Google search engine
பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான் இரு நாடு​களும் எல்​லை​யில் மாறி மாறி தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதனால் ஆப்​கானிஸ்​தான் மீது பகிரங்க போர் என்று பாகிஸ்​தான் அமைச்​சர் அறி​வித்​துள்​ளார். கடந்த 2021-ம் ஆண்டு ஆப்​கானிஸ்​தான் அரசை தலி​பான்​கள் கைப்​பற்​றினர். அப்​போது முதலே பாகிஸ்​தான் - ஆப்​கானிஸ்​தான் இடையே மோதல் நடை​பெறுகிறது. பாகிஸ்​தானில் நடை​பெற்ற சில தீவிர​வாத தாக்​குதல்​களுக்கு தலி​பான்​கள்​தான் காரணம் என்று பாகிஸ்​தான் குற்​றம் சாட்​டியது. அதற்கு பதிலடியாக ஆப்​கன் எல்​லை​யில் பாகிஸ்​தான்...
க​னடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்​கள் அரசு முறை பயண​மாக இன்று இந்​தியா வரு​கிறார். இந்​தி​யா - கனடா இடையே நெருங்​கிய நட்​புறவு நீடித்து வந்​தது. ஆனால் கனடா முன்​னாள் பிரதமர் ஜஸ்​டின் ட்ரூடோ ஆட்சிக்காலத்​தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி கனடாவை சேர்ந்த காலிஸ்​தான் தீவிர​வாதி ஹர்​தீப் சிங் நிஜ்ஜார் மர்​ம​மான முறை​யில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இந்த கொலை​யில் இந்​திய தூதரக அதி​காரி​களுக்கு தொடர்பு...
ஐ.நா. மனித உரிமை கவுன்​சிலின் 61-வது கூட்டத்​தில் காஷ்மீர் விவ​காரம் குறித்து பேசிய பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்து தவறான தகவல்​களை கூறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகை​யில் இந்​திய பிர​தி​நிதி அனுபமா சிங் பேசி​ய​தாவது: காஷ்மீரில் கடந்​தாண்டு திறக்​கப்​பட்ட உலகின் மிக உயர​மான ரயில் பாலம் போலி என்​றால், பாகிஸ்​தான் மாயா ஜால உலகில் இருப்​பது போல் உள்​ளது. பொறாமை காரண​மாக பாகிஸ்​தான் தொடர்ச்​சி​யாக பொய் தகவல்​களை...
மறைந்த புகழ்​பெற்ற வான் இயற்​பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், 2 இளம்​பெண்​களு​டன் இருக்கும் புகைப்​படம் வெளி​யாகி சர்ச்​சையை ஏற்படுத்தியுள்​ளது. சிறுமிகள் மற்​றும் இளம்​பெண்​களை கடத்தி பணக்​காரர்​களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்​தவர் அமெரிக்க தொழில​திபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்​காக அவர் தனி தீவையே வாங்கி வைத்​திருந்​தார். கடந்த 2019-ல் கைதாகி சில மாதங்​களி​லேயே நியூ​யார்க் சிறை​யில் அவர் தற்​கொலை செய்து கொண்​டார். இதனிடையே, எப்​ஸ்​டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரை​யாடல்​கள், புகைப்​படங்​கள்,...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் அந்நாட்டின் இரண்டு மாகாணங்கள் மீது வெள்ளிக்கிழமை அன்று வான்வழி தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஆப்கானிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். முன்னதாக, பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலுக்கு வியாழக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 55 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் தெரிவித்தது. மேலும், தங்கள் நாட்டு வான் பரப்புக்குள் நுழைந்த பாகிஸ்தான்...
இலங்​கை​யில் கடந்த 2019 ஏப்​ரல் 21-ம் தேதி ஈஸ்​டர் ஞாயிறு அன்று தேவால​யங்​கள், நட்​சத்​திர ஓட்​டல்​களில் தற்கொலைப் படை தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் 11 இந்தியர்கள் உட்பட 270-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர். ஐஎஸ்​ஐஎஸ் உடன் தொடர்​புடைய உள்ளூரைச் சேர்ந்த தேசிய தவ்​ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்பு தாக்​குதல் நடத்​தி​ய​தாக தெரிய​வந்​தது. இந்த வழக்​கில் முன்​னாள் உளவுத் துறை தலை​வர் சுரேஷ் சாலே நேற்று முன்​தினம் கைது செய்​யப்​பட்​டார். ஈஸ்​டர்...
இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவளிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார். இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அப்போது இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான வரலாற்று ரீதியான பிணைப்பு குறித்து தெரிவித்தார். “கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த மற்றும்...
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானுடன் நாம் போருக்குச் செல்வதை ஜெனரல் டேனியல் கெய்ன் எதிர்க்கிறார் என்று போலி செய்தி ஊடகங்களில் இருந்து பல கதைகள் பரவி வருகின்றன. இது 100%...
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார். இதன்மூலம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் போக்கால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்....
எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையில் சிக்கிய மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், கேட்ஸ் அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகளை ஒரு பெரிய தவறு என்றும் அவர் கூறியுள்ளார். தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கோப்புகள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. எப்ஸ்டீனுடன் தொடர்பு இருப்பதாகக் காட்டப்படும் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் உள்ளிட்ட பலரில் பில்கேட்ஸும் ஒருவராக உள்ளார். எப்ஸ்டீன் கோப்புகளில் மின்னஞ்சல்கள்,...