டெல்லி வரு​கிறார். பிரிக்ஸ் கூட்​டமைப்​பில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து, எத்​தி​யோப்​பி​யா, ஈரான், ஐக்​கிய அரபு அமீரகம், இந்​தோ​னேசியா ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த அமைப்​பின் 2026-ம் ஆண்​டுக்​கான தலை​மையை இந்​தியா ஏற்​றிருக்​கிறது. இதன்​படி கடந்த 14-ம் தேதி பிரிக்ஸ் வெளி​யுறவு அமைச்​சர்​களின் மாநாடு டெல்​லி​யில் நடை​பெற்​றது. இதில்...
உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ல் யோகி ஆதித்​ய​நாத் முதல்​வ​ராகப் பதவி ஏற்​றது முதல் சட்​டம் ஒழுங்​கில், 'பூஜ்ஜிய சகிப்​புத் ​தன்​மை' கொள்​கையை கடைபிடித்து வரு​கிறார். இதனால், யோகி அரசு கடந்த 9 ஆண்​டு​களில் மாநிலத்​தி​லுள்ள குற்​றங்​கள் மற்​றும் குற்​ற​வாளி​கள் மீது அதிரடி நடவடிக்​கைகளை மேற்​கொண்​டுள்​ளது. இக்​கால​கட்​டத்​தில், 34,253 குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். முதல்​வ​ராக யோகி பதவி ஏற்​றது முதல் இன்று வரை உபி காவல்​துறை மொத்​தம் 17,043 என்கவுன்ட்டர்​களை நடத்​தி​யுள்​ளது....
பிரதமரின் சுற்​றுப் பயணத்​தின்​போது செய்​தி​யாளர் சந்​திப்​பு​களில் கேள்​வி-ப​தில் நேரங்​கள் ஒதுக்கப்படாதது குறித்து நார்வே ஊடகங்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் பதில் அளித்​துள்​ளது. நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோருடன் பிரதமர் மோடி நடத்திய கூட்டு ஊடகச் சந்​திப்​பின்போது, இரு தலை​வர்​களும் செய்​தி​யாளர்​களின் கேள்வி​களுக்​குப் பதிலளிக்க மாட்​டார்​கள் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இருப்​பினும், பிரதமர் மோடியை வழிஅனுப்​பிய பிறகு, நார்வே பிரதமர் அந்​நாட்டு ஊடகங்​களிடம் தனி​யாகப் பேசி​னார். இதுகுறித்​துப்...
கர்​நாடக மாநிலம் குடகில் யானை​களுக்கு இடையே ஏற்​பட்ட சண்​டை​யில் சிக்கி சென்​னையை சேர்ந்த சுற்றுலா பயணி உயி​ரிழந்த நிலை​யில் படு​கா​யம் அடைந்த மார்த்​தாண்டா யானை சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தது. கர்​நாடக மாநிலம் குடகில் உள்ள துபாரே யானை​கள் முகா​மில் நேற்று முன்​தினம் மார்த்​தாண்​டா, கஞ்​சன் ஆகிய இரு யானைகளுக்கு இடையே சண்டை ஏற்​பட்​டது. இதில் இரு யானைகளும் ஒன்​றையொன்று தாக்​கிக்​கொண்​ட​தில் காயமடைந்​த‌ன. இந்த யானை​களுக்கு இடையே சிக்​கிய சென்​னையை சேர்ந்த சுற்றுலா...
பாகிஸ்​தானின் லாகூரைச் சேர்ந்​தவர் முகமது உஸ்​மான் ஜாட். இவர் லஷ்கர் இயக்​கத்​தில் சேர்ந்து தீவிர​வாத பயிற்சி பெற்று காஷ்மீருக்​குள் நுழைந்​தார். அவர் இங்கு வந்​த​பின், காஷ்மீர் மக்​களின் இயல்பு வாழ்க்கை அவருக்கு ஆச்​சர்​யத்தை அளித்​தது. தீவிர​வாத முகாம்​களில் காஷ்மீர் பற்றி தங்​களுக்கு தவறான தகவல்​கள் தெரிவிக்​கப்​பட்​டதை உணர்ந்​தார். இதனால் அவரது மனம் தீவிர​வாதத்தை பரப்​பும் செயல்​களில் ஈடுபடவில்லை. மேலும் அவருக்கு தலை​யில் விழுந்த வழுக்கை தாழ்வு மனப்​பான்​மையை ஏற்​படுத்​தி​யது. இதனால்...
தமிழக இந்து அறநிலையத் துறைக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவின் இந்து அறநிலையத் துறை சட்டங்களை எதிர்த்து தயானந்த சரஸ்வதி சுவாமி, சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை கடந்த ஆண்டு ஏப்ரலில் விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களை அணுகுமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில்...
உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை, மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். உ.பி.யில் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் சிறப்பு தொழுகையின்போது மசூதிகள் நிறைந்து விடுவது உண்டு. இதனால் முஸ்லிம்கள் மசூதிக்கு வெளியே சாலை அல்லது தெருக்களிலும் நின்று தொழுகை செய்து வந்தனர். இதற்கு உபி அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:...
ஜார்க்கண்டில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில் ஆசிரியர் ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு குதிரையில் செல்கிறார். 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீட்டு வசதி பற்றிய கணக்கெடுப்பு ஜார்க்கண்டில் மே 16-ம் தேதி தொடங்கியது. இதற்காக வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களை மாநில அரசு நியமித்துள்ளது. இந்நிலையில் கர்வா மாவட்டம், துர்கி ஒன்றியம் தட்டிதிரி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்...
கர்​நாடக மாநிலம் குடகில் காவிரி ஆற்​றில் குளித்துக் கொண்​டிருந்த யானை​களுக்கு இடையே ஏற்​பட்ட சண்டை​யில் சிக்கி சென்​னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஜாய்சி உடல் நசுங்கி உயி​ரிழந்​தார். கணவரின் கண் முன்​னால் நிகழ்ந்த இந்த சம்​பவத்​தின் வீடியோ வெளி​யாகி அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யிருக்​கிறது. சென்னை பல்​லா​வரத்தை சேர்ந்த ஜாய்சி (33), தனது கணவர் மற்றும் குழந்​தை​யுடன் கர்​நாடக மாநிலம் குடகிற்கு சுற்​றுலா சென்​றார். இங்கு நேற்று பிற்​பகல் 2 மணி​யள​வில் மடிகேரியை...