Google search engine
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரொக்கமாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. மகா கும்பமேளாவில் பங்கேற்க பிரயாக்ராஜ் செல்வதற்காக கடந்த 15-ம் தேதி இரவு புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் ரயில்களுக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு ரயிலில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஏற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 10 பெண்கள், 4 சிறுமிகள், 4 ஆண்கள் என மொத்தம் 18...
எல்லையில் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் முழு ஆற்றல் இந்திய ராணுவத்துக்கு உள்ளது என ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறினார். ஜம்முவில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி ஒன்றை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, எல்லையில் சமீப காலமாக அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு மனோஜ் சின்ஹா பதில் அளிக்கையில், “எல்லையில் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் முழு ஆற்றலுடன்...
சீனா எதிரி நாடு அல்ல என காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ள கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா - சீனா இடையே பல ஆண்டு காலமாக எல்லைப் பிரச்சினை இருந்துவருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்யமுடியாத நிலை இருக்கிறது. மேலும் அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனிடையே, இரு நாடுகளுக்கு இடையே எல்ஏசி எனப்படும் அசல் எல்லை கட்டுப்பாடு...
கோயில் பராமரிப்பு, வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். டெம்பிள் கனெக்ட் நிறுவனம் சார்பில் திருப்பதி ஆஷா அரங்கில் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நேற்று மாலை தொடங்கியது. 19ம் தேதி வரை 3 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த மாநாட்டில், 58 நாடுகளில் இருந்து இந்து, பவுத்த, சமண மற்றும்...
திருப்​ப​திக்கு சுற்றுப்​பயணமாக வந்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னா​விஸ் நேற்று திரு​மலைக்கு சென்​றார். அவரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் மற்றும் அதிகாரிகள் வரவேற்​றனர். அதன் பின்னர், அவர் ஏழுமலை​யானை தரிசனம் செய்​தார். பின்னர் அவருக்கு கோயி​லில் உள்ள ரங்கநாயக மண்டபத்​தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்​கப்​பட்​டது. இதேபோன்று, திருச்​சானூர் பத்மாவதி தாயாரை​யும்பட்னா​விஸ் நேற்று தரிசித்தார். அவருக்கு அதிகாரிகள் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கிகவுர​வித்​தனர். இவருடன் தேவஸ்தான அறங்​காவலர் குழு...
அமெரிக்காவில் இருந்த நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன் கடந்த சனிக்கிழமை இரவு அமிர்தசரஸ் வந்த இரண்டாவது விமானத்தில் பெண்களும் குழந்தைகளும் விலங்கிடப்படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதி செய்தன. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி அமெரிக்காவில் இருந்து...
கர்நாடகாவில் 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. காயமடைந்த அந்த குழந்தையின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன் பலதண்டி நேற்று மண்டியாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மண்டியா அருகேயுள்ள நாகமங்களாவில் மஞ்சுநாத் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அவரது பண்ணையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை...
உத்தராகண்ட்டில் ‘கிரியேட்டிவ் உத்தராகண்ட்’ என்ற அமைப்பு ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தி வருகிறது. இந்த புத்தக கண்காட்சியை டேராடூனில் உள்ள அரசு பள்ளி, ராம்லீலா மைதானம், எச்என்பி கர்வால் மத்திய பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நடத்த கடந்த 2 மாதங்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதலில் அனுமதி அளித்தவர்கள் பிறகு காரணம் கூறாமல் அனுமதியை ரத்து செய்தனர். இது குறித்து புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஹேம் பந்த் கூறுகையில், ‘‘அகில பாரதிய...
மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்திலும் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை அணியும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில கல்வி அமைச்சக துறையின் மூத்த அதிகாரி கூறியுள்ளதாவது: கல்வி துறை அமைச்சர் மதன் திலவர், வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் நேர்மறையான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிக தீவிரமாக உள்ளார். இதன் மூலமாகத்தான் அவர்கள் வாழ்க்கையில் சரியான மதிப்பு மற்றும் கலாச்சாரங்களை...
பாஸ்டேக் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இனி தாமதமான பணம் செலுத்தலுக்கு பயனாளர் கூடுதல் அபராதம் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இணைந்து சுங்க சாவடி கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் வகையிலும், மோசடிகளை தடுத்து தகராறுகளை குறைக்கும் வகையிலும் பாஸ்டேக் பயன்படுத்துவதில் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, குறைந்த...