ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடல் கண்ணிவெடிகளைப் பதித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இது அப்பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் நெருங்கிய தொடர்புடைய ‘இஸ்னா’ மற்றும் ‘தஸ்னிம்’ ஆகிய செய்தி நிறுவனங்கள் கடல் கண்ணிவெடிகள் தொடர்பான வரைபடத்தை நேற்று வெளியிட்டன. பாரசீக வளைகுடாவின் குறுகிய நுழைவுப்...
போர் நிறுத்தத்துக்கு நடுவே லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
admin - 0
ஈரானும், அமெரிக்காவும் போர் நிறுத்தத்தை அறிவித்தபின், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் 100 ஏவுகணைகளை ஏவி 254 பேரை கொன்றது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளது. இதனால் சண்டை நிறுத்தத்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது.
போர் காரணமாக மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு திறக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த கெடு கடந்த திங்கள்...
மாபெரும் தியாகத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், மக்களின் ஒற்றுமை காரணமாகவுமே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த போர், இன்று முதல் இரண்டு வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மேற்கொண்ட சமரச முயற்சியை அடுத்து, இந்த போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும்...
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலில் 89 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் முன்னிலையில் இரண்டு வார காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தம் ஈரானுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா...
ஈரான் மீது 2 வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தத்துக்கு இந்தியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின்...
ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகளிடையே நீடித்த போர் இரு வாரங்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரானில் உள்ள இந்தியர்கள் இந்தியத் தூதரகத்தை தொடர்புகொண்டு, அவர்கள் பரிந்துரைக்கும் வழித்தடங்களை பயன்படுத்தி ஈரானிலிருந்து வெளியேற வேண்டும். இதன்மூலம் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற முடியும்.
அதேநேரத்தில் தூதரக அதிகாரிகளை கலந்து ஆலோசிக்காமல் சர்வதேச தரை வழி எல்லையை கடந்து செல்லும் முயற்சியில்...
“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. என்றாலும் அதுவே நடக்கும்” என்று ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், “இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது மீண்டும் ஒருபோதும் உயிர்பெறாது. இது நிகழ வேண்டும் என நான்...
ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சில நிபந்தனைகள் பின்பற்றப்படவுள்ளன.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்குதல் மேற்கொண்டன. அதற்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு...
வங்கத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றால் பாக். பல துண்டுகளாக உடையும்: ராஜ்நாத் எச்சரிக்கை
admin - 0
வரும் காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டால் அதற்குப் பதிலடியாக கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சில தினங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில் கூறும்போது, “பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆத்திரமூட்டும் வகையிலான இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கக் கூடாது.
55 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் இரண்டு துண்டுகளாகப் பிரிந்தபோது...
பாகிஸ்தானில் ஸ்மார்ட் லாக்-டவுன் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மார்க்கெட்களை இரவு 8 மணிக்குள்ளும் ஓட்டல்களை இரவு 10 மணிக்குள்ளும் மூடவேண்டும் என்று பாகிஸ்தானில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சர்வதேச நாடுகளில் உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றம் இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பாகிஸ்தானில் கடந்த...










