அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 20 பில்லியன் டாலர் மதிப்பிலான கனடா பொருட்களுக்கு அமெரிக்கா 50% இறக்குமதி வரியை விதித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, வரும் செப்டம்பர் 8 முதல் அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை விதிக்கப் போவதாகக் கனடா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள இந்த புதிய வரி விதிப்பு, ஹாக்கி மட்டைகள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரையிலான சுமார் 5% கனடா...
அமெரிக்கா​வுட​னான போரில் ஈரானின் வெற்​றியை உலகமே ஒப்​புக்​கொண்டு விட்​ட​தாக அந்​நாட்​டின் அதிபர் மசூத் பெசெஷ்கி​யான் தெரி​வித்​து உள்​ளார். கடந்த ஜூன் 17-ம் தேதி ஈரான்​-அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இந்த 60 நாள் போர் நிறுத்​தம் கடந்த இரு தினங்​களுக்கு முன்பு முடிவுக்கு வந்​தது. ஈரான் மீது மீண்​டும் தாக்​குதல் நடத்​தப்​போவ​தாகவும், கச்சா எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வாயு கப்​பல்​களுக்கு முக்​கிய வழித்​தட​மாக உள்ள ஹார்​முஸ் ஜலசந்​தியை கைப்​பற்​றப்...
கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு விதிக்​கப்​பட்ட காலக்​கெடு​வுக்கு முன்​பாக, ஓர் உடன்​பாட்டை எட்​டத் தவறியதைத் தொடர்ந்​து, அமெரிக்கா​வுட​னான வர்த்​தகப் பேச்​சு​வார்த்​தையை, கனடா பிரதமர் மார்க் கார்னி நிறுத்தி வைத்​துள்​ளார். கனடா​வில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் சுமார் 28 பில்​லியன் டாலர் மதிப்​பிலான பொருட்​களுக்கு இன்று நள்​ளிரவு முதல் 50% வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்​துள்​ளது. இதுதொடர்​பாக, இரு​நாடு​களுக்கு இடையே நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்​படாததால், பேச்​சு​வார்த்​தையை கனடா நிறுத்தி வைத்​துள்​ளது. இதுகுறித்​து,...
அமெரிக்காவின் கலி​போர்​னியா மாகாண சட்டப்​பேரவை, 2026-ம் ஆண்டு நவம்​பர் 8-ம் தேதியை “தீ​பாவளி தின​மாக” அதி​காரப்​பூர்​வ​மாக அங்​கீகரித்து தீர்​மானம் நிறைவேற்​றி​யுள்​ளது. சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் தர்​ஷனா படேல் மற்​றும் ஆஷ் கல்ரா ஆகியோர் இந்​தத் தீர்​மானத்தை முன்​மொழிந்​தனர். இந்​திய அமெரிக்​கர்​கள் மற்​றும் தெற்​காசி​யச் சமூகத்​தினர் மீது ஆழ்ந்த மரி​யாதை செலுத்​தும் இத்​தீர்​மானம், அன்​றைய தினத்​தில் கலி​போர்​னியா மக்​கள் அனை​வரும் பங்​கேற்று மகிழு​மாறு அழைப்பு விடுக்​கிறது. இந்​துக்​கள், சீக்​கியர்​கள், பவுத்​தர்​கள் மற்​றும் ஜைனர்​களால்...
வங்​கதேசத்​தின் புதிய அதிப​ராக ஆளும் வங்​கதேச தேசி​ய​வாதக் கட்​சி​யின் (பிஎன்​பி) மூத்த தலை​வர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் நேற்று தேர்வு செய்​யப்​பட்​டார். வங்​கதேச நாடாளு​மன்​றத்​தில் 23-வது புதிய அதிபரை தேர்ந்​தெடுப்​ப​தற்​கான வாக்​கெடுப்பு நேற்று நடை​பெற்​றது. மொத்​தம் 349 நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் வாக்​களிக்க தகு​திபெற்​றிருந்த இந்த தேர்​தலில் 343 உறுப்​பினர்​கள் தங்​களது வாக்​கு​களை செலுத்​தினர். நேற்று பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடை​பெற்ற இந்த...
வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். வியாழக்கிழமை காலையில், கரையோரமுள்ள வயல்வெளிகளில் நெல் நடும் பணிக்காக 70-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களும், சிறுவர்-சிறுமிகளும் ஒரே படகில் பயணித்துள்ளனர். நதியின் நடுவே சென்று கொண்டிருந்தபோது, சுமை தாங்காமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்தது. தகவலறிந்ததும் அப்பகுதி நீச்சல் வீரர்களும், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து அதிகாரிகளும்...
அரசியல் சதுரங்கத்தில் சில நகர்வுகள் சத்தமில்லாமல் நடக்கும். ஆனால், அதன் அதிர்வுகள் உலகத்தையே உலுக்கிவிடும். வளைகுடா மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து அண்மையில் நேட்டோ பாணி ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டன. ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப் பெரிய சக்தியான எகிப்தையும் இணைத்து கொண்டு, இந்தியாவைச் சுற்றி வலுவான ராணுவ வளையம் அமைக்க பாகிஸ்தான் தீவிரமாக திட்டமிட்டது. ஆனால்,...
காசாவுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்த சம்பவத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கூறி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது. காசா எல்லை முற்றுகையை உடைத்து உதவிகளை வழங்க மே மாதத்தில்'குளோபல் சமுத் ஃப்ளோட்டிலா அமைப்பைச் சேர்ந்த 50 கப்பல்கள் துருக்கியிலிருந்து புறப்பட்டன. சர்வதேச கடல் எல்லையில் 430 தொண்டு ஊழியர்களுடன் பயணித்த இந்த உதவி...
எரித்​திரியா நாட்​டைச் சேர்ந்த சிபு 1 என்ற எண்ணெய் கப்​பல் நேற்று முன்​தினம் ஏமன் கடல் பகு​தி​யில் சென்று கொண்​டிருந்​தது. இந்த கப்​பலில் 16 இந்தியர்கள் உட்பட 20 ஊழியர்​கள் பணி​யில் இருந்​தனர். ஏமன் கரை​யில் இருந்து 136 கடல் மைல் தொலை​வில் சிபு 1 கப்​பல் சென்று கொண்​டிருந்​த​போது ஆயுதமேந்​திய கடற்கொள்​ளை​யர்​கள் கப்​பலில் புகுந்​தனர். அங்​கிருந்து சோமாலிய கடற்​பகு​திக்கு சிபு 1 எண்​ணெய் கப்​பலை அவர்​கள் கடத்​திச் சென்​றனர். இந்த...
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, மருத்துவ சிகிச்சைக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 2023 ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடிலாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை வென்ற முன்னாள் கேப்டனான இம்ரான் கான் சிறையில் மரணப் படுக்கையில் இருப்பதாகத்...