குமரி: ஜல்லி குடோன் உரிமையாளர் தாக்குதல் 3 பேர் மீது வழக்கு
காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த குடோன் உரிமையாளர் நாராயண மணி (42) நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில், தனது குடோனால் அருகில் வசிக்கும் ஜோதிசுருபன் வீட்டில் பாறை பொடி படிந்ததாக ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக, ஜோதிசுருபன், ஜான் பிரிட்டோ, பிளவர் ஆகியோரால் தாக்கப்பட்டார். மேலும், அவரது...
தக்கலை: பணம் வசூலிப்பவர் மீது தாக்குதல்
கேரளபுரம், கண்டங்கோணம் பகுதியைச் சேர்ந்த சசி (50) என்பவர், தவணை முறையில் பொருட்கள் வழங்கி பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமாருடன் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. சம்பவத்தன்று, தக்கலை காவல் நிலையம் முன்பு சசி பைக்கில் வரும்போது,...
களியக்காவிளை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
வெனிசுலா அதிபரை கைது செய்த அமெரிக்காவைக் கண்டித்து களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பில் மெதுகும்மல் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரக் குழு உறுப்பினர் ராஜூ தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் சிதம்பர கிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்....
கொல்லங்கோடு: கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த நளினாக்க்ஷன் (41) என்பவர் குடும்பப் பிரச்சனை காரணமாக நேற்று முன்தினம் மனைவியின் புகாரில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். இரவில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், நளினாக்க்ஷன் கையை பிளேடாவால் அறுத்துக்கொண்டு, மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொல்லங்கோடு...
நாகர்கோவில் அருகே ஆக்கர் கடையில் தீ விபத்து.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியில் நேற்று இரவு ஒரு ஆக்கர் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கடையில்...
வெள்ளிச்சந்தை: பள்ளி பஸ் – பைக் மோதல்; 2 வாலிபர்கள் பலி
வெள்ளமோடியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்த அஷ்ரத் அலி (21) மற்றும் அஜேஷ் (21) ஆகியோர், சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு திரும்பும்போது, வெள்ளமோடி சந்திப்பு பகுதியில் பள்ளிப் பேருந்து ஒன்று மோதியதில் உயிரிழந்தனர். வெள்ளிச்சந்தை போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு குமரி அரசு...
திருவட்டாறு: தாலுகா நீதிமன்ற அமைக்க அமைச்சரிடம் மனு
திருவட்டாறு தாலுகாவில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சார்பில் அமைக்கப்பட்ட கோரிக்கை குழுவினர், அமைச்சர் மனோ தங்கராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர். சட்டமன்ற கூட்டத்தில் இதற்கான அரசாணை அறிவிக்கப்பட்டு, உடனடியாக நீதிமன்றம் அமைக்க...
குமரி: காரில் வந்த மருமகளை தாக்கிய மாமனார் – வீடியோ வைரல்
மார்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், பிரிந்து வாழும் தனது மருமகள் ஷைலாஜாவை காரில் வழிமறித்துத் தாக்கி முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார்...
திற்பரப்பு: கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே கோதையாற்றில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதலை ஒன்று ஒதுங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று மீண்டும் அதே பகுதியில் மற்றொரு முதலை தென்பட்டது. அப்பகுதி வழியாக சென்ற சிறுவர்கள் இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்....
கன்னியாகுமரி: தவெக மீது காதல்.. திமுகவுடன் கல்யாணம் – நாஞ்சில் சம்பத்
கன்னியாகுமரியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தமிழ்நாட்டில் மாற்றத்திற்கான அரசியல் தேவை என்றும், அதை நிறைவேற்ற வந்தவர்கள் தோற்றுவிட்டதாகவும் கூறினார். விஜய்யின் வருகை இந்திய அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும், ஆனால் திமுகவை...













