கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் தமிழகம்: தமிழக அரசு பெருமிதம்
admin - 0
‘கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகம் உருவாகியுள்ளது’ என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில், இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழகம் உருவெடுத்துள்ளது.
இளைஞர்களை ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தவும், சிதறிக் கிடக்கும் இளைஞர்களின் ஆற்றல்களைத் திரட்டவும், அவர்களை மனஉறுதி படைத்தவர்களாக உருவாக்கும் பெரும் பொறுப்பை நிறைவேற்றும் வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சிறப்பான...
2047-க்குள் வளர்ந்த இந்தியா இலக்கை எட்ட உயர்கல்வி, ஆராய்ச்சிக்கு தேசிய அளவில் முன்னுரிமை: பிரதமருக்கு பாலகுருசாமி கடிதம்
admin - 0
“2047-க்குள் வளர்ந்த இந்தியா” இலக்கை எட்ட வேண்டுமானால், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு தேசிய அளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் பாலகுருசாமி பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா தனது வரலாற்றில் இன்று மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது.
சுதந்திரத்தின்...
ரயில் பயணிகளிடம் காணாமல் போன ரூ.62.91 லட்சம் மதிப்புள்ள 205 செல்போன்களை, ரயில்வே பாதுகாப்பு படை ஒப்படைத்துள்ளது. மத்திய தொலை தொடர்பு துறையில், ரயில்வே பாதுகாப்பு படைக்கு (ஆர்பிஎஃப்) சில அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில்களில் காணாமல் போகும் பயணிகளின் செல்போன்களை உடனுக்குடன் மீட்டு, ஒப்படைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகளிடம் திருடு அல்லது காணாமல் போன செல்போன்கள் குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை உரிய புகார்களை பெறும்.
இதையடுத்து, சென்ட்ரல்...
எழும்பூர் நிலையத்தில் நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிக்க மின் ஏலம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு
admin - 0
எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில், நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிப்பதற்கும், இயக்குவதற்குமான மின் ஏல அறிவிப்பை சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பயணிகளின் வசதிக்காக இரண்டு பிரம்மாண்டமான பல்நோக்கு வணிக வளாக கட்டிடங்கள்கட்டப்பட்டுள்ளன.
காந்தி - இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை ஆகிய இரு புறங்களிலும் அமைந்துள்ள இந்தக் கட்டிடங்களில் வணிக அங்காடிகள் மற்றும் நவீன அடுக்குமாடி வாகன...
முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆருக்கு காட்பாடியில் ரூ.3 கோடியில் கோயில் கட்டப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில் மும்மத அடையாளங்களுடன் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு ரூ.3 கோடி செலவில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
ராமச்சந்திரா அறக்கட்டளையின் நிர்வாகி டி.ஆர்.முரளி சார்பில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கோபுரங்கள் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மும்மதங்களை அடையாளப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கோயிலுக்குள் ரூ.17 லட்சம் மதிப்பில் ஐம்பொன்னாலான எம்ஜிஆரின்...
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கும் விழா நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.28.25 கோடியில் மேம்படுத்தப்பட்ட முரசொலி மாறன் பூங்கா, கலைஞர் நூற்றாண்டு நாணயம் நினைவுத் தூண், முதல்வர் படைப்பகம், நவீன நூலகம், கொளத்தூர் நவீன அங்காடி ஆகியவற்றை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் ரூ.4.15 கோடியில் புதிய பள்ளிக்...
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை: அகர்வால்ஸ் மருத்துவமனை ஏற்பாடு
admin - 0
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை பிராந்தியத் தலைவர் மருத்துவர் சவுந்தரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெண்கள் தான் சமூகத்தின் அடித்தளம்.
அவர்களுக்கு பேறு காலத்தின் போதும், மன அழுத்தம் ஏற்படும் போதும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை கவனிக்கவில்லை எனில், பார்வையில் தெளிவின்மை, இரட்டை பார்வை, பார்வைத் திறன் பாதிப்புகள் உள்ளிட்டவை உருவாகும். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளதால், சங்கிலித் தொடர் போல உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயரும்.
பெட்ரோலியம் சார்ந்த அனைத்து எண்ணெய் பொருட்களின் மீதும் இதன் தாக்கம் இருக்கும்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தும் போர் காரணமாக சிலிண்டர், பெட்ரோல் உள்ளிட்ட எந்த எரிபொருளுக்கும் தட்டுப்பாடு, இருக்காது என பாஜகவினர் பேசி வந்த...
மூத்த பத்திரிகையாளர் பிடிஐ ராமசாமி, சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிடிஐ செய்தி நிறுவனத்தின் முன்னாள் மண்டல மேலாளரும், மூத்த பத்திரிகையாளருமான எஸ்.ராமசாமி (74), சென்னையில் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
பத்திரிகையாளர் வட்டாரங்களில் ‘எஸ்.ஆர்’ என்று அழைக்கப்பட்ட இவர், 1978-ம் ஆண்டு பிடிஐ செய்தி நிறுவனத்தின் இணைந்து, 30 ஆண்டுகள் பணியாற்றியவர்.
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அரசியல் நகர்வுகளை பதிவு செய்தவர். மறைந்த...
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கர்க் அதிவேக ஏசி மின்சார ரயில் மூலமாகசோதனை ஓட்டத்தை மேற்கொண்டார். இது வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் (மேம்பால ரயில் வழித்தடம்) தடத்தை பரங்கிமலை வரை 5 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கும் பணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து, இத்தடத்தில் கடந்த ஆண்டு...










