துரந்தர் படத்தின் 80 சதவீத வருவாயை பாகிஸ்தானின் லியாரி பகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய உளவாளி பாகிஸ்தானில் நடத்தும் உளவு வேலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தி திரைப்படம் துரந்தர். இந்தப் படம் புனைக்கதை என்றாலும், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தல், நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குல் சம்பவங்களை இணைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகனாக ரன்வீர் சிங் உளவாளி...
தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இருப்பதாகக் கூறி, படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பி மத்திய தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து படக்குழு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த தனி நீதிபதி தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
அதை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின்...
காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல; அது ஓர் அழகிய உணர்வு. ஆனால், இன்றைய 'ஜென்-ஸி' தலைமுறை காதலைப் பெரும்பாலும் 'ஆப்'களில் தேடுகிறது. காதல் மலரும் களம் என்பது ஸ்மார்ட்போன் திரைக்குள் அடங்கும் உரையாடலாகச் சுருங்கிவிட்டது. விரல் நுனியில் விருப்பமானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வசதி வந்த பிறகு, இதயங்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்ததா அல்லது அதிகரித்ததா என்கிற கேள்வி மிக முக்கியமானது.
இப்படியொரு நவீன காலக் கேள்வியோடு தொடங்குகிறது ‘நீ ஃபாரெவர்’....
ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே சர்ச்சையாகி, அதன் இயக்குநர், தயாரிப்பாளார், நடிகைகள் மட்டுமல்லாது சம்பந்தப்பட்டோரின் குடும்பத்தினர் வரை அத்தனை பேரும் ‘விமர்சனம்’ என்ற பெயரில் நையப்புடைக்கப்படுவது சினிமா வரலாற்றில் புதிதல்ல. அதுதான் 2025-ல் வெளியான ‘பேட் கேர்ள்’ (Bad Girl) படத்துக்கும் நேர்ந்தது.
வெற்றிமாறன் - அனுராக் காஷ்யப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில், அஞ்சலி சிவராமன், சாந்தி ப்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் நாட்டர்டம் சர்வதேச திரைவிழாவில்...
மேற்குத் தொடர்ச்சிமலை கிராமங்களில் கோரக்கர், காடர், காணி, தோடர், இருளர், காட்டு நாயக்கன் உள்பட 40க்கும் அதிகமான பழங்குடி சமூகங்கள் வசித்து வருகின்றனர். இன்று இவர்களில் கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் தன்னிறைவு அடைந்த பெரும்பாலான குடும்பங்கள் சமவெளிகளை நோக்கியும் மாநகரம் நோக்கியும் குடிபெயர்ந்துவிட்டனர்.
அதேநேரம், பாரம்பரியச் சொத்துரிமை கொண்ட பழங்குடிகளும் மலையகத்தில் தேயிலை உள்ளிட்ட தோட்டப் பயிர்களில் விவசாயத் தொழிலாளர்களாக இருப்பவர்களும் சொந்த மண்ணைப் பிரிந்து வெளியேற மறுத்து பூர்வீக...
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் ஷாருக்கான், மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர்.
அனிருத் இசை அமைக்கும் இப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சில ஆக் ஷன் காட்சிகள் ரீ ஷுட் செய்யப் படுவதாகக் கூறப்படுகிறது. இளம் பார்வையாளர்களை கவரும்...
சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’. லட்சுமி பிரியா, அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். பாத்வே புரொடக் ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரித்துள்ள இப்படத்தை ராம் சக்ரி இயக்கியுள்ளார். ஏப்.3-ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை...
கடந்த ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, இந்தி நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரன்வீர் சிங் பேசுகையில், ‘காந்தாரா’ படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டியை பாராட்டினார்.
மேலும் காந்தாரா படத்தில் இடம்பெறும் சாமுண்டி தெய்வத்தை போன்று நடித்துக் காட்டினார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் ரன்வீர் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு கோரினார்....
ஹாலிவுட்டில் வெளியாகும் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களுக்கே உரிய நுணுக்கமான அறிவியல் கருத்துகள் மட்டுமின்றி மனதைத் தொடும் ஒரு கவித்துவமான அனுபவத்தையும் தந்திருக்கிறது ‘ப்ராஜெக்ட் ஹெய்ல் மேரி’. பில் லார்ட் மற்றும் கிறிஸ்டோஃபர் மில்லர் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம், ஆண்டி வீயரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
ரய்லண்ட் கிரேஸ் (ரையான் கோஸ்லிங்) என்னும் நபர் ஒரு விண்கலத்தில் கண்விழிக்கிறார். அவருக்குத் தனது கடந்த கால நினைவுகள் தெளிவற்றதாக இருக்கின்றன. தான்...
சினிமா என்பது, திரையில் எதைக் காட்டுகிறோம் என்பதோடு எதை காட்டாமல் விலக்குகிறோம் என்பதாலும் அதன் மாயம் உருவாகிறது. அந்த ‘விலகல்’ கலைதான் கட்-அவே ஷாட்.
ஒரு முதன்மைக் காட்சியில் இருந்து (சப்ஜெக்ட் ஏ) சட்டென்று வேறொரு விவரத்துக்குச் (சப்ஜெக்ட் பி) சென்று, மீண்டும் பழைய காட்சிக்குத் திரும்புவது – இந்த இடைச்செருகல்என்ற கதை சொல்லல் மூலம் தாளத்தைக் கட்டுப்படுத்தும், பார்வையாளரின்உளவியலை வழிநடத்தும், எதிர்பார்ப்பை உருவாக்கும் நுட்பமான உத்தி.
திசைத்திருப்பலின் தத்துவம்: எதிர்பார்ப்பின்...










