Google search engine
சென்னை அண்ணா சாலை அருகே எல்லீஸ் சாலையில் உள்ளது எல்லீஸ்புரம். இங்குள்ள வீடுகள் மிகவும் பழுதாகிவிட்டதால் அவற்றை இடிக்க தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளும், பணியாளர்களும் நேற்று வந்தனர். வீடுகளை இடிக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையும் மீறி வீடுகளை இடிக்க முற்பட்டபோது ஆத்திரமடைந்த மக்கள் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரும், அதிகாரிகளும் சமரசம் பேசியதையடுத்து மக்கள்...
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை....
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற தாது மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சுங்கத்துறை கூட்டாக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளிய தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ. 5,832 கோடியை ராயல்டி இழப்பீடாக தமிழக அரசு வசூலிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 2000 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி...
இந்திய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் எப்படி இருக்கிறதோ அதுபோலத்தான் இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளுக்கெல்லாம் சென்னை மாநகராட்சி முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை, சென்னைக் குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் ரூ.1,893 கோடியில் முடிவுற்ற 28 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 87 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்...
சென்னை மின்ட் பகுதியில் நார்த் வால் சாலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பொதுக்கழிப்பிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 53-வது வார்டு, மின்ட் பகுதியில் உள்ள நார்த் வால் பகுதியில் தலா 9 இருக்கைகளுடன் ஆண் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக இரு பொதுக்கழிப்பிடங்கள் இயங்கி வருகின்றன. இந்த பொதுக்கழிப்பிடத்தை இடிக்க மாநகாரட்சி அதிகாரிகள் நேற்று...
கோவை மண்டலத்தை இம்முறை எப்படியாவது அதிமுக-விடம் இருந்து கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக காய் நகர்த்துகிறார் முதல்வர் ஸ்டாலின், ஆனால், கோவை மாநகராட்சி துணை மேயருக்கு எதிராக திமுக-வினரே கிளப்பும் சர்ச்சைகளைப் பார்த்தால் முதல்வரின் கனவு கனவாகவே போய்விடும் போலிருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள். கோவை மாநக​ராட்​சி​யின் 92-வது வார்​டானது முன்​னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி​யின் சொந்த வார்டு. சட்டமன்றத் தேர்​தலில் தனது ‘சக்தி’யை திரட்டி கோவை மாவட்​டத்​தின் 10...
மற்ற மாவட்டங்களில் போலீஸார் அப்படி இப்படி இருந்தாலும் தலைநகர் சென்னையில் பணியாற்றும் போலீஸார் கூடுதல் எச்சரிக்கையுடனும் முன் ஜாக்கிரதையுடனும் இருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் சின்னதாய் ஒரு தவறு செய்தாலும் உடனடியாக தலைமையிடத்தின் கவனத்துக்கு சென்று அதிரடி நடவடிக்கைக்கு ஆளாவார்கள். ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை, இப்போது தலைநகர் போலீஸார் தான் வழிப்பறி, பாலியல் துன்புறுத்தல், தகாத உறவு என அனைத்துவிதமான சட்டவிரோத காரியங்களிலும் ஈடுபட்டு கைதாகி காவல்துறையை களங்கப்படுத்தி வருகிறார்கள். இதற்கு...
வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வு பாடலை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார். தூய்மை பாரத இயக்கத்தை தமிழகத்தில் மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, வீடு, வீடாக சென்று பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிப்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கவும், திடக்கழிவுகளை அவரவர் இல்லத்திலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பை...
கணிதம் மற்றும் அறிவியல் துறையை தேர்வு செய்து படிப்பதற்கும், அதில் ஆய்வுகளை மேற்கொள்ளவும் மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டுமென விண்வெளி அறிவியல் ஆய்வு மாநாட்டில் விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் வலியுறுத்தினர். தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சொசைட்டி (டாஸ்), தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சென்னை கணித அறிவியல் நிறுவனம், ராமன் ஆராய்ச்சி பவுண்டேஷன், பெங்களூரில் உள்ள இந்திய வான் இயற்பியல் நிறுவனம் ஆகியவை சாா்பில், இளைஞருக்கான வானவியல் மற்றும்...
வேங்​கைவயல் விவகாரத்​தில் திமுக அரசு தோல்​வி அடைந்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.​முருகன் விமர்சித்துள்ளார். தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்​கூட்டம், சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் நேற்று நடைபெற்​றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.​முருகன் பேசி​ய​தாவது: மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது ஏழை எளிய மக்களுக்கான பட்ஜெட். இளைஞர்​கள், விவசா​யிகள், மகளிருக்கான பட்ஜெட். 2047-ம் ஆண்டு நாடு வல்லரசாக இந்த பட்ஜெட் அடித்​தளமாக அமைந்​துள்ளது. கடந்த...