மத்திய கென்யாவில் ஒரு பெண்கள் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழந்தனர். மத்திய கென்யாவின் கில்கில் பகுதியில் உதுமிஷி பெண்கள் பள்ளி உள்ளது.
இந்த உறைவிடப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பள்ளியின் மாணவிகள் விடுதியில் இரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 16 மாணவிகள் உயிரிழந்ததாகவும் மேலும் 79 பேர் காயம் அடைந்ததாகவும் அந்நாட்டு கல்வி அமைச்சர் ஜூலியஸ் ஒகாம்பா...
ஈரானின் ஜாஸ்க் துறைமுகம் அருகே கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்.வி.ஹார்பர் பீனிக்ஸ் என்ற எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை தடுத்து நிறுத்தியது.
இதையடுத்து அதில் இருந்த இந்திய மாலுமிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தொடர்ச்சியான தூதரக முயற்சிகள் காரணமாக இந்திய மாலுமிகள் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஈரானால் விடுவிக்கப்பட்ட இந்திய மாலுமிகள்...
ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்த 2 இந்திய வீரர்களுக்கு உயரிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1948-ம் ஆண்டில் ஐ.நா. அமைதிப் படை தொடங்கப்பட்டது. ஐ.நா. சபையின் 120 உறுப்பு நாடுகளை சேர்ந்த 97,000 வீரர்கள் அமைதிப் படையில் பணியாற்றி வருகின்றனர். சமீபத்திய புள்ளி விவரத்தின்படி சுமார் 5,000 இந்திய வீரர்கள் ஐ.நா. அமைதிப் படையில் உள்ளனர். உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு உள்ள காங்கோவில் ஐ.நா. அமைதிப்...
எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே 35-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத் தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவத்தில் சுமார் 45 வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்தது. கல்வான் மோதலால் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் எழுந்தது.
எனினும்...
ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது உறுதியாகி உள்ளது. தற்காப்புக்காக ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது....
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் பிடியை மேலும் விரிவுபடுத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். காசாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 70 சதவீத பகுதியை ராணுவத்தின் நேரடிப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே தற்போதைய இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குக்கரையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய பிரதமர் நெதன்யாகு, "பாலஸ்தீன பகுதியில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான எங்களது ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக காசாவின் 50...
அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதால் சண்டை நிறுத்தம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார். இதற்காக ஈரானுடன் அமெரிக்க குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஒப்படைக்கப்பட வேண்டும் என அதிபர் ட்ரம்ப் எதிர்பார்க்கிறார். ஈரான் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்பட்டு, முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என ஈரான் விரும்புகிறது. இதுகுறித்து...
அமைதி ஒப்பந்தம் செய்யாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
admin - 0
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையில் நேற்று முன்தினம் அந்த நாட்டின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: ஈரானில் அடுத்தடுத்து இரண்டு அரசுகள் மறைந்துவிட்டன. தற்போது 3-வது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
அவர்கள் தற்போதைய சூழலை நன்றாக புரிந்து கொண்டு உள்ளனர். ஈரானில் பணவீக்கம் 250% அதிகரித்து இருக்கிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சீர்குலைந்திருக்கிறது. அவர்களின் கரன்சி மதிப்பிழந்துவிட்டது. அமெரிக்காவின் சிறப்பு தூதர்கள் ஸ்டீவ்...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தரப்பில் இருந்து நம்பகத் தகவல் வெளியாகி உள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தை நீட்டித்து, ஈரான் உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள...
ஈரான் தனது வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை ஒப்படைப்பதற்குக் கைமாறாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் எதுவும் நீக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலிலும், அமெரிக்கா தனது கடுமையான வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டைச் சற்றும் தளர்த்தத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த...










