Google search engine
நேற்று (சனிக்கிழமை) மாலை லண்டன் செல்லும் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டான்காஸ்டரிலிருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு பீட்டர்பரோ நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே...
சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணம் ஹார்​பின் நகரில் உள்ள ஒரு ரெசார்ட்​டில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி ஹாட்​பாட் குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீட்​டர் விட்​ட​முள்ள ஒரு வட்ட வடிவ தொட்​டி​யில் வெந்​நீர் நிரப்​பப்​பட்​டுள்​ளது. அது பார்​வை​யாளர்​களைக் கவர்​கிறது. ஒரு பிரிவு சிவப்​பாக​வும், மற்​றொரு பிரிவு வெள்ளை நிறத்​தி​லும் உள்​ளது அந்த தொட்​டி​யில் சிவப்​புப் பக்​கம் உள்ள தண்​ணீரில் மிள​காய், கத்​தரிக்​காய், முட்​டைக்​கோஸ் ஆகியவை நிரப்​பப்​பட்​டுள்​ளன. வெள்ளை பக்​கம்...
தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57%ல் இருந்து 47% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது. ஆசிய - பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, டொனால்டு ட்ரம்ப்பும் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி...
“இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதாலேயே இருநாடுகளும் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும், மீண்டும் தெரிவித்து வருகிறார். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்துவிட்டது....
பிரதமர் மோடி வலிமை​யான தலை​வர், அவரை எனக்கு பிடிக்​கும். தாமத​மாகி கொண்​டிருக்​கும் வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யா​வும், அமெரிக்கா​வும் கையெழுத்​திடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யுள்​ளார். இந்​தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் நீண்ட தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. ரஷ்​யா​விடம் இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கிய​தால், அமெரிக்கா 50 சதவீத வரி விதித்​தது. அமெரிக்​கா​விடம் இருந்து சோளம் மற்​றும் சோயாபீன்ஸ் ஆகிய​வற்றை இறக்​குமதி செய்ய வேண்​டும் என...
சர்​வ​தேச அமை​திக்​கும் ஸ்திரத்​தன்​மைக்​கும் இந்​தி​யா, ஜப்​பான் உறவு வலு​வாக இருப்​பது அவசி​யம் என்று புதி​தாக பதவி​யேற்​றுள்ள ஜப்​பான் பிரதமர் சனே தகைச்​சி​யிடம் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். ஜப்​பான் நாட்​டின் புதிய மற்​றும் முதல் பெண் பிரதம​ராக சனே தகைச்சி கடந்த 21-ம் தேதி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். இதையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்​திர மோடி ஏற்​கெனவே எக்ஸ் தளத்​தில் வாழ்த்து தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், கடந்த சில தினங்​களுக்கு முன்பு சனே தகைச்சி பிரதம​ராக...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்க ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார். ஆசியாவில் பயணம் மேற்கொண்டு வரும் டொனால்டு ட்ரம்ப், மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு, தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட அவர் மத்தியஸ்தம் செய்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் சென்ற ட்ரம்ப், அந்நாட்டின் புதிய...
ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் எதிரொலியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாதுகாப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து, காசா பகுதியில் உடனடியாக பலத்த தாக்குதல்களை நடத்துமாறு...
பாகிஸ்​தானும் ஆப்​கானிஸ்​தானும் கடந்த சில ஆண்​டு​களாக எல்​லை​யில் அவ்​வப்​போது போரில் ஈடு​பட்டு வருகின்றன. கடந்த மாதம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கத்​தார் நாட்​டில் பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான் இடையே நடைபெற்ற அமைதி பேச்​சு​வார்த்தையின்​படி தற்​காலிக போர் நிறுத்​தம் ஏற்பட்​டது. அடுத்த கட்​ட​மாக துருக்கி நாட்​டின் இஸ்​தான்​புல் நகரில் கடந்த சில நாட்​களாக இரு நாடு​கள் இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இதில் இது​வரை சுமுக உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. பேச்​சு​வார்த்தை...
யுஏஇ லாட்டரியில் இந்திய ருக்கு ரூ.240 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் (யுஏஇ) சேர்ந்த தி கேம் எல்எல்சி என்ற நிறுவனம் பல்வேறு வகையான லாட்டரிகளை நடத்தி வருகிறது. இந்த யுஏஇ லாட்டரியின் குலுக்கல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது இதில் முதல் பரிசு பெற்றவரின் விவரம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதன்படி இந்தியாவைச் சேர்ந்த அனில் குமார் பொல்லாவுக்கு (29), ரூ.240 கோடி முதல் பரிசு...