காதலர் தினத்தையொட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் சுத்த சைவ உணவகத்தை இன்று திறக்கும் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்துக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர் கங்கனா ரனாவத். இவர் பாஜக எம்.பி.யாக உள்ளார். கடந்த காலங்களில் இவர் கூறும் கருத்துகள் காங்கிரஸ் கட்சியினரின் முக்கிய தலைவர்களை உடனடியாக ஆத்திரமூட்டும் வகையில் அமையும். இதற்காக அவரை பலமுறை காங்கிரஸ் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் கங்கனா,...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரான்ஸ் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள விமானப் படை தளத்தில் தரையிறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் இந்திய...
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்: காவல் துறை, சிஆர்பிஎஃப் படையினருடன் ஆளுநர் அவசர ஆலோசனை
admin - 0
மணிப்பூரில் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து கோரும் மைதேயி சமுதாய மக்களுக்கு எதிராக குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதன்காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மைதேயி, குகி சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்கும்...
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது, எதிர்க்கட்சிகளின் கூச்சல், குழப்பத்துக்கு இடையே புதிய வருமான வரி மசோதாவை...
வக்பு சட்ட திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை தாக்கல்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
admin - 0
க்ஃபு மசோதாவின் கூட்டுக் குழு அறிக்கை மாநிலங்களவையில் நேற்று கடும் அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது. அதிருப்தி கருத்துக்கள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. நாடாளுமன்ற கூட்டுக் குழு மீதான அவதூறு கருத்துக்கள் மட்டுமே நீக்கப்பட்டதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
வக்ஃபு வாரிய சொத்துக்களை சிறப்பாக பயன்படுத்துவதற்காக வக்ஃபு வாரிய சட்டதிருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அது மக்களவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது....
தற்போதைய 18-வது மக்களவையின் 74 பெண் எம்.பி.க்களில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் இருந்து 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போதைய 18-வது மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 74 பேர் பெண்கள். இவர்களில் மேற்கு வங்கத்தில் இருந்து அதிகபட்சமாக 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். ஆண் எம்.பி.க்கள் 469 பேரில் உ.பி.யில் இருந்து அதிகபட்சமாக 73 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
தேர்தலில் பெண்களின்...
சத்தீஸ்கர் மாநில மதுபான ஊழல் வழக்கில், அம்மாநில கலால் துறை சிறப்பு செயலாளரும் மாநில சந்தை கூட்டுறவு நிறுவன இயக்குநருமான அருண் குமார் திரிபாதியை கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திரிபாதி மீதான புகாரில் முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், திரிபாதி மீது வழக்கு தொடர முன்அனுமதி பெறவில்லை எனக் கூறிய...
டெல்லி ஜாமியா நகரில் கடந்த திங்கட்கிழமை ஷாபாஸ் கான் என்பவரை ஒரு வழக்கில் கைது செய்ய போலீஸார் முயன்றனர். அப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானுல்லா கான் தலைமையிலான கும்பல் தங்களை தாக்கியதாகவும் இதில் ஷாபாஸ் கான் தங்கள் பிடியில் இருந்து தப்பி விட்டதாகவும் டெல்லி போலீஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அமானுல்லா கான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் அமானுல்லா கான் முன்ஜாமீன் கோரியிருந்தார்....
உலகெங்கிலும் உள்ள காதலர்கள் இன்று காதலர் தினத்தை மிகவும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இவர்களுக்காகவே ஒரு செடி இந்த பூமியில் உள்ளது. அது காதலர்களின் செடியாக பெயர் சூட்டப்பட்டு புகழ் பெற்று வருகிறது.
காதலர்கள் தங்கள் பெயரை பழங்கால சுவர்கள், மரங்கள் போன்றவற்றில் பொறித்து வைப்பது வழக்கம். இவர்களுக்காகவே ஒரு செடி உள்ளது. இதனை 'வேலண்டைன்ஸ் ட்ரீ’ என்று அழைக்கின்றனர். இந்த செடியின் தாவரப் பெயர் ‘க்ளுசியா ரோஸியா’ ஆகும். அதிக...
சென்னை- விசாகப்பட்டினம்- புதுச்சேரி இடையே ஜுன், ஜூலையில் சுற்றுலா கப்பல் இயக்கப்பட உள்ளது.
விசாகப்பட்டினத்தில் சுற்றுலா முகவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுலா வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது வரும் ஜுன், ஜூலை மாதங்களில் சென்னை- விசாகப்பட்டினம்- புதுச்சேரி இடையே 3 சேவைகள் சுற்றுலா கப்பல் இயக்குவது குறித்து உறுதி செய்யப்பட்டது.
அதன்படி, வரும் ஜூன் 30-ம் தேதி சென்னையில் புறப்படும் கப்பல் ஜூலை 2-ம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும்....










