ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்குவரத்து மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேன்சர் மருந்துகள், இன்சுலின், உயிர்க் காக்கும் மருந்துகளின் விநியோகம் தாமதப்படுவது மட்டும் அல்லாமல் அவற்றின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. இதனால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த...
அமெரிக்க ராணுவத்தை அனுமதிக்க கூடாது: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் அறிவுறுத்தல்
admin - 0
பாதுகாப்பு, அமைதி மற்றும் வளர்ச்சியை விரும்பினால், அமெரிக்க ராணுவம் தங்கள் நாட்டில் இருந்து செயல்பட வளைகுடா நாடுகள் அனுமதிக்க கூடாது என ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் கூறியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் மையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இங்கிருந்து அமெரிக்க...
மேலும் 2 எல்பிஜி டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜல சந்தியை ஈரான் மூடியது. கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 5-ல் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது. இதை ஈரான் மூடியதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து வட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது....
ஈரான் போரில் ரூ.29,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க ராணுவ சொத்துகள் சேதம்: பென்டகன் அதிகாரி தகவல்
admin - 0
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் அமெரிக்காவின் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.29 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரான் உடனான மோதல் தொடங்கிய முதல் மூன்று...
ஈரான் மீது தரைவழியாக தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாராகி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது.
இந்த போரில் ஈரானின் ராணுவ தளங்கள், அணு சக்தி தளங்கள், எண்ணெய் வயல்கள் என 10,000-க்கும் மேற்பட்ட இடங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி உள்ளன. இதற்கு பதிலடியாக...
குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனை குவைத்தின் மின்சார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அதேநேரத்தில் தங்கள் நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள தப்ரிஸ் பெட்ரோகெமிக்கல் அமைப்பின் மீது எதிர்தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும்...
ஈரான் ராணுவ ஏவுகணைகளில் ‘‘இந்திய மக்களுக்கு நன்றி’’ என்ற வாசகம் எழுதப்பட்டு இருக்கிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நடைபெறும் போரில் இந்தியா நடுநிலை வகிக்கிறது. மேலும் போரை நிறுத்த இந்திய அரசு சமரச முயற்சியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 4-ம் தேதி இலங்கை அருகே சென்று கொண்டிருந்த ஈரானின் ஐஆர்ஐஎஸ் லாவன் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி ஏவுகணை தாக்கியது. இதில் 87 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து...
மேற்கு ஆசியப் போருக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் கூறியதை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘எக்ஸ்' தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது. அந்தப் பதிவில், “இந்தியாவுடனான எங்களின் அற்புதமான உறவு தொடர்ந்து வலுப்பெறும். பிரதமர் மோடியும் நானும் (ட்ரம்ப்) காரியங்களை சிறப்பாக முடிக்கும் இரு தலைவர்கள். இத்தகைய செயல்திறன் பலருக்கு இருப்பதில்லை’’ என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேற்கு...
ஈரான் பள்ளி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி 175 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொன்றது தவறான தாக்குதல் அல்ல போர்க் குற்றம் என்று ஐ.நா.வில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறினார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்தன. அப்போது ஈரானின் மினாப் நகரில் உள்ள தொடக்கப் பள்ளி மீது டொமஹாக் ஏவுகணை மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது....
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. சுமார் 71 கோடி பேர் வைரஸால் பாதிக்கப்பட்டனர். சுமார் 70 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வகையை சேர்ந்த பிஏ 3.2 என்ற கரோனா வைரஸ் பரவி வருகிறது....










