கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சார்ந்த 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
மேலும், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சிஎம்டிஏ சார்பில் ரூ.1.61 கோடி நவீன...
சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஒரு கோயில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி, 7 நாட்களில் அதை இடிக்க வேண்டுமென மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் கடந்த ஆண்டு கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் தரப்பில் ஜெயா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘தங்களது தரப்பில் விளக்கம் அளிக்க எந்தவொரு கால அவகாசமும் அளிக்காமல், கோயில் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பதை கண்காணிப்பு...
ஆசிரியர் சிறப்பு தகுதித்தேர்வில் எம்பிசி பிரிவினருக்கும் சிறப்பு மதிப்பெண் சலுகை: ராமதாஸ் வலியுறுத்தல்
admin - 0
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக டிஆர்பி சார்பில் ஜூலை 4, 5 தேதிகளில் சிறப்பு தகுதித்தேர்வு நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் உள்ள தேர்ச்சி மதிப்பெண் நடைமுறை ஆசிரியர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. 2003, 2004 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் மூலம் சத்துணவு அமைப்பாளர்கள் ஆசிரியர்களாக பணி ஈர்ப்பு செய்யப்பட்டபோது, அனைவருக்கும் பொதுவான ஒரே குறைந்தபட்ச மதிப்பெண் மட்டுமே தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் தற்போது...
“கழகத்தினர் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தூக்கம் மறந்து உழைக்க வேண்டும்” என சூரியக் கட்சி தலைவர் சூளுரைத்து வரும் நிலையில், ‘சத்திய சோதனை’ தலைவரின் பெயர் கொண்ட மாண்புமிகுவானவர் தனது துறை சார்ந்த நிகழ்ச்சிக்கே தாமதமாக வந்து சூரியக் கட்சி தலைவரின் சுட்டெரிக்கும் பார்வைக்கு ஆளானாராம்.
போதாதுக்கு, “புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் நடிகரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என வலை தொலைக் காட்சி ஒன்றுக்கு வம்படியாய் பேட்டியளித்ததும் மாண்புமிகுவுக்கு உண்மையிலேயே...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அவரை புகழ்ந்து பேசியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி: “ஜெயலலிதா பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான...
ஆவடி பகுதியில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 11 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, நுகர்வோருக்கு ரூ.8.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சென்னை மையம், வடக்கு, தெற்கு, மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் கடந்த 11-ம் தேதி ஆவடி பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 11 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, மின் நுகர்வோருக்கு ரூ.8,77,593...
கடந்த 5 ஆண்டுகளில் அறநிலையத் துறைக்கு ரூ.1,190 கோடி நிதி: 4,332 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தியதாக அரசு பெருமிதம்
admin - 0
வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.1,190 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2021 மே 7-ம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது தொடங்கி 2026 பிப்.22 (நேற்று) வரை, 20 முதல் 400 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாத 4,332 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
மொத்தம்...
தனியார் இடத்தில் சார்ஜிங் மையம் அமைக்க நில உரிமையாளர்கள், நிறுவனங்களை ஒருங்கிணைக்க இணையதளத்தை மின்வாரியம் ஏற்படுத்தவுள்ளது. நாடு முழுவதும் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க மின்சார வாகனங்களைப் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தின.
இதற்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
இந்த வாகனங்களுக்கு எளிதான சார்ஜிங் வசதி கிடைக்க மாநகரில் தலா 3...
மஞ்சள் தெளித்து ‘தீட்டு கழித்த’ பாஜக மகளிர் அணி – புதுச்சேரி போலீஸில் காங். மகளிர் அணி தலைவி புகார்
admin - 0
காங். மகளிர் அணி தலைவிக்கு எதிராக, மஞ்சள் தெளித்து தீட்டு கழித்ததாக புதுவை பாஜக மகளிரணி சார்பில் சமூக வலை தளங்களில் வீடியோ பரவி வருகிறது. இது தன்னை அவமான படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் மகளிரணி தலைவி போலீ ஸில் புகார் அளித்துள்ளார்.
டெல்லியில் நடந்த ஏஐ மாநாட்டில், இளைஞர் காங்கிரஸார் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனை கண்டித்து புதுச்சேரியில் பாஜக இளை ஞரணி சார்பில் காங்கிரஸ் கட்சி தலைமை...
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பேசிய தன்னார்வலர், ‘தமிழக அரசு ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை வழங்கியது சரியா?, தவறா? என மாணவிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த திட்டம் சரி என்று ஒரு மாணவி மட்டுமே கையை உயர்த்தியுள்ளார். மற்ற மாணவிகள் தவறு என்று கூறி...









