‘அப்பா, உங்கள் கனவை நான் முழுமையாக நனவாக்குவேன்…’ – ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் ராகுல் காந்தி நெகிழ்ச்சிப் பதிவு
admin - 0
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினத்தையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது சிறுவயதுப் புகைப்படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தனது தந்தையின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றத் தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் வெளியிட்டுள்ள பதிவில், “அப்பா, நீங்கள் கண்ட கனவின் படி, திறமையான, வளமான...
போலி சான்றிதழ் தொடர்பான ஒரு வழக்கை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறும்போது, “வேலை இல்லாமல் எந்த தொழிலும் செய்ய தகுதியற்ற சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளை போல, ஒட்டுண்ணிகளைப் போல சமூக வலைதளங்களில் எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பின்னர் விளக்கம் அளித்த நீதிபதி சூர்யகாந்த், “போலி சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே குறிப்பிட்டேன். ஒட்டுமொத்த இளைஞர்களை அல்ல” என்று தெரிவித்தார். இந்த...
மெலோனிக்கு முகா பட்டு சால்வை, யுஏஇ தலைவருக்கு மாம்பழங்கள்: உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகள்
admin - 0
ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்துள்ளார்.
இந்தப் பயணத்தில் இந்தியாவின் பாரம்பரியம், வேளாண்மை, மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பரிசுப் பொருட்களை உலகத் தலைவர்களுக்கு அவர் வழங்கினார்.
இத்தாலியின் ரோம் நகருக்கு சென்றபோது, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு, பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பட்டு சால்வைகளை (முகா பட்டு சால்வை, ஷிருய் லில்லி...
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், குடிவாடாவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது.
இந்நிலையில், கடந்தாண்டு ஜனவரி மாதத்தில், மாட்டூரி சுப்பாராவ் எனும் பக்தர், 461 கிராம் எடையில், வைர கிரீடத்தை சுவாமிக்கு காணிக்கை வழங்கினார். இதன் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் கோயிலுக்கு சென்ற மாட்டூரி...
உ.பி. தேர்தலில் மீண்டும் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி; இரு கட்சிகளுடன் சேர மறுக்கும் மாயாவதி
admin - 0
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக முடிவு செய்துள்ளார்.
சமாஜ்வாதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் விரும்புகிறார். இதனால், உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி அமைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவ்விரு கட்சிகளும் கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்தன. ஆனால், குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை. எனினும், 2024 மக்களவைத் தேர்தலில்...
ஈரான் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது. ஹார்முஸ் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் முற்றுகையாலும், சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்படுத்தும் இடையூறுகளும் மாதக்கணக்கில் நீடித்து வருவதால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விலக்கு அளித்தாலும், இது நீண்டகாலம் நீடிக்க வாய்ப்பில்லை. எனவே,...
மேற்கு வங்க மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் மாநிலத்தில் 2,200 கி.மீ. நீளமுள்ள எல்லையில் மீதமுள்ள 600 கி.மீ. தூரத்துக்கு வேலி அமைக்கும் பணிகளை வலுப்படுத்துவதற்காக, 600 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை ஒரு மாத காலத்திற்குள் விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது.
எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எப்) தலைமை இயக்குநருக்கும், மாநில அரசுக்கும் இடையே அடுத்த சில வாரங்களில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு...
இத்தாலி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்லெட் பரிசளித்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ள நிலையில், மோடியின் செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இந்தியர்கள் தலைக்கு மேலேயே ஒரு பொருளாதார சூறாவளி சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ இத்தாலியில் மிட்டாய் விநியோகித்துக் கொண்டிருக்கிறார்.
இங்கே விவசாயிகளும்,...
நீட் 2026 வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகராஷ்டிராவின் பயிற்சி நிலைய உரிமையாளர், கடந்த ஆண்டு 2025 வினாத்தாளையும் கசிய வைத்து ரூ.1,500 கோடி சம்பாத்தித்ததாக கூறப்படுகிறது?
மகராஷ்டிரா மாநிலம், லாத்தூர் நகரில் 'ரேணுகா கேரியர் சென்டர்' எனும் பெயரில் நீட் பயிற்சி நிலையம் உள்ளது. இதன் உரிமையாளரான சிவராஜ் ரகுநாத் மோடேகாவ்ங்கர், இதுபோல் ஒரு தனியார் பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
பிறகு, தானே...
“மக்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்கிறார்; ஆனால் அவரே பல நாடுகளுக்கு பறக்கிறார்” – பிரதமரின் பயணங்கள் குறித்து ராகுல் விமர்சனம்
admin - 0
மக்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார், ஆனால் அவரே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் பறக்கிறார் என்று ராகுல் கூறியுள்ளார்.
உ.பி.யின் ரேபரேலியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: வெளிநாடு செல்லாதீர்கள், தங்கம் வாங்காதீர்கள், மின்சார வாகனங்களை வாங்குங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். ஆனால் அவரே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள...










