Google search engine
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தலைமையிலான அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவின் புதன்கிழமை நடந்து முடிந்த தேர்தலைப் பொறுத்தவையில், மகாயுதி கூட்டணியில் பாஜக 149, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி) 81, தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) 59 தொகுதிகளில் போட்டியிட்டன. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ் 101, சிவசேனா (உத்தவ்...
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகள் இணைந்து கூட்டுப் பயிற்சியை நடத்தின. இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் அதுல் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகள் இணைந்து அருணாச்சல பிரதேசத்தின் ஷி-யோமி மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாள் கூட்டுப் பயிற்சியை வெகு சிறப்பான முறையில் நடத்தின. இந்தப் பயிற்சிக்கு...
பஞ்சாப் மாநிலம் கிதர்பஹா சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தினங்களுக்கு முன்பு இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வரும் ஜலந்தர் மக்களவை தொகுதி எம்.பி.யுமான சரண்ஜித் சிங் சன்னி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பெண்கள் மற்றும் இரு சமுதாயத்தினர் குறித்து இழிவாக கருத்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, மகளிர் அமைப்பினரும் ஆம் ஆத்மி, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும்...
கேரள மாநிலம் பாலக்​காடு சட்டப்​பேரவை தொகுதி இடைத்​தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி​ சித்ரா நேற்று கூறிய​தாவது: போலி வாக்​காளர்கள் மற்றும் வாக்​காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் செய்​ததாக எழுந்த புகார்​களின் அடிப்​படை​யில், விசாரணை நடத்​தப்​பட்டு, அத்தகைய நபர்​களின் பட்டியல் தயாரிக்​கப்​பட்​டது. இவர்​களின் பட்டியலை வாக்​குச் சாவடி தலைமை அதிகாரி​களிடம் ஒப்படைத்​துள்ளோம். பட்டியலில் உள்ளவர்கள் வாக்​களிக்க முன்​வந்​தால், அவர்களை வாக்​களிக்க அனும​திப்​ப​தற்கு முன் அவர்​களின் புகைப்​படம் மற்றும் எழுத்​துப்​பூர்வ...
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மேந்திர குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சித்ரதுர்காவில் உள்ள ஹொலேகெரே சாலையில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று அங்கு சோதனை நடத்தியதில் ஷேக் சைஃபர் ரோஹ்மான் (33), முகமது சுமன் ஹூசேன் அலி (34), அன்வர் மஜ்ருல் (24), அஜில் ஷேக் (25), முகமது சாகிப் (31), ஃபகத் சனோவர் (35)...
ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் மூன்றாவது பெரிய குடிசைப் பகுதியாக மும்பையின் தாராவி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் உருவான இதன் வரலாற்று பின்னணியில் இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் ஒன்றாக, 1896-ல் உலகம் முழுவதிலும் பல உயிர்களை பறித்த பிளேக் நோய் தமிழகத்திலும் பரவியது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட தமிழர் குடும்பங்கள் மும்பை புறநகரில் வந்து தங்கியுள்ளன....
தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டம், எம்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த வினோத்- லாவண்யா தம்பதியின் ஒரே மகள் பிரஹர்ஷிகா (4). இந்நிலையில் லாவண்யா நேற்று முன்தினம் க்ரூப்-3 அரசுப் பணிக்கான தேர்வு எழுதச் சென்றார். அப்போது, சிறுமி பிரஹர்ஷிகா தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்தார். லாவண்யா தேர்வு எழுதிவிட்டு மதியம் 1 மணிக்கு...
ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் இன்று 2-ம் கட்ட சட்டப்​பேர​வைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் மொத்தம் 81 சட்டப்​பேர​வைத் தொகு​திகள் உள்ளன. கடந்த 13-ம் தேதி முதல்​கட்​டமாக 43 தொகு​தி​களுக்கு தேர்தல் நடைபெற்​றது. இரண்​டாம் கட்டமாக இன்று 38 சட்டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு வாக்​குப்​ப​திவு நடைபெற உள்ளது. இந்த தொகு​தி​களில் மொத்தம் 1.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 528 வேட்​பாளர்கள் களத்​தில் உள்ளனர். 15 தொகு​தி​களில் இடைத்​தேர்தல்: ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் ஜார்க்​கண்ட் முக்தி...
மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மகாயுதி கூட்டணியில் பாஜக 149,...
அமெரிக்​கா​வின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் ஜிசாட் என்-2 செயற்​கைக்​கோள் நேற்று விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்​டது. இந்திய விண்​வெளி ஆய்வு நிறு​வனமான இஸ்ரோ, நூற்றுக்​கணக்கான செயற்​கைக்​கோள்களை வெற்றிகரமாக விண்​ணில்நிலை நிறுத்தி உள்ளது. உள்நாடு மட்டுமின்றி சுமார் 34 நாடு​களின் 424 செயற்​கைக்​கோள்​களை​யும் இஸ்ரோ விண்​ணில் செலுத்தி உள்ளது. இந்த சூழலில் இந்தியா​வின் தகவல் தொடர்​புக்காக இஸ்ரோ சார்​பில் ஜிசாட் என்-2 என்ற செயற்​கைக்​கோள் தயாரிக்​கப்​பட்​டது. இது 4,700...